என் மலர்
மதுரை
- மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா இன்று தொடங்கியது.
- 25-ந்தேதி சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூல திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா ஆகியவை பிரசித்தி பெற்றவை.
இந்த ஆண்டு ஆவணி மூல திருவிழாவை முன்னிட்டு நேற்று (12-ந் தேதி) வாஸ்து சாந்தி நடந்தது. தொடர்ந்து இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. கொடி மரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பிரியா விடையுடன் சுந்தரேசுவர ரும், மீனாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அவர்க ளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியையும், அம்மனையும் தரிசனம் செய்தனர்.
30-ந்தேதி வரை 19 நாட்களுக்கு ஆவணி மூல திருவிழா சிறப்பாக நடை பெற உள்ளது. இந்த நாட்களில் கோவில் சார்பாகவோ, உபயதாரர் கள் சார்பாகவோ தங்க கவசம், வைர கிரீடம், உபய திருக்கல்யாணம், தங்க ரத உலா சேவைகள் நடத்தப் படாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் காலை, மாலை 2 வேளைகளிலும் 4 ஆவணி மூல வீதிகளிலும் சுவாமியும், அம்மனும் பஞ்ச மூர்த்திக ளுடன் வீதிஉலா வந்து மண்டகப்படிகளில் எழுந்த ருளி பின்பு கோவிலை வந்தடைவர்.
இன்று முதல் 18-ந்தேதி வரை சந்திரசேகர் உற்சவம், 2-ம் பிரகாரம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 19-ந்தேதி ஆவணி மூல திருவிழா முதல் நாள் உற்சவத்தில் கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளை யாடல் நடைபெறும்.
தொடர்ந்து 20-ந்தேதி நாரைக்கு மோட்சம் அளித்தல், 21-ந்தேதி மாணிக்கம் விற்றல், 22-ந்தேதி தருமிக்கு பொற்கிழி அருளியது, 23-ந்தேதி உலவாக் கோட்டை அருளியது, 24-ந்தேதி பாணனுக்கு அங்கம் வெட்டியது, இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு திருவிளையாடல், 25-ந்தேதி வளையல் விற்ற திருவிளையாடல் நிகழ்ச்சி யும், இரவு 7.35 மணிக்கு சுந்தரேசுவரருக்கு பட்டாபி ஷேகமும் நடைபெறும். 26-ந்தேதி நரியை பரியாக்கியது, குதிரைக்கு கயிறு மாறியது, 27-ந்தேதி பிட்டுக்கு மண் சுமந்தது, 28-ந்தேதி விறகு விற்றல் ஆகிய திருவிளை யாடல் நிகழ்ச்சிகள் நடை பெறும்.
27-ந்தேதி பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையா டல் நிகழ்ச்சியில் அதிகாலை யில் சுவாமியும், அம்மனும் பஞ்ச மூர்த்திகளுடன் பிட்டு தோப்புக்கு செல்வர். அங்கு பிட்டு திருவிழா நடை பெறும். இந்த திருவிழாவில் திருவாதவூர் மாணிக்கவாசக ரும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமியும் மதுரைக்கு எழுந்தருளுவர்.
அன்று இரவு 9.30 மணிக்கு பிறகு மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்தற்கு அனுமதிக்கப் படுவர். அன்றைய தினம் இரவு வடக்கு கோபுரம் வழி யாக ஆயிரம்கால் மண்ட பத்தை பார்வையிடுவதற்கும் அனுமதி அளிக்கப்படும்.
- அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
- இதுகுறித்து திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை சிம்மக்கல் வக்கீல் புதுத்தெரு பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதியில் பணியில் இருந்த தூய்மை பணி மேற்பார்வையாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தர். திலகர் திடல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்
மதுரை ரெயில் நிலைய கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 1989-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் நடந்ததை நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்
- ஒத்திகை பார்த்து ஜெயலலிதா நடத்திய நாடகம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் தெரிவித்திருந்தார்
மக்களவையில் மணிப்பூர் சம்பவத்தையோட்டி பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி துரியோதனன் சபையில் திரவுபதியின் துயில் உரித்தது போன்று நடக்கிறது என்று பேசினார்.
இதற்கு பதில் அளித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் அவமானப்படுத்தப்பட்டு ஜெயலலிதாவின் சேலையை இழுத்த கட்சி தி.மு.க. என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளிக்கின்ற வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட நாடகம் என்று பொய் சொல்கிறார். இவ்வளவு நாள் தூங்கிக் கொண்டிருந்தார் போல் தெரிகிறது. நான் அந்த சம்பவம் நடக்கும்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். நானும் அந்த அவையிலே இருந்து அதை நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி முன்னிலையில் பெண் என்றும் பாராமல், ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்றும் பாராமல் ஒரு கொடூர தாக்குதல் நடந்தது.
