search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடல் தகுதி தேர்வில் தோல்வியால் என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை
    X

    உடல் தகுதி தேர்வில் தோல்வியால் என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை

    • உடல் தகுதி தேர்வில் தோல்வியால் என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை செய்தார்.
    • விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக மேலூர் அரசு மருத்து–வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள புலி–மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி–யன் மகன் விஜய் (வயது 27). சிவில் என்ஜினீயரிங் பட்ட–தாரியான இவர் படிப்பை முடித்துவிட்டு தகுதியான வேலையை தேடிக்கொண்டு இருந்தார். இதற்காக அவர் பல்வேறு நேர்முகத்தேர்வு–களையும் சந்தித்துள்ளார்.

    ஆனாலும் உரிய வேலை கிடைக்கவில்லை. இதற்கி–டையே அவர் தனது நண்பர் களின் ஆலோசனைப்படி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்பினார்.

    இதற் காக அவர் விண்ணப் பித்து இருந்தார். கடந்த சில மாதங்க–ளுக்கு முன்பு விஜய்க்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது.

    அதற்காக தகுந்த சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கான உடல் தகுதி தேர்வினை தனியார் நிறுவனம் நடத்தி–யுள்ளது. இதில் அவர் தோல்வி அடைந்தார்.

    இத–னால் மிகுந்த மன விரக்திக்கு ஆளான விஜய் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெ–டுத்தார்.

    இதையடுத்து இன்று காலை வீட்டில் இருந்த அவர் தனி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து–கொண்டார். வெளியில் சென்றிருந்த அவரது பெற் றோர் மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறித்துடித்தனர். இதுபற்றி அவர்கள் கீழவளவு போலீ–சாருக்கும் தகவல் தெரிவித்த–னர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மேலூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் மன்னவன், கீழவ–ளவு சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் மற்றும் போலீ–சார் தற்கொலை செய்து–கொண்ட விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக மேலூர் அரசு மருத்து–வமனைக்கு அனுப்பி வைத் தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி–றார்கள்.

    Next Story
    ×