என் மலர்tooltip icon

    மதுரை

    • புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்று பயன்பெற்றனர்.

    மதுரை

    உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி மதுரை மாநகர காவல் துறையின ருக்காக மதுரை சி.எஸ்.ஐ. பல் மருத்துவமனை சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் விழிப் பணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதில் சி.எஸ்.ஐ. பல் மருத்துவமனை கல்லூரி டீன் சரவணன், முதல்வர் தனவீர் மற்றும் தலைமை மருத்துவர் வின்னி ப்ரெட் ஆகியோர் பங்கேற்று காவல்துறையினருக்கு புகையிலை தொடர்பான கெடுதல்கள், உடல் உபாதை கள் மற்றும் சிரமங்கள் ஆகியவற்றை எடுத்து ரைத்தனர். அதன்பின்பு காவல்துறையினருக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், காவல் துறையினர் தங்களது உடலை எவ்வாறு பேண வேண்டும் என்பது பற்றியும் புகையிலையால் ஒவ்வொரு நபரும் பாதிக்கப்படுவ தோடு சமூகம் எவ்வாறு பாதிக்கப் படுகிறது? என்ப தையும் எடுத்துரைத்தார்.

    காவல் துணை ஆணையர் தலைமையிடம் மங்க ளேஸ்வரன், போக்கு வரத்து திட்ட கூடுதல் காவல் துணை ஆணையர் திருமலைக்குமார் ஆகி யோர் ஏற்பாடு செய்தனர். நிகழ்ச்சி யில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்று பயன்பெற்றனர். 

    • மதுரையில் கரு.கருப்பையாவின் நகைச்சுவை சொல்லரங்கம் இன்று மாலை நடக்கிறது.
    • இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.

    மதுரை

    மதுரை கீழ மாரட் வீதி பந்தடி 4-வது முக்கில் உள்ள பழைய கோண அரச மரம் பிள்ளையார் கோவி லில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது.

    இதை யொட்டி இன்று மாலை 6 மணிக்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவரும், சிரிப்பு பட்டிமன்ற நடுவரு மான பிரபல ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு. கருப்பையாவின் நகைச் சுவை சொல்லரங்கம் என்னும் புதுமையான நிகழ்ச்சி நடைபெறுகிறது. ெதாடர்ந்து இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.

    • திருச்சி கல்யாணராமனின் வில்லிபாரத தொடர் சொற்பொழிவு மதுரையில் இன்று தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு செய்துள்ளார்.

    மதுரை

    காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகளின் 130-வது ஜெயந்தியை முன்னிட்டு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மதுரை ஆண்டாள்புரம் விஸ்வாஸ் கருத்தரங்க கூடத்தில் கலைமாமணி திருச்சி கல்யாண ராமனின் வில்லி பாரத தொடர் சொற்பொழிவு இன்று தொடங்குகிறது.

    வருகிற 9-ந் தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை இந்த சொற்பொழிவு நடக்கிறது இன்று (வியாழன்) அர்ஜுனன் தீர்த்த யாத்திரை என்ற தலைப்பிலும், நாளை (2-ந்தேதி) திரவுபதி மானம் காத்தல், 3-ந்தேதி நளச் சரித்திரம், 4-ந்தேதி அர்ஜுனன் தவம், 5-ந்தேதி நச்சு பொய்கை, 6-ந்தேதி கிருஷ்ணன் தூது, 7-ந்தேதி குந்தியும் கர்ணனும், 8-ந்தேதி கீதையில் கண்ணன் என்ற தலைப்பி லும், 9-ந்தேதி நிறைவு நாள் அன்று கர்ணன் மோட்சம் தர்மர் பட்டாபிஷேகம் என்ற தலைப்பிலும் திருச்சி கல்யாணராமன் உரையாற்று கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு செய்துள்ளார்.

    • மாணிக்கம்தாகூர் எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு சேர்மன் குருசாமி ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடந்தன.

    திருமங்கலம்

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில பொறுப்பாளரும், விருது நகர் பாராளுமன்ற உறுப்பி னருமான மாணிக்கம் தாகூர் பிறந்தநாள் விழா இன்று கொண்டா டப்பட்டது.

