என் மலர்
மதுரை
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
- மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை
பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகம் முழுவதும் வசித்துவரும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
எனவே பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்தும் சிறப்பு பஸ்கள் வருகிற 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
சென்னையில் மதுரைக்கு 280 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இது தவிர திருச்சிக்கு 135, திருப்பூ ருக்கு 80, கோவைக்கு 120, நெல்லைக்கு 35, நாகர்கோவி லுக்கு 35, திருச்செந்தூருக்கு 30, மற்றவை 175 உள்பட 610 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதேபோல பொது உள்ளது.
இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதனை பொது மக்கள் பயன்படுத்தி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளலாம்.
பயணிகளுக்கு வழிகாட்ட வும், சிறப்பு பஸ்களை கண்காணிக்கவும், முக்கிய பஸ் நிலையங்களில் போக்குவரத்து கழக அலு வலர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பயண சீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
- குடிநீர் தொட்டி அமைக்க கோரிக்கை
- சிந்தாமணி 89-வது வார்டில் சுமார் 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
மதுரை
மதுரையில் சிந்தாமணி நீர் மேலாண்மை சங்க தலைவர் முனியாண்டி, கிராம விவசாய சங்க தலைவர் மும்மூர்த்தி மற்றும் பலர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
சிந்தாமணி 89-வது வார்டில் சுமார் 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு தற்போது அம்ரூத் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக் கப்பட உள்ளது. இதனால் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு எந்த தொந்தரவும் கிடையாது.
இது எங்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கும். இந்த இடத்தில் எந்த மடையும் கிடையாது. சிலர் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கும், அந்த இடத்துக்கும் சம்பந்தமும் கிடையாது. இந்த இடம் முழுமையாக அரசு புறம்போக்கு நிலமாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு சிந்தாமணி கிராமத்தில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் தேக்க தொட்டியை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.
- நாகமலை புதுக்கோட்டை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை
மதுரையில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.
மதுரை ஏற்குடியைச் சேர்ந்தவர் பானுமதி (வயது 55). சம்பவத்தன்று இரவு இவர் மதுரை-தேனி மெயின் ரோட்டில் நடந்து சென்றார். வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.
இதில் பானுமதிக்கு தலையில் அடிபட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நாகமலை புதுக்கோட்டை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முனிச்சாலை கரீம்சா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அன்வர் பாட்ஷா (67). இவர் நேற்று மாலை சைக்கிளில் சென்றார். பழைய குயவர்பாளையம் சாலையில் சென்றபோது கேரள பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அன்வர் பாட்ஷா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதிவேகமாக பஸ் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தாளவாடியை சேர்ந்த டிரைவர் ரங்கராஜு (45) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூரை அடுத்த வாவிடமருதூரை சேர்ந்த மணிகண்டன் மகன் ராமசாமி (24). கூலித் தொழிலாளி. நேற்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். புது நத்தம் மெயின் ரோடு, நாராயணபுரம் அருகே- வேகமாக வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ராமசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே, அவர் பரிதாபமாக இறந்தார்.
மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக பஸ்சை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய, உத்தப்பநாயக்கனூர், இந்திரா நகரை சேர்ந்த டிரைவர் செல்வத்திடம் (47) விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்த அரசு ஊழியர் மீது போலீசில் புகார் செய்தார்.
- அருண்குமார் எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்
மதுரை
மதுரை திருப்பாலை அய்யப்பன் நகர் தாமரை வீதியைச் சேர்ந்தவர் பவித்ரா (வயது 25). இவர் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-
எனக்கும் துருண் குமாருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அப்போது எனக்கு பெற்றோர் 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர். மேலும் ரூ. 10 லட்சம் செலவில் திருமணம் செய்து வைத்தனர்.
மதுரை பாலமேடு அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் துருண்குமார் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் திருமண நாள் அன்று அவருக்கு ஆண்மை குறைபாடு உள்ளது என தெரியவந்தது. இருந்தபோதிலும் வேறு வழி யின்றி அவருடன் குடித்த னம் நடத்தி வந்தேன்.
இந்த நிலையில் துருண் குமாரின் அண்ணன் அருண்குமார் எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதற்கு அவரது மனைவி திவ்யா, அவரது தாய் தனலட்சுமி மற்றும் உறவினர் சரவணன் ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.