திட்டமிட்டே அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி முன்பே தி.மு.க. எல்.எல்.ஏ.க்கள் அம்மாவை கடுமையாக தாக்கினார்கள். அப்போது திருநாவுக்கரசும் அதனை தடுத்தார். அப்போது, தற்போதைய மூத்த அமைச்சர் சேலையை பிடித்தும், தலைமுடியை பிடித்து இழுத்தும் ஒரு கோர தாக்குதலை நிகழ்த்தினார்கள்.
இதுபோன்ற சம்பவம் எந்த மாநிலத்திலும், எந்த ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினருக்கும், எந்த எதிர்க்கட்சி தலைவருக்கும் நடந்தது கிடையாது. இன்னும் அந்த சம்பவம் எங்கள் நெஞ்சில் இருந்து நீங்காமல் இருக்கிறது. அந்த சம்பவம் நடைபெற்ற தினத்தை கருப்பு தினமாகவே நான் கருதுகிறேன். நான் மீண்டும் சட்டமன்றத்தில் நுழைகின்ற பொழுது தமிழக முதல்-அமைச்சராக நிச்சயம் சட்டமன்றத்துக்கு நுழைவேன் என்று சபதம் ஏற்று அம்மா வெளியில் சென்றார்.
அதன்படி 1991 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் நானும் வெற்றி பெற்றேன். அதன் மூலமாக உண்மை வென்றது, தர்மம் வென்றது, நியாயம் வென்றது. இன்றைய தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறான தகவலை, பொய்யான தகவலை வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான செய்தி வெளியிட்டு தான் ஒரு பொம்மை முதல்வர் என்பதை நிரூபித்துள்ளார்.
இது கடும் கண்டனத்திற்குரியது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் இதற்கு தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். இன்றைக்கு எவ்வளவு பாலியல் வன்கொடுமைக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரு பெண் மீது ஒரு நாட்டினுடைய முதலமைச்சர் கண்ணெதிரே சட்டத்தை பாதுகாக்க கூடிய ஒரு அரசாங்கம் பெண் என்று பாராமல் எதிர்க்கட்சித் தலைவர் என்று பாராமல் அவருடைய சேலையை பிடித்து இழுத்த போது தாக்குதல் நடத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.
அவர்களை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும். இப்படி ஒரு நிகழ்வு தாக்குதல் நடத்தியவர்களின் தங்கைக்கோ, சகோதரிக்கோ, தன் மகளுக்கோ ஏற்பட்டிருந்தால் எப்படி மனம் வேதனைப்பட்டு இருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வுக்கு ரத்து என்று சொல்லிய முதல்வர் இதுவரை ஏன் செய்யவில்லை. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை? எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து இதற்காக குரல் கொடுத்திருக்க வேண்டியதுதானே.
நாங்கள் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் கூட்டணி கட்சியாக இருந்த போதிலும் பாராளுமன்றத்தை 22 நாள் தொடர் போராட்டம் மூலம் முடக்கினோம். அந்த தில் தி.மு.க.வுக்கு இல்லை. இதெல்லாம் ஒரு பொய்யான தேர்தல் வாக்குறுதி. சட்டத்திற்கு முன்பு எல்லோரும் சமம். எல்லா மாநிலத்திலும் நீட் தேர்வு நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழகத்தில் ரத்து செய்வோம் என்று கூறுவது வேடிக்கையான ஒன்று.
தற்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று கூடி இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். இந்த கூட்டம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சென்ற முதல்வர் இந்த கூட்டணியில் இணைவது என்றால் காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்திருக்க வேண்டியது தானே. அப்படி வைத்திருந்தால் இப்போது காவிரியில் தண்ணீர் வந்திருக்கும். விவசாயிகளின் கவலை தீர்ந்திருக்கும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே ஜாதி சண்டை, மத சண்டை வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உடல் தகுதி தேர்வில் தோல்வியால் என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை செய்தார்.
- விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக மேலூர் அரசு மருத்து–வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள புலி–மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி–யன் மகன் விஜய் (வயது 27). சிவில் என்ஜினீயரிங் பட்ட–தாரியான இவர் படிப்பை முடித்துவிட்டு தகுதியான வேலையை தேடிக்கொண்டு இருந்தார். இதற்காக அவர் பல்வேறு நேர்முகத்தேர்வு–களையும் சந்தித்துள்ளார்.
