என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Highway works"
- அச்சம்பத்து நெடுஞ்சாலை பணிகளுக்கு பல்வேறு பகுதிகளில் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது.
- புல எண்கள் மற்றும் அளவு குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை விராட்டிபத்து பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதில் முடக்குச்சாலை பகுதியில் பாலம் அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கான நில எடுப்பு பணிகளை தொடங்கியபோது மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள பொன்மேனி, கொக்குளப்பி, கோச்சடை, ஏற்குடி, சம்பக்குடி, வடிவேல்கரை, விளாச்சேரி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் அங்கு நெடுஞ்சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்ப டுத்தப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதிகளில் நோட்டீசு போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அதில், அச்சம்பத்து புறவழிச்சாலை அமைப்பதற்காக மதுரைவருவாய் கோட்டாட்சியர் மூலம் நிலம் கையகப்படு த்தப்பட்டுள்ளது. எனவே அந்த இடத்தில் தனி நபர் எவ்வித பணிகளும் மேற்கொள்ள வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள புல எண்கள் மற்றும் அளவு குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்