என் மலர்
மதுரை
- பள்ளி மாணவரிடம் இருந்து போலீசார் யாரும் செல்போனை பறிமுதல் செய்யவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது.
- கைதான விக்னேசை திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கீழ உரப்பனூரை சேர்ந்தவர் பிரபு. இவரது மகன் திருமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தநிலையில் ஜெராக்ஸ் எடுப்பதற்காக திருமங்கலம் முன்சீப் கோர்ட்டில் இருசக்கர வாகனத்தில் பிரபுவின் மகன் சென்றார். அப்போது அங்கு போலீஸ் சீருடை அணிந்த வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் பள்ளி சீருடையுடன் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த பிரபுவின் மகனை வழிமறித்து நிறுத்தினார்.
அவரிடம் மோட்டார் சைக்கிளின் ஆர்.சி. புத்தகம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். இதையடுத்து அந்த மாணவர் தனது தந்தைக்கு போன் செய்வதற்காக செல்போனை எடுத்துள்ளார். அப்போது போலீஸ் சீருடையில் இருந்த வாலிபர், மாணவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு, திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து அந்த மாணவர் தனது தாயிடம் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மாணவரின் தாய் திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மகனிடம் போலீஸ்காரர் ஒருவர் சென்போனை வாங்கிச்சென்று விட்டதாக தெரிவித்திருக்கிறார்.
ஆனால் பள்ளி மாணவரிடம் இருந்து போலீசார் யாரும் செல்போனை பறிமுதல் செய்யவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மாணவரிடம் செல்போனை பறித்துச்சென்றது யார்? என்று விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது வாலிபர் ஒருவர் போலீஸ் போன்று சீருடை அணிந்து மாணவரிடம் செல்போனை பறித்துச்சென்றது தெரிய வந்தது. மாணவர் மற்றும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் கூறிய அடையாளத்தை கொண்டு அந்த வாலிபரை போலீசார் தேடினர்.
இந்தநிலையில் போலீஸ் சீருடையுடன் சுற்றிய அந்த வாலிபர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் விசாரித்ததில், திருப்பத்தூர் மாவட்டம் ஏரிக்குடி பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவரது மகன் விக்னேஷ் (வயது 24) என்பது தெரியவந்தது. போலீஸ் போன்று நடித்து பள்ளி மாணவரிடம் செல்போன் பறித்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். கைதான விக்னேசை திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் போலீஸ் சீருடை அணிந்து போலீஸ்காரர் போல் வலம் வந்து பல இடங்களில் ஏராளமானோரிடம் மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் எங்கெல்லாம் கைவரிசை காட்டினார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 4-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தை தெப்பத்திருவிழா விமரிசை யாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா இன்று (24-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை 10.30 மணியளவில் கொடிமரம் முன்பு சிம்ம வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர்.
அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத, மந்திரங்கள் ஓத அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டினர். தொடர்ந்து தை தெப்பத்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று இரவு சிம்ம வாகனத்தில் அம்மனும், கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமியும் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் உலா வருகின்றனர். 4-ந் தேதி வரை நடக்கும் 12 நாட்கள் திருவிழாவில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் அன்னம், பூதம், காமதேனு, கைலாச பர்வதம், தங்கக்குதிரை, ரிஷப வாகனம், யாழி, நந்திகேசுவரர் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.
விழாவில் 8ம் நாளான வருகிற 31-ந்தேதி காலை 9 மணிக்கு தங்க பல்லக்குகளில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் சித்திரை வீதி, நேதாஜி ரோடு, பெரியார் பஸ் நிலையம், மகபூப்பாளையம் வழியாக வலைவீசி தெப்பக்குளத்தில் எழுந்தருளுகின்றனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தை தெப்ப உற்சவம் வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5 மணியளவில் வெள்ளி அவுதா தொட்டில் அம்மனும், சிம்ம வாகனத்தில் சுவாமியும் எழுந்தருளுகின்றனர். பின்னர் கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி தெரு, கீழமாசி வீதி, யானைக்கல், கீழவெளி வீதி, முனிச்சாலை, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலில் எழுந்தருளுகின்றனர். அதன் பின் தண்ணீர் நிரம்பிய தெப்பக்குளத்தில் தெப்ப உற்வசம் நடக்கிறது.