    இதையொட்டி மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள பேரையூரில் பேரூராட்சி மன்ற தலைவர் கே.கே.குருசாமி தலைமை யில் பேரையூர் பட்டயத்து முக்கு விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதன்பின்னர் வி.அம்மா பட்டி அமலா மனநல காப்ப கத்தில் உள்ள அனை வருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பி னரும், பேரையூர் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான கே.கே.ஜி.காமாட்சி, வட்டார தலைவர் கணேசன், நகர் தலைவர் சற்குணன், நிர்வாகிகள் மகாலிங்கம், சுப்பையா, காளிஸ்வரன், சங்கரபாண்டியன், மணிகண்டன், முத்துகிருஷ்ணன், டில்லி ராஜன், முத்து விஜயன், மாசாணம், மலைராஜன், கருத்தப்பாண்டி, ராஜா, முத்தையா, முத்துவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மதுரை அருகே திருவாதவூரில் திருமறைநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் பிரசித்தி பெற்ற திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோவில் உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட கோவிலில் வருடந்தோறும் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அப்போது சுற்றுவட்டா ரத்தை சேர்ந்த திரளான கிராம மக்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    விழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் காலை, மாலை சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்தனர். 2 நாட்களுக்கு முன்பு திருமறைநாதர்- வேதநாயகி அம்பாள் மேலூரில் உள்ள மண்டக படியில் எழுந்த ருளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


    திருவாதவூர் திருமறைநாதர் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. காலை 9 மணியளவில் திருமறைநாதர் பிரியாவிடையுடன் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரிலும், வேதநாயகி அம்பாள் சட்ட தேரிலும் எழுந்தருளினர்.

    அதன்பின் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 9.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். கோவில் ரத வீதியில் பக்தி கோஷத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. காலை 10.15 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. தேரோ ட்டத்தில் மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆயிரக்க ணக்கா னோர் கலந்து கொண்டனர்.

    மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • வைகாசி திருவிழாவை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • பேரூர் பகுதி வணிகர்கள், அ.ம.மு.க.வின் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர், சர்பத் உள்ளிட்ட பானங்கள் வழங்கினர்.

    சோழவந்தான்

    மதுைர மாவட்டம் சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.

    சங்கம்கோட்டை மந்தை களத்தில் பம்பையுடன் அம்மன் கரகம் எடுத்து பூசாரி சண்முகவேல் பூக்குழி இறங்கினார். இதனை தொடர்ந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், பால்குடம், அலகு குத்தியும் காவடி சுமந்தும் பக்தி பரவசத்து டன் பூக்குழி இறங்கினர்.

    இந்நிகழ்வில் பேரூர் பகுதி வணிகர்கள், அ.ம.மு.க.வின் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர், சர்பத் உள்ளிட்ட பானங்கள் வழங்கினர். இதையடுத்து இரவு அம்மன் மின்னொளி.அலங்காரத்துடன் கோர கத்தில் எழுந்தருளி வீதி உலா பவனி வந்தார் சோழவந்தான்.இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணி மேற் கொண்டர். தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பசும்பொன் கண்ணன். மற்றும் வீரர்கள் மீட்பு குழுவினர் பங்கேற்றனர்.

    • ஊழல் நாடு என்ற பெயர் இந்தியாவிற்கு இருந்தது.
    • எந்தவித ஊழலும் இல்லாத ஆட்சியை பா.ஜனதா கொடுத்துள்ளது.

    மதுரை :

    மதுரை அண்ணாநகரில், மத்திய பா.ஜனதா அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    இந்திய சரித்திரத்தில் மிக முக்கியமான 9 ஆண்டாக, பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம் இருந்துள்ளது. கடைகோடியில் இருக்கிற சாமானிய மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கும் என்பதை யோசித்து பார்த்து வீடு, கியாஸ் சிலிண்டர், வங்கி கணக்கு, அந்த வங்கி கணக்கிற்கு பணம், ரேஷன் அட்டை என பல சலுகைகள் மோடி ஆட்சியில் கிடைத்துள்ளன.