எனவே நான் இது தொடர்பாக கணவரிடம் புகார் செய்தேன். அப்போது அவர் என் சகோதரரை அனுசரித்து நடந்து கொள் என்று தெரிவித்தார். இந்த நிலையில் துருண்குமார் குடும்பத்தினர் வரதட்சணையாக மேலும் ரூ.10 லட்சம் வாங்கி வரும்படி என்னை மிரட்டி னார்கள். இதற்கு நான் மறுத்தேன்.
எனவே அவர்கள் என்னை பட்டினி போட்டு கொல்ல பார்க்கிறார்கள். எனவே போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
இந்த புகாரின்பேரில் மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பன்னாட்டு விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.
- இலங்கை, துபாய், சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு மட்டும் நேரடி விமான சேவை உள்ளது.
மதுரை
மதுரை விமான நிலையம் 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு 2010-ம் ஆண்டில் புதிய முனையக் கட்டிடம் திறக்கப்பட்டது.
மதுரை விமான நிலை யத்தில் 2013-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு விமான சேவை நடந்து வருகிறது. மதுரையில் இருந்து இலங்கை, துபாய், சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு மட்டும் நேரடி விமான சேவை உள்ளது. மதுரை விமான நிலையம் இதுவரை பன்னாட்டு விமான நிலையமாக நிலை உயர்த்தப்படவில்லை. சுங்க விமான நிலையமாக செயல்படுகிறது.
இங்கு 3 சர்வதேச விமான சேவைகள் இருந்தாலும், மதுரை விமான நிலையம் அதிகளவில் பயணிகளைக் கையாண்டு வருகிறது. கோவை, ஷீரடி, விஜய வாடா, கண்ணூர், திருப்பதி ஆகிய விமான நிலையங்கள் குறைந்த அளவில் பயணிகளைக் கையாளுகின்றன.
அவை சர்வதேச விமான நிலையங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன. மதுரை விமான நிலையம் மட்டும் இன்னும் சுங்க விமான நிலையமாகவே உள்ளது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று 10 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.
மத்திய அரசு ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களை பயணியர் சேவை உதவியாளர்களாக, மதுரை விமான நிலையத்தில் பணியமர்த்த உள்ளது. இவர்கள் மத்திய தொழில் பாதுகாப்பு போலீசாருடன் இணைந்து 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் மதுரை-மலேசியா வழித்தடத்தில் நேரடி விமான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து கிடைக்க உள்ளது. இது வியாபாரிகள் மற்றும் விமான பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கூறுகையில், உலகம் முழுவதும் சுற்றுலா பயணிகள் மலேசியா, சிங்கப்பூர் வழியாக மதுரை வருகின்றனர். சர்வதேச அந்தஸ்து கிடைத்தால் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் குடியேறி இருப்பவர்கள் எளிதில் மதுரைக்கு வர முடியும்.
வேளாண் விளை பொருட்களும் அதிகளவில் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிட்டும். பிற நாடு களுடனான விமான சேவை ஒப்பந்தங்களில், மதுரை விமான நிலையம் ஒரு ''பாயின்ட் ஆப் கால்'' ஆக சேர்க்கப்பட வேண்டும்.
சர்வதேசவிமான பயணத்தில் தென்தமிழகத்தின் நுழைவு வாயிலாக மதுரை விமான நிலையம் திகழ்கிறது. மலேசியா, சிங்கப்பூர், குவைத், இதர ஐக்கிய அரபு நாடுகளுடனான இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தை சேர்த்து, பன்னாட்டு விமான சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
- விசாலாட்சி விநாயகர் கோவிலில் 10-ந்தேதி சங்கடஹர சதுர்த்தி விழா கரு.கருப்பையா தலைமையில் நடக்கிறது.
- 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.
மதுரை
மதுரை மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா கரு.கருப்பையா தலையைில் நடக்கிறது.
மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்து மடப்புரம் விலக்கு பேருந்து நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.
இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்து வருகிறார்.
- அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
- கலெக்டர் தெரிவித்தார்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையே வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நிலையான வழி காட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் நடத்தப்படும்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் madurai.nic.in என்ற இணைய தளத்தில், தங்களது பெயர்களை பதிவு செய்து, பாஸ்போர்ட் புகைப்படம், 2 தவணை கொரோனா செலுத்தியதற்கான சான்று, வயது சான்று ஆகியவற் றை பதிவேற்றம் செய்ய வேண் டும். இதேபோல ஜல்லிக்கட் டில் பங்கேற்கும் மாடுகள் குறித்த விவரங்களையும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க் கப்பட்ட பிறகு, தகுதி யான நபர்களுக்கு இைணய தளத்தில் டோக்கன் பதிவேற்றப்படும். இந்த டோக்கனை பதிவிறக்கம் செய்தவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
இதேபோல, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் ஒரு காளையுடன் அதன் உரிமையாளர் ஒருவர், உதவியாளர் ஒருவர் என இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இருவரும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று பெற்றிருக்க வேண்டும்.
மேலும் காளையுடன் அனுமதிக்கப்படுபவர்கள், மாடுபிடிவீரர்கள், பார்வை யாளர்கள் போட்டி நடைபெறும் தேதியில் இருந்து 2 நாட்களுக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்த சான்றை கொண்டு வர வேண்டும்.
ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, வடமாடு விளை யாட்டுகளில் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர் களுக்கு மிகாமல் பங்கேற்கலாம். கொரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டே பார்வையா ளர்கள் அனுமதிக்கப் படுவார்கள்.
திறந்தவெளி அரங்கின் அளவுக்கேற்ப சமூக இடைவெளியுடன் 150 பார்வை யாளர்கள் அல்லது அனுமதிக்கப் பட்ட இருக்கைகளில் 50 சதவீதத்திற்கும் மிகாத எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விவசாயியை அரிவாளால் வெட்டிய பெண் உள்பட 4 பேருக்கு வலை வீசி தேடி வருகின்றனர்.
- 4 மாதங்களுக்கு முன்பு முருகன் மகன் தமிழரசனை கைது செய்தது தொடர்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது
மதுரை
மதுரை மேலூரை அடுத்த வண்ணம்பாறைபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40), விவசாயி. இவர் சம்ப வத்தன்று மாலை வீட்டில் இருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகன் (49), அவரது மனைவி செல்வி (45) மற்றும் மகன்கள் மீனாட்சி சுந்தரேஸ் (19), தமிழரசன் (18) ஆகிய 4 பேரும் கும்பலாக வந்து தங்களை பற்றி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு உளவு கூறியதாக தகராறு செய்து ரமேசை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இது தொடர்பாக ரமேஷ் கீழவளவு போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.
இதில், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முருகன் மகன் தமிழரசனை கைது செய்தது தொடர்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் ரமேசை வெட்டியதாக முருகன், அவரது மனைவி செல்வி, மகன்கள் மீனாட்சி சுந்தரேஸ், தமிழரசன் ஆகிய 4 பேரையும் கீழவளவு போலீசார் தேடி வருகின்றனர்.
- டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக தாசில்தாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- உடன்பாடு ஏற்படாததால் பெண்கள் போராட்ட அறிவித்தனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தும்மக்குண்டு அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி அருகில் சமீபத்தில் டாஸ்மாக் அரசு மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் நடத்தினர். ஆய்வுக்கு வந்த டாஸ்மாக் மேலாளரிடம் கடையை மூடக்கூடாது என மது பிரியர்கள் மனு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
மது கடைைய அகற்றுவது தொடர்பாக நேற்று உசிலம்பட்டி தாசில்தார் கருப்பையா தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. மாணவர்களுடன் பெற்றோர்களும் வந்திருந்தனர். பேச்சு வார்த்தையின் போது தாசில்தார் கருப்பையா கூறும்போது, தமிழ்நாடு முழுவதும் இந்த நிலைமை தான் உள்ளது. உசிலம்பட்டி- தேனி ரோட்டில் நாடார் பள்ளி முன்பு டாஸ்மாக் கடை உள்ளது. எங்கள் பிள்ளைகளும் அங்கு தான் படிக்கிறார்கள். நமது குழந்தைகளை நாம் தான் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள், மது கடைைய அகற்ற வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனர்.