தெப்பத்தை சுவாமி-அம்பாள் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். இங்கு மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதன்பின் இரவு சுவாமி-அம்பாள் கோவிலுக்கு திரும்புவார்கள்.
- மதுரையில் அரசு பஸ்களின் அவலநிலையால் பயணிகள், பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
- சாதாரண கட்டண ேபருந்தை அதிகளவில் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
மதுரை
தென் மாவட்டங்களில் முக்கிய நகரமாக விளங்கும் மதுரைக்கு நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு நகரின் பல்வேறு பகுதிகளில் செல்ல போதிய அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை.
இதேபோல் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் நாள்தோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோர் என ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் அரசு பஸ்சில் வந்து செல்கின்றனர். ஆனால் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
தற்போது பஸ்கள் போதுமான அளவில் இல்லாததால் மாணவர்கள், பெண்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. அவ்வாறு பயணம் செய்யும் மாணவர்கள் பலியாகும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது.
மதுரையில் இருந்து இயக்கப்படும் பல டவுன் பஸ்களில் ஓட்டை, உடைசல் மற்றும் இருக்கைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 60 சதவீத பஸ்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. இருந்த போதிலும் அந்த பஸ்களிலும் பயணிகள் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர். இந்த பஸ்களில் 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கின்றன.
ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல ரூ.5, 6, 9, 13, 15 என்று 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கிறது. இதனால் குறைந்த கட்டண பஸ்களில் ஏற வரும் பயணிகள் வேறு வழியில்லாமல் கூடுதல் கட்டணம் உள்ள பஸ்களிலும் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த கட்டணம் ஷேர் ஆட்டோ கட்டணத்துக்கு நிகராக உள்ளதால் தினமும் போக்குவரத்துக்காக அதி களவு செலவு செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். விபத்து ஏற்படுத்தும் வகையில் பழுதான பஸ்களை இயக்குவதை கைவிட வேண்டும். புதிய பஸ்கள் அதிகமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கூறுகின்றனர்.
பெரும்பாலான டவுன் பஸ்கள் பயணிகளுக்கு போக்கு காட்டிவிட்டு பல நிறுத்தங்களில் நிற்காமல் சென்றுவிடுவதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக புகார் உள்ளது. மேலும் ஏறும்போதும், இறங்கும்போதும் டிரைவர் கள் அவசரப்பட்டு பஸ் களை இயக்குவதாக கூறப்படுகிறது.
தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றி செல்வதைபோல் அரசு பஸ்களும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் அவர்களை ஏற்றி செல்ல வேண்டும். மாணவ-மாணவிகளை, பெண்களை ஏற்றாமல் போக்குகாட்டி செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்யும் நிலை உள்ளது.
மேலும் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது பெண்களுக்கு பாலியல் தொல்லைகளும் அதிகமாக ஏற்படுகிறது. எனவே மகளிர், மாணவ-மாணவிகளுக்கு தனி பஸ்கள் இயக்க வேண்டும். அவைகள் காலை, மாலை நேரங்க ளில் அதிக அளவில் இயக்கப்படவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. அதனை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.
- மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தின கிராம சபை கூட்டம் வருகிற 26-ந் தேதி நடக்கிறது.
- மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான வருகிற 26-ந் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதமரின் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் போன்ற பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்த கூட்டங்களில் அந்தந்த ஊராட்சியில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். கிராம சபை விவாதங்களில் பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாடிப்பட்டி அருகே லாரி மீது கார் மோதியதில் தனியார் நிறுவன மேலாளர் உடல் நசுங்கி பலியானார்.