    ஊழல் நாடு என்ற பெயர் இந்தியாவிற்கு இருந்தது. அதனை உடைத்து காட்டியவர், மோடி. 9 ஆண்டுகள் கடந்தும் கூட பிரதமர் மோடியின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் வைக்கமுடியவில்லை. அந்த அளவிற்கு சிறப்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனை வீடு, வீடாக எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை, பல பெருமைகளை கொண்டது. தமிழை வளர்க்க மோடி பாடுபடுகிறார். தமிழின் பெருமை, தமிழனின் பெருமையை உலகெல்லாம் எடுத்துச் சென்றுவிட்டார். ஐ.நா. சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என பேசி, திருக்குறளின் பெருமையை பட்டிதொட்டி எல்லாம் எடுத்துரைத்தார். வாரணாசியில், காசி தமிழ் சங்கம் வளர்த்தார். செங்கோலின் பெருமையை பாராளுமன்றத்தில் நிலை நாட்டினார்.

    புதிய பாராளுமன்றத்தில் பேசப்பட்ட முதல் மொழி தமிழ் மொழிதான். பாராளுமன்றத்திற்கு எப்போது செங்கோல் சென்றதோ, இனி தமிழகத்திலும் அறம் சார்ந்த ஆட்சிதான் அமையப்போகிறது.

    தற்போது இருக்கும் தி.மு.க. ஆட்சிக்கும், அறம் என்ற வார்த்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாராளுமன்றத்தில் செங்கோல் மட்டும் நிறுவப்படவில்லை. தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்காக அஸ்திவாரம் நிறுவப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானில் இருந்து, பிரதமரை பற்றி குறை கூறி வருகிறார். எந்தவித ஊழலும் இல்லாத ஆட்சியை பா.ஜனதா கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியை போல ஊழலில் ஈடுபடவில்லை. ஆனால், 2 ஆண்டுகளே ஆட்சி நடத்திய தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளது

    தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை குடித்து 22 குடும்பங்கள் துயரத்தில் இருக்கின்றன. ஆனால், வெளிநாட்டில் முதல்-அமைச்சர் சொகுசாக இருக்கிறார். தமிழகம் கள்ளச்சாராய மாநிலமாக மாறிவிட்டது. இதற்கு தி.மு.க.தான் காரணம். ரூ.44 ஆயிரம் கோடி டாஸ்மாக் வழியாக வருவாய் ஈட்டும் மாநிலமாக தமிழகத்தை தி.மு.க. மாற்றி இருக்கிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. அரசு மீது கோபத்தில் இருக்கின்றனர். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணாமலை பேசி கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்தது. அதனையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் அவர் பேசினார். இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, பா.ஜனதா மண்டல் தலைவர்கள் 1200 பேருக்கு, அண்ணாமலை வெள்ளி மோதிரம் வழங்கினார்.

    • தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட 8 சதவீத வட்டார வரியை ரத்து செய்ய வேண்டும்.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    மதுரை, ராமநாதபுரம் ஒருங்கிணைந்த சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் எம்.ஓ. சாகுல் ஹமீது, இணைச் செயலாளர் தாமஸ், பொருளாளர் மாணிக்கம் ஆகியோர் பேசினர்.

    கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நடிகர்-நடிகைகளின் சம்பள உயர்வால் தமிழ் படங்களின் விலை அபரி தமாக உயர்ந்துள்ளது. எனவே சம்பளத்தை குறைக்க வேண்டும்.

    திரையரங்குகளுக்கு தமிழ்நாடு அரசால் விதிக்கப்பட்டிருக்கும் 8 சதவீத வட்டார வரி விதிப்பு முழுவதும் ரத்து செய்ய வேண்டும்.

    திரையரங்கு உரிமையாளர்கள்-விநியோகஸ்தர்கள் ஒருங்கிணைந்து கூட்டு கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஆன்லைனில் மோசடி செய்த ரூ.30 லட்சம் மீட்கப்பட்டது.
    • பொதுமக்கள் 9498181206 என்ற எண்ணில் புகார் செய்யலாம்.

