என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வீட்டின் கதவை உடைத்து ரூ.6 லட்சம் நகை-பணம் திருட்டு
- மதுரையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.6 லட்சம் நகை-பணம் திருட்டு சம்பவம் நடந்தது.
- மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை தனக்கன்குளம் பைரவர் நகர் 6-வது குறுக்கு தெரு திருவள்ளுவர் நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது45). இவர் குடும்பத்து டன் வெளியூர் சென்றிருந் தார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 11 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 500-ஐ கொள்ளை யடித்து சென்று விட்டனர்.
வெளியூரில் இருந்து பாஸ்கரன் திரும்பி வந்து பார்த்தபோது நகை-பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.
இதுகுறித்து திருநகர் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்ற னர்.
அண்ணா நகர் மஸ்தான் பட்டி மீனாட்சிபட்டியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான டவர் ஒன்று உள்ளது. இந்த டவரில் 24 பேட்டரிகள் பொருத்தப் பட்டிருந்தன. இங்கு காவலாளியாக சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சந்திரன் (40) என்பவர் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் டவரில் பொருத்தப்பட்டிருந்த 24 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து சந்திரன் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்