- இந்த விபத்தால் மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாடிப்பட்டிவாடிப்பட்டி அருகே லாரி மீது கார் மோதியதில் தனியார் நிறுவன மேலாளர் உடல் நசுங்கி பலியானார்.
மதுரை பைக்காரா புது குளத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(வயது35) கார் வாங்கி விற்கும் நிறுவனத்தில் மேலாளராக பணி செய்து வந்தார். இவருக்கு அமீனாபானு என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர் திண்டுக்கல் சென்றுவிட்டு நேற்று மாலை காரில் மதுரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
வாடிப்பட்டி அருகே தனிச்சியம் மயானம் முன்பு கார் வந்தபோது எதிர்பாராத விதமாக கார் டயர் பஞ்சரானது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் உள்ள தடுப்பை தாண்டி எதிர்புற சாலைக்கு சென்றது.
அப்ேபாது மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற லாரி
மீது மோதி கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காருக்குள்ளேயே சிக்கிய சந்தோஷ்குமார் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வாடிப்பட்டி போலீசார் மற்றும் வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி காருக்குள் சிக்கியிருந்த சந்தோஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சோழவந்தான் அருகே பேவர் பிளாக், கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது.
- கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள சக்கரப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட மேலப்பெருமாள்பட்டி கிராமத்தின் தேவர் நகரில் சாக்கடை வசதி இல்லாததால் அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வீட்டைச் சுற்றி கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இங்கு கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதே போல் மணல்பட்டி கிராமத்தில் உள்ள தெற்கு தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
தாழ்வான பகுதியான இங்கு சாதாரண மழைக்கு தண்ணீர் குளம் போல் தேங்கி மக்கள் வெளியேற முடியாத அவல நிலை உள்ளதாக விவசாயி அழகுசாமி (40) தெரிவித்தார். இதேபோல் வீரலட்சுமி (23) கூறுகையில், எங்கள் பகுதிக்கு சாக்கடை வசதி இல்லாததால் வீட்டுக்கு முன்பு கழிவு நீர் தேங்கி பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் வசதி செய்து, பேவர் பிளாக் சாலை அமைத்து தர வேண்டும் என்றார்.
- கடந்த சட்டசபை தேர்தலின்போது எய்ம்ஸ் தொடர்பாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
- எய்ம்ஸ் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க கோரி மதுரையில் இன்று தி.மு.க. கூட்டணி கட்சியினர் செங்கல் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை:
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அங்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஜப்பான் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை.
கடந்த சட்டசபை தேர்தலின்போது எய்ம்ஸ் தொடர்பாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் எய்ம்ஸ் தொடர்பாக பேசும்போது ஒற்றை செங்கலை காட்டி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க கோரி மதுரையில் இன்று தி.மு.க. கூட்டணி கட்சியினர் செங்கல் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழங்காநத்தம் சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எய்ம்ஸ் எங்கே? எய்ம்ஸ் எங்கே? என்று செங்கலை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில தலைவர் பாலகிருஷ்ணன், எம்.பி.க்கள் வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), நவாஸ் கனி (ராமநாதபுரம்), எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, புதூர் பூமிநாதன், முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் குழந்தை வேலு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேலுச்சாமி, கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொருவரும் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு திரண்டிருந்த நிர்வாகிகளும் எங்கே எய்ம்ஸ்...? எங்கே எய்ம்ஸ்...? என்று எதிர்கோஷம் எழுப்பினர்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் என்னும் அதற்கான கட்டிடப் பணிகள் தொடங்காமல் இருப்பதால் மதுரையில் இன்று நடந்த இந்த நூதன போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பிரபாகரன் சென்னைக்கு வேலை தேடி வர முயன்றார்.
- பிரபாகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை :
மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் பாக்கியம். இவருடைய மகன் பிரபாகரன் (வயது 17). இவர் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் சென்னைக்கு வேலை தேடி வர முயன்றார். அதற்காக பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி வந்துள்ளார்.
சோழவந்தான் அருகே நெடுங்குளம் ரெயில்வே கேட் பகுதியில் வந்தபோது, ரெயிலில் இருந்து எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. ஓடும் ரெயிலில் இருந்து விழுந்ததாலும், முட்கள் குத்தியதாலும் படுகாயம் அடைந்தார்.
மேலும் அவரால் எழுந்திருக்க முடியாததால் விடிய, விடிய பலத்த காயத்துடன் பிரபாகரன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதற்கிடையே அவருடைய பெற்றோர் பிரபாகரனை செல்போனில் தொடர்பு கொண்டபோது, செல்போன் அழைப்பை அவர் எடுக்கவில்லை. இதனால் பிரபாகரன் உடன் சென்ற நண்பர்களை போனில் தொடர்பு கொண்டு பிரபாகரன் எங்கே? என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர்கள் மதுரையில் இருந்து எங்களோடு வந்த பிரபாகரனை சோழவந்தான் பகுதியில் இருந்து திடீரென காணவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோரும், உறவினர்களும் துரிதமாக செயல்பட்டு, அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் பகுதியில் தேடி சென்றனர்.
இதற்கிடையே நெடுங்குளம் ரெயில்வே கேட் அருகே முட்புதரில் இருந்து முனகல் சத்தம் கேட்டது.
அங்கு சென்று பார்த்தபோது, படுகாயங்களுடன் கிடந்த பிரபாகரனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கூடல்புதூர் போலீஸ் நிலையத்தில் மர்ம கும்பல் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
- மாடு திருட்டு கும்பலின் பின்னணியில் இன்னும் பலர் இருக்கலாம் என்று தெரிகிறது.
மதுரை:
மதுரை செல்லூர், கூடல்நகர், விளாங்குடி, கரிசல்குளம், தெற்குவாசல், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் பசுமாடுகளை நள்ளிரவு நேரத்தில் மர்ம கும்பல் திருடி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது.
இதில் ஈடுபடும் நபர்கள் யார்? என்பது மர்மமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு எஸ்.எஸ்.காலனி, தாமஸ் காலனி பகுதியில் சரக்கு வேனில் வந்த ஒரு கும்பல் மாடுகளை திருடி செல்வதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து விட்டனர். அவர்கள் பிடிக்க முயன்றதும் மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
அவர்களை சிலர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்றனர். மேலும் இதுகுறித்து விளாங்குடி சோதனை சாவடியில் இருந்த போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் உஷார் நிலையில் இருந்தனர். இதற்கிடையே மாடுகளை திருடி கடத்தி வந்த சரக்கு வேன் அந்த வழியாக வந்தது.
அந்த வாகனம் செல்லாமல் இருப்பதற்காக இரும்பு தடுப்பை வைத்தனர். ஆனால் வேகமாக வந்த வேன் இரும்பு தடுப்பை தள்ளிகொண்டு சென்றது. இதில் மர்ம கும்பலை பிடிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் தவமணி என்பவர் காலில் இரும்பு தடுப்பு விழுந்து படுகாயம் ஏற்பட்டது. அவரை மர்ம நபர்கள் வேனை ஏற்றி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த மாடு திருட்டு கும்பலை பிடிக்க செல்லூர் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் கூடல்புதூர் போலீஸ் நிலையத்தில் மர்ம கும்பல் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
சரக்கு வேன் வந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர். அதில் சரக்கு வாகனத்தின் பதிவு எண் தெரியவந்தது. அதனடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
நேற்று தனிப்படை போலீசார் கோசாக்குளம், குலமங்கலம் மெயின் ரோடு அய்யனார் கோவில் அருகில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாடுபிடி கும்பல் பயன்படுத்திய சரக்கு வாகனம் அந்த வழியாக வந்தது. அதனை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர்.