ஆனாலும் உரிய வேலை கிடைக்கவில்லை. இதற்கி–டையே அவர் தனது நண்பர் களின் ஆலோசனைப்படி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்பினார்.
இதற் காக அவர் விண்ணப் பித்து இருந்தார். கடந்த சில மாதங்க–ளுக்கு முன்பு விஜய்க்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது.
அதற்காக தகுந்த சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கான உடல் தகுதி தேர்வினை தனியார் நிறுவனம் நடத்தி–யுள்ளது. இதில் அவர் தோல்வி அடைந்தார்.
இத–னால் மிகுந்த மன விரக்திக்கு ஆளான விஜய் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெ–டுத்தார்.
இதையடுத்து இன்று காலை வீட்டில் இருந்த அவர் தனி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து–கொண்டார். வெளியில் சென்றிருந்த அவரது பெற் றோர் மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறித்துடித்தனர். இதுபற்றி அவர்கள் கீழவளவு போலீ–சாருக்கும் தகவல் தெரிவித்த–னர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மேலூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் மன்னவன், கீழவ–ளவு சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் மற்றும் போலீ–சார் தற்கொலை செய்து–கொண்ட விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக மேலூர் அரசு மருத்து–வமனைக்கு அனுப்பி வைத் தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி–றார்கள்.
- கட்டி முடித்து 5 ஆண்டுகளாகியும் அங்கன்வாடி மையம் பயன்பாட்டுக்கு வரவில்லை.
- அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.8.50 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத அங்கன்வாடி மையத்தால் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமுதாயக்கூடத்தில் பயின்று வருவது பெற்றோர்கள் மத்தியில் வேதனையை உருவாக்கி யுள்ளது.
அங்கன்வாடி மையம் பயன்பாட்டிற்கு வராமலேயே கடந்த 2022-23-ம் ஆண்டில் அங்கன் வாடி மையம் பராமரிப்பு செய்தல் என்ற பெயரில் 1.75 லட்சம் மதிப்பில் மராமத்து பணியும் செய்துள்ளது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளா க்கியுள்ளது.
மேலும் பேவர் பிளாக் அமைத்தல் என்ற பெயரில் 4.55 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி முன்பு பேவர் பிளாக் அமைத்து சாலையும் அமைத்துள்ள ஊரக வளர்ச்சித் துறையினர் அங்கன்வாடி மையத்தை திறப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் குழந்தைகள் தற்போது சமுதாய கூடத்தில் உள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளாக திறக்கப்ப டாமல் உள்ள நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் குழந்தை களை தங்கி படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அங்கன்வாடி மையத்தை திறக்க அதிகா ரிகளிடம் பொதுமக்கள் சார்பிலும் ஊராட்சி மன்றத்தின் சார்பிலும் தொடர்ந்து முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் குழந்தை களை சமுதாய கூடத்தில் தொடர்ந்து தங்க வைக்க முடியாத நிலை உள்ளது. ஆகையால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாநாட்டில் அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
- முன்னாள் அமைச்சர்களிடம் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
மதுரை:
மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டுப் பணிகளை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாநாட்டில் அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதற்கேற்ப சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றவாறு பந்தல் அமைக்கப்படுகிறது.
வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் இருந்து வாகனங்களை நிறுத்துவதற்கு தனித்தனியாக விரிவான பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் முக்கிய பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பணியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் மாநாட்டு திடலில் முகாமிட்டு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்கள்.
வருகிற 16-ந்தேதிக்குள் மாநாட்டு பணிகள் அனைத்தும் நிறைவடைய உள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை திடீரென மாநாடு நடைபெறும் வலையங்குளம் பகுதிக்கு வந்தார்.
இதற்காக இன்று அதிகாலை சேலத்தில் இருந்து காரில் புறப்பட்ட அவர் மாநாட்டு திடலுக்கு வருகை தந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அ.தி.மு.க.வினர் வந்தனர். மாநாட்டு திடலுக்கு எடப்பாடி பழனிசாமி வந்ததும் அவரை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், கே.டி.ராஜேந்திர பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ஐ.டி. பிரிவு ராஜ் சத்யன் உள்ளிட்டோர் வரவேற்றனர் .
இதைத்தொடர்ந்து அங்கு முன்னாள் அமைச்சர்களிடம் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். அப்போது மாநாட்டில் மேடை மற்றும் பந்தல் அமைப்பு, பார்க்கிங் வசதி, சமையல் கூடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பான வரைபடத்தை முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்தனர்.