    மதுரை

    தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் செயற்குழு கூட்டம் மதுரை யில் உள்ள சங்க அரங்கத்தில் நடந்தது. சங்கத்தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் கூறியதாவது:-

    காவல்துறையினர் தொழில்துறையினருடன் இணக்கமான சூழலில் இருக்கிறோம். சரக்குகளை ஏற்றிச்செலவதற்கு வாகன போக்குவரத்து வியாபாரி களுக்கு மிகவும் முக்கிய மானதாகும. அப்போது பிரச்சினை ஏற்படும்போது போலீசார் மிகவும் உதவியாக இருக்கிறோம்.

    சமீபத்தில் பைக்-லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அதில் தவறு பைக் ஓட்டி வந்தவர் மீதுதான் என்று தெரிந்தது. இது என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது பற்றி நான் விசாரித்தபோது மோதிய 2 வாகனங்களில் எது பெரியதோ அதன்மீது தான் வழக்கமாக வழக்குப்பதிவு செய்து உள்ளோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    நான் அவர்களை எச்சரித்து தவறு இருப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள். பொய்யாக இப்படி செய்யாதீர்கள் என்று சொல்லி உண்மை குற்றவாளி மீது வழக்குப்பதிய கூறினேன்.

    டோல்கேட் அருகே சரக்கு வாகனங்களை மறித்து பணவசூல் செய்வதாக எனக்கு தகவல் கிடைத்தது. நான் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை செய்தேன். பின்னர் இதில் தொடர்பு டைய ஆர்.ஐ. மீது நடவடிக்கை எடுத்தேன். அவர் உடனடியாக விருது நகருக்கு மாற்றப்பட்டார். இவ்வா றாக வியாபா ரிகளின் நியாயமான புகாருக்கு உதவியாக இருந்து வருகி றோம்.

    மேலும் இணைய வழியில் வர்த்தகம் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக பண பரிவர்த்தனை செய்ய வேண்டும். வெளி மாநிலங்களில் நிறைய மோசடி கும்பல் செயல் படுகின்றன. அவர்கள் போலியான ஜி.எஸ்.டி. எண்கள் வைத்து போலியான முகவரியில் செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்தவர்கள் 1 மணி நேரத்துக்குள்ளாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்தால் இழந்த பணத்தை உடனடியாக மீட்டு விடலாம்.

    மதுரை மாவட்டத்தில் ரூ.30 லட்சம் மீட்க்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் ஓராண்டில் கஞ்சா வழக்குகளில் ரூ. 9 கோடி அளவிற்கு சொத்துக் கள் முடக்கக்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்தில் நடைபெறும் குற்றச்செயல்கள் குறித்து பொதுமக்கள் 9498181206 என்ற எண்ணில் புகார் செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருடப்பட்டிருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஆனையூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தமிழ் நகரை சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி சோலையம்மாள் (வயது45). இவர்கள் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டனர். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகை,வெள்ளி கொலுசு, ரூ.50 ஆயிரம் மற்றும் டி.வி. உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சோலையம்மாள் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை எஸ்.ஆலங்குளம் டிசைன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது54), ஆட்டோ டிரைவர். இவர் அண்ணா பஸ் நிலையம் அருகில் நின்றபோது சிறுவன் உள்பட 2பேர் அவரிடம் தகராறு செய்தனர். அப்போது ரவிக்குமாரை, 2 பேரும் தாக்கினர்.

    இது குறித்து ரவிக்குமார் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை தாக்கிய சக்கிமங்கலம் இளமனூரை சேர்ந்த வினோத்குமார் (32) என்பவரையும், 17 வயது சிறுவனையும் கைது செய்தனர்.

    • தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது.
    • ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மதுரை விமான நிலையம் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவோம் என்று கூறியுள்ளது தமிழக அரசு அனுமதி பெறாமல் அணை கட்ட முடியாது. தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள குறைபாடுகளை நீக்கி மீண்டும் அங்கீகாரம் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ., இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர். ராஜ் மோகன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், ஊராட்சி தலைவர் முத்தையா, வழக்கறிஞர்கள் சரவணன், சுந்தரா, முருகேசன், மாரிசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×