இதைத் தொடர்ந்து அதில் வந்த 8 பேர் கீழே இறங்கி தப்பி ஓடினர். இதில் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அரியானா மாநிலம் மேவாட் ரசூல்பூரை சேர்ந்த சாகுல் (வயது23), சுபைர் (33), நாசர் (22), இர்பான் (26), முதின் (42) என்பதும், இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சரக்கு வேனில் மாடுகளை திருடிகடத்தி சென்றதும் தெரியவந்தது.
இவர்கள் மதுரையில் 20-க்கும் மேற்பட்ட மாடுகளை திருடி சென்றுள்ளனர். இவர்களுக்கு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த ஒருவர் மூளையாக செயல்பட்டுள்ளார். அவர் ஒவ்வொரு ஊரிலும் ஆட்களை வைத்து மாடுகளை நள்ளிரவு நேரத்தில் திருடிவர செய்துள்ளார்.
இதற்காக ஒரு நபருக்கு தினமும் ரூ.1500 கூலி கொடுத்துள்ளார். அந்த மாடுகளை அவர் தலா ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்துள்ளார். இந்த மாடு கடத்தி விற்பனை செய்யும் கும்பலில் தப்பி சென்ற மேலும் 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் இந்த திருட்டில் மூளையாக செயல்பட்ட தாராபுரத்தை சேர்ந்தவரை பிடிக்கவும் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மாடு திருட்டு கும்பலின் பின்னணியில் இன்னும் பலர் இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களையும் கைது செய்ய தனி்படை போலீசார் வலைவிரித்துள்ளனர்.
- ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி பெண்களிடம் பண மோசடி செய்ய முயற்சி.
- ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி பெண்களிடம் பண மோசடி செய்ய முயற்சி.
மதுரை
மதுரை மாவட்டம் பூசாரிப்பட்டி அருகே மாயாண்டிபட்டியை சேர்ந்த கிராம பெண்கள் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
எங்கள் ஊருக்கு கோமதி புரத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், ஆணும் வந்த னர். அவர்கள் எங்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிப்பதாக கூறினர். அதை நம்பி அந்த பயிற்சி யில் சேர்ந்தோம். அப்போது நாங்கள் வைத்திருந்த வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற ஆவணம் மற்றும் போட்டோ ஆகியவற்றை வாங்கி கொண்டனர். 45 நாட்கள் நடைபெற்ற பயிற்சியில் 40 பெண்கள் கலந்து கொண்டோம்.
பயிற்சி முடிந்ததும் எங்களது ஆவணங்களை திருப்பிதரும்படி கேட்டோம். அதனை மேலூருக்கு வந்து வாங்கி கொள்ளுமாறு கூறினார்கள். மேலும் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழும் தருவதாக கூறினர்.
அவர்கள் கூறியதை நம்பி சில விண்ணப்பங்களில் கையெழுத்து போட்டு கொடுத்தோம். அவர்கள் கூறியபடி மேலூருக்கு சென்றோம். அப்போது ஆவணங்களை தராமல் அவற்றை உங்கள் ஊருக்கே வந்து தருகிறோம் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் அவர்கள் எங்களது ஆவணங்களில் சில திருத்தங்களை செய்துள்ளனர். அதற்கு வந்த ஓ.டி.பி. போன்றவற்றை எங்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதில் போட்டோக்களை மாற்றி வைத்து வங்கியில் கடன் வாங்க முயற்சி செய்வது தெரியவந்தது.
இதுபற்றி நாங்கள் அவர்களிடம் கேட்டபோது, அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தனர். இதனால் நாங்கள் மனஉளைச்சலில் உள்ளோம். எங்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட முயற்சி செய்த 2 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெண்கள், மாணவ-மாணவிகளுக்கு தனி பஸ்கள் இயக்கப்படுமா? பழுதான பஸ்களால் தினமும் அவதிபடும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
- தமிழக அரசு பெண்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லாத டவுன் பஸ்களை இயக்கி வருகிறது.
