என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குடிநீர் தொட்டி அமைக்க கோரிக்கை
- குடிநீர் தொட்டி அமைக்க கோரிக்கை
- சிந்தாமணி 89-வது வார்டில் சுமார் 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
மதுரை
மதுரையில் சிந்தாமணி நீர் மேலாண்மை சங்க தலைவர் முனியாண்டி, கிராம விவசாய சங்க தலைவர் மும்மூர்த்தி மற்றும் பலர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
சிந்தாமணி 89-வது வார்டில் சுமார் 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு தற்போது அம்ரூத் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக் கப்பட உள்ளது. இதனால் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு எந்த தொந்தரவும் கிடையாது.
இது எங்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கும். இந்த இடத்தில் எந்த மடையும் கிடையாது. சிலர் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கும், அந்த இடத்துக்கும் சம்பந்தமும் கிடையாது. இந்த இடம் முழுமையாக அரசு புறம்போக்கு நிலமாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு சிந்தாமணி கிராமத்தில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் தேக்க தொட்டியை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்