எங்கள் கிராமத்திற்கு டாஸ்மாக் கடை வேண்டாம். அப்புறப்படுத்த மறுத்தால் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்வோம். எங்கள் ஆதார்அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை ஆகியவற்றை திருப்பி கொடுப்போம் என்றும், உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம் என்றும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பெண்கள் தெரிவித்தனர்.
- கவர்னர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என அ.தி.ம.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
- மொழி வாரியான, இனவாரியான பாகுபாட்டை திணிக்கும் வகையில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர்-வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு என்று சொல்ல வாய்மறுக்கும் மத்திய அரசால் தமிழ்நாட்டின் கவர்னராக இங்கு பதவி வகிக்கும் ஆளுநர் ரவி தமிழ்நாட்டில் 50 ஆண்டுகால திராவிட ஆட்சி தவறான வழிகாட்டியாக இருந்து வருவதாக பேசியது என்பது அரசாங்க ஊழியர் என்பதை மறந்த செயலாகும்.
ஜனநாயக நாட்டில் மத்திய அரசு பதவியில் இருப்பவர் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி செயல்படலாமே தவிர தனிப்பட்ட அரசியல் வாதியாக மாறி மொழி வாரியான, இனவாரியான பாகுபாட்டை திணிக்கும் வகையில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் திராவிட பாரம்பரியம் தெரியாமல் பேசி வரும் கவர்னர் ரவி முன்னாள், இந்நாள் வரையிலான தமிழ்நாட்டின் ஆளுமை சக்திகளாக இயங்கி வரும் திராவிட இயக்க ஆளுமைகளை குறிப்பாக அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, திராவிட மாடலாய் வழி தொடரும் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரையும் இழிவு படுத்தும் வகையில் செயல்படுவதை திராவிட கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.
இந்திய வரலாற்றில் ஆளுமையின் பெரும்பங்கு தமிழ்நாட்டுக்கு உண்டு என்ற பெருமையை பொறுக்க முடியாமல் அதனை சீர்குலைக்கும் எண்ணத்தில் கவர்னர் ரவி தொடர்ந்து பேசி வருவதும், செயல்பட்டு வருவதும் தமிழ்நாட்டு மக்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.
மத்திய அரசு கவர்னர் ரவியை தமிழ்நாட்டில் இருந்து திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட அணி திரள்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அச்சம்பத்து நெடுஞ்சாலை பணிகளுக்கு பல்வேறு பகுதிகளில் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது.
- புல எண்கள் மற்றும் அளவு குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை விராட்டிபத்து பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதில் முடக்குச்சாலை பகுதியில் பாலம் அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கான நில எடுப்பு பணிகளை தொடங்கியபோது மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள பொன்மேனி, கொக்குளப்பி, கோச்சடை, ஏற்குடி, சம்பக்குடி, வடிவேல்கரை, விளாச்சேரி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் அங்கு நெடுஞ்சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்ப டுத்தப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதிகளில் நோட்டீசு போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அதில், அச்சம்பத்து புறவழிச்சாலை அமைப்பதற்காக மதுரைவருவாய் கோட்டாட்சியர் மூலம் நிலம் கையகப்படு த்தப்பட்டுள்ளது. எனவே அந்த இடத்தில் தனி நபர் எவ்வித பணிகளும் மேற்கொள்ள வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள புல எண்கள் மற்றும் அளவு குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அதில் 2.100 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை
மதுரையில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் மேற்பார்வையில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரசாத் ஆலோசனையின் பேரில் எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
சம்பவத்தன்று மதியம் பைபாஸ் ரோடு பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். வ.உ.சி. ரெயில்வே பாலத்தில் ஆட்டோ வந்தது. அதில் ஒரு பெண் உள்பட 2 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர்.
அதில் 2.100 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் கரிமேடு, அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த பூபதி மனைவி அழகம்மாள் (46), களத்துபொட்டல், நேரு நகர் உதயகுமார் (36) என்பது தெரிய வந்தது.
அழகம்மாளின் கணவர் பூபதி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு இவருக்கு களத்துப்பொட்டல் உதயகுமாருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்து, மாநகரம் முழுவதும் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும்எ கைது செய்தனர்.