மதுரை
மதுரையில் 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரவு நேரத்திலும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் தினமும் வேலைக்கு செல்லும் பொது மக்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் சென்று வருகின்றனர். தமிழக அரசு பெண்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லாத டவுன் பஸ்களை இயக்கி வருகிறது.
மதுரையில் ஏராளமான டவுன் பஸ்கள் இயக்கப்படு கின்றன. காலை, மாலை நேரங்களில் அதிக அள வில் பயணிகள் கூட்டம் இருக்கும். தற்போது உள்ள பஸ்கள் போதுமான அளவில் இல்லாததால் மாணவர்கள், பெண்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. அவ்வாறு பயணம் செய்யும் மாணவர்கள் பலியாகும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது.
மதுரையில் இருந்து இயக்கப்படும் டவுன் பஸ்கள் ஓருசில பஸ்கள்தான் நன்றாக உள்ளன. பல பஸ்கள் ஓட்டை, உடைசல் மற்றும் இருக்கைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இருந்த போதிலும் பயணிகள் அவைகளின் பயணம் செய்து வருகின்றனர். இந்த பஸ்களில் 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கின்றன.
ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல ரூ.5, 6, 9, 13, 15 என்று 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கிறது. இதனால் குறைந்த கட்டண பஸ்களில் ஏற வரும் பயணிகள் வேறு வழியில்லாமல் கூடுதல் கட்டணம் உள்ள பஸ்களிலும் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்த கட்டணம் ஷேர் ஆட்டோ கட்டணத்துக்கு நிகராக உள்ளதால் தினமும் போக்குவரத்துக்காக அதி களவு செலவு செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். விபத்து ஏற்படுத்தும் வகையில் பழுதான பஸ்களை இயக்குவதை கைவிட வேண்டும். புதிய பஸ்கள் அதிகமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கூறுகின்றனர்.
பெரும்பாலான டவுன் பஸ்கள் பயணிகளுக்கு போக்கு காட்டிவிட்டு பல நிறுத்தங்களில் நிற்காமல் சென்றுவிடுவதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக புகார் உள்ளது. மேலும் ஏறும்போதும், இறங்கும்போதும் டிரைவர் கள் அவசரப்பட்டு பஸ் களை இயக்குவதாக கூறப்படுகிறது.
தனியார் பஸ்கள் பயணி களை ஏற்றி செல்வதைபோல் அரசு பஸ்களும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் அவர்களை ஏற்றி செல்ல வேண்டும். மாணவ-மாணவிகளை, பெண்கள் ஏற்றாமல் போக்குகாட்டி செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகளும் அதிகமாக ஏற்படுகிறது. எனவே மகளிருக்கு தனி பஸ்கள் இயக்கவேண்டும். மாணவ-மாணவிகளுக்கு தனி பஸ்கள் இயக்க வேண்டும். அவைகள் காலை, மாலை நேரங்க ளில் அதிக அளவில் இயக்கப்படவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. அதனை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கூறு கின்றனர்.
- அவனியாபுரத்தில் குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- திருமணமாகி 2 ஆண்டில் முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
மதுரை
அவனியாபுரம் தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் 108 ஆம்புலன்சில் மெடிக்கல் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 23). 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகனும், பிறந்து 7 மாதமே ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. நேற்று இரவு முத்துலட்சுமி பக்கத்து வீட்டில் டி.வி. பார்த்துள்ளார்.
அப்போது சதீஷ்குமார் மீன் வாங்கி வந்து அதனை சமைத்து தரும்படி கேட்டுள்ளார். அதற்கு முத்து லட்சுமி மறுத்துள்ளார். இதில் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த முத்துலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய புகாரின் பேரில் அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார். திருமணமாகி 2 ஆண்டில் முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்த சம்பவம் அவனியாபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