அப்போது அவரும் அதை பார்த்து மாநாட்டு பந்தல் மற்றும் சமையல் கூடங்கள் அமைய உள்ள பகுதிகளை சுற்றிப் பார்த்தார். மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
வாகனங்கள் நிறுத்துமிடங்களில் கூடுதலாக வாகனங்களை நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யவும், மாநாட்டுக்கு வருபவர்கள் நெரிசலில்லாமல் செல்லவும் பொது மக்களுக்கு இடையூறு இன்றி வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாநாட்டு திடலில் இருந்த எடப்பாடி பழனிசாமி கப்பலூர் பகுதிக்கு சென்று காலை உணவு அருந்திய பின்னர் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
- கிளெஸ்டர் அளவிலான போட்டிகளில் ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
- அலங்காநல்லூரில் நடைபெற்ற வாலிபால் போட்டியை தமிழக பத்திரப் பதிவு துறை அமைச்சர் திரு. மூர்த்தி தொடங்கி வைத்தார்.
ஈஷா அவுட்ரீச் சார்பில் தென்னிந்திய அளவில் நடத்தப்படும் 15-வது 'ஈஷா கிராமோத்வசம்' திருவிழாவின் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆக.12) கோலாகலமாக தொடங்கியது.
70-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற கிளெஸ்டர் அளவிலான இப்போட்டிகளில் ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டு வீரர், வீராங்கணைகளாக கலந்து கொண்டனர். மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற வாலிபால் போட்டியை தமிழக பத்திரப் பதிவு துறை அமைச்சர் திரு. மூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைத்தார்.
இதேபோல், புதுச்சேரி கூடப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியை புதுச்சேரி பொது விநியோகம் மற்றும் சமூக மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. சாய் சரவணக்குமார் அவர்களும், ஈரோட்டில் நடைபெற்ற த்ரோபால் போட்டியை பாஜக சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சரஸ்வதி அவர்களும் தொடங்கி வைத்தனர்.

இதுதவிர, கோவை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், கடலூர், வேலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகள், கவுன்சிலர்கள், காவல் துறையினர் என பல தரப்பினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று தொடங்கி வைத்தனர்.
இந்த கிளெஸ்டர் போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெறும். முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும், தேர்வாகும் அணிகள் அடுத்த மாதம் நடைபெறும் டிவிஸினல் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு செப்.23-ம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
- கொலை முயற்சியில் தொடர்புடைய 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் கண்காணித்து வந்தனர்.
மதுரை
மதுரை கீரைத்துரை மேலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் நிறைகுளத்தான். இவரது மகன் சதீஷ்குமார் (வயது24). இவர் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டி ருந்தார். அவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இதில் அவர் பொதுமக்க ளுக்கும், பொது அமைதிக் கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து நடந்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து சதீஷ் குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தென்மண்டல ஐ.ஜி.யும், மதுரை நகர் கூடுதல் பொறுப்பு போலீஸ் கமிஷனருமான நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து சதீஷ்கு மாரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
காமராஜர்புரம் திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் மணிகண்டன் என்ற குட்டமணி (22). இவர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர். அவரை போலீசார் கண்காணித்து வந்தனர்.
இதில் பொதுமக்க ளுக்கும், பொது அமை திக்கும் குந்தகம் விளை விக்கும் வகையில் செயல் பட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நரேந்திரன்நாயர் உத்தரவின் பேரில் போலீசார் மணி கண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
கீரைத்துரை மேல தோப்பு 3-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சரவணன் என்ற கோபி சரவணன். கொலை வழக்கில் சம்பந்தப் பட்ட இவர் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து நரேந்திரன் நாயர் உத்தர வின்பேரில் போலீசார் சரவணனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
மதுரையில் ஒரே நாளில் 3 வாலிபர்களை போலீசார் அதிரடியாக குண்டர் சட்டத் தில் கைது செய்துள்ளனர்.
- மதுரையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.6 லட்சம் நகை-பணம் திருட்டு சம்பவம் நடந்தது.
- மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை தனக்கன்குளம் பைரவர் நகர் 6-வது குறுக்கு தெரு திருவள்ளுவர் நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது45). இவர் குடும்பத்து டன் வெளியூர் சென்றிருந் தார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 11 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 500-ஐ கொள்ளை யடித்து சென்று விட்டனர்.
வெளியூரில் இருந்து பாஸ்கரன் திரும்பி வந்து பார்த்தபோது நகை-பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.
இதுகுறித்து திருநகர் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்ற னர்.
அண்ணா நகர் மஸ்தான் பட்டி மீனாட்சிபட்டியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான டவர் ஒன்று உள்ளது. இந்த டவரில் 24 பேட்டரிகள் பொருத்தப் பட்டிருந்தன. இங்கு காவலாளியாக சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சந்திரன் (40) என்பவர் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் டவரில் பொருத்தப்பட்டிருந்த 24 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து சந்திரன் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆழ்துளை கிணறு விபத்து தடுப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
- பல வேளைகளில் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டத்தில் உள்ள பராமரிப்பு இல்லா மல் கைவிடப்பட்ட நிலை யில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், குவாரிக்குழி கள் போன்றவை மனிதர்க ளுக்கு குறிப்பாக குழந்தை களுக்கு பெரிய அச்சுறுத்த லாக உள்ளன. இதனால் பல வேளைகளில் உயிரிழப்பு களும் நிகழ்கின்றன. இதைத் தவிர கால்நடைகள் உள்ளிட்ட பிற உயிர்க ளுக்கும் இவ்வகையான கிணறுகள் அச்சுறுத்தலாக உள்ளன.
ஆழ்துளை கிணறு விபத்துக்களை தடுப்ப தற்கான பாதுகாப்பு வழி காட்டு நெறி முறைகளை 2010-ம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் வகுத்தளித்தி ருக்கிறது. அந்த வழிகாட்டி நெறி முறைகள் அனைத்தை யும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்வதற்கு மாவட்டங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள பசுமை நிதி மாவட்டக் கனிம நிதி ஆகிய நிதி ஆதாரங்களைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.
திறந்த வெளிகிணறுகள், ஆழ்துளை கிணறுகள், சாலையோர கட்டுமான பள்ளங்கள், சாலையோர கால்வாய்கள், கைவிடப் பட்ட குவாரி கிடங்குகள் ஆகியவற்றில் விபத்து ஏற்படாவண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக தலைமை செயலரும் ஆலோசனை வழங்கி உள்ளார்.
அந்த ஆலோசனையின் படி அனைத்து கிராமங்க ளிலும் உள்ள திறந்த வெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், சாலையோரங்க ளில் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள், ஆழமான கால்வாய்கள் ஆகியவை குறித்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும். அவற்றில் அந்தந்த துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட விபத்து தடுப்பு நடவடிக்கை கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- மதுரை மாவட்டத்தில் நடந்த 31,750 மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க விழாவில் கலெக்டர் பங்கேற்றார்.
- அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்று நடும் பணி நடைபெறும்.
மதுரை
மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் என் மண் என் தேசம் நிகழ்ச்சி மூலமாக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளில் 75 மரக்கன்றுகள் வீதம் 31,750 மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் ஆண்டாள் கொட்டாரம் கிராமத்தில் உள்ள பள்ளியில் மரக்கன்று நடும் பணியை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அரவிந்த், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, நேரு யுவகேந்திரா இணை இயக்குனர் செந்தில்குமார் உள்பட பல கலந்து கொண்டனர். அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தியாகிகளின் பங்களிப்புடன் இந்த மரக்கன்று நடும் பணி நடைபெறும் என்றும், மேலும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் இந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதிய சாலை அமைக்கும் பணிகள் 20 நாட்களில் தொடங்கப்படும்
- சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் மூர்த்தியிடமும், மதுரை மாவட்ட கலெக்டரிடமும் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தனியாமங்கலம், சாத்தமங்க லம், சருகுவலையப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆற்று ஓரத்தில் மண் சாலை உள்ளது. இங்கு தார் சாலை அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி விவசாயி கள் சில நாட்க ளுக்கு முன்பு அமைச்சர் மூர்த்தியிடமும், மதுரை மாவட்ட கலெக்ட ரிடமும் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் இன்று அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகி யோர் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட னர். விவசாயிகள் பயன் பெறும் வகையில் புதிய சாலைகளை அமைப்பதற்கு ஏதுவாக பாதை உள்ளதா? என அவர்கள் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் கூறுகையில், புதிய தார் சாலை அமைக்கும் பணி இன்னும் 20 நாட்களில் தொடங்கப்படும் என்றார்.
ஆய்வின் போது மேலூர் நகர் தலைவர் முகமது யாசின், ஒன்றிய செயலா ளர்கள் பாலு, ராஜராஜன், மூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைபுகழேந்தி, வேலாயுதம், பொது குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதாஅப்பாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






