என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    தேன்கனிக்கோட்டை அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கச்சுவாடி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ரவி (வயது 29) என்பவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    பாகலூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    பாகலூர் அருகேயுள்ள பெலத்தூர் ஜீவா நகரை சேர்ந்தவர் ஆஞ்சனப்பா. இவரது மனைவி காயத்திரி (வயது 26). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட காயத்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சூளகிரி அருகே கார் மோதி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 43), வேன் டிரைவர். சம்பவத்தன்று, ஓசூர் -கிருஷ்ணகிரி சாலையில் அட்டகுறுக்கி அருகே அவர் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக சென்ற ஒரு கார், அவர் மீது மோதியது. இதில் மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் போலீசார் குரும்பட்டி ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அதேபகுதியை சேர்ந்த சம்பத் (வயது 40), கோவிந்தசெட்டி தெரு மணிகண்டன் (29) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செயதனர்.
    கிருஷ்ணகிரியில் நடந்த இரட்டை கொலையில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி வீரப்பன் நகர் 4-வது கிராசை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 50). மரவேலை செய்து வந்தார். இவரது மனைவி பப்பிராணி (45). புகழேந்தியின் அண்ணன் மகன் லோகேஷ் என்கிற லல்லு (19). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். புகழேந்தி குடும்பத்திற்கும், லோகேஷ் குடும்பத்திற்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை புகழேந்தி மனைவியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது லோகேஷ், அவரது நண்பர்கள் காவேரிப்பட்டணம் அம்பேத்கர் தெரு சதீஷ் (19), முகேஷ் (23) ஆகிய 3 பேரும் புகழேந்தியை சரமாரியாக கத்தியால் குத்தினார்கள்.

    அதை தடுக்க வந்த அவரது மனைவி பப்பிராணியையும் அவர்கள் குத்தினார்கள். இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். சத்தம் கேட்டு அங்கு வந்த புகழேந்தியின் தம்பி கரிகாலன், அவரது மனைவி சரசு ஆகிய 2 பேரும் அங்கு வந்தனர். அவர்களையும் லோகேஷ் உள்ளிட்ட 3 பேரும் கத்தியால் குத்தினார்கள். இதில் அவர்களும் பலத்த காயம் அடைந்தனர்.

    இந்த இரட்டை கொலை குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த கரிகாலன், அவரது மனைவி சரசு ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஷ், சதீஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த முகேசை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சொத்து தகராறில், லோகேஷ், தனது சித்தப்பா, சித்தி ஆகியோரை நண்பர்கள் உதவியுடன் கொலை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குருபரப்பள்ளி அருகே வாகனம் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியை அடுத்த குந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 57). விவசாயி. இவர் கடந்த 4-ந் தேதி மாலை குருபரப்பள்ளி- நடுசாலை சாலையில் பீமாண்டப்பள்ளி அருகே தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராமசாமி ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சொத்து தகராறில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி வீரப்பன் நகரை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 55). இவர் மரவேலை செய்து வந்தார். இவரது மனைவி பப்பி ராணி (45). புகழேந்திக்கும் அவரது அண்ணன் இளங்கோவிற்கும் இடையே சொத்து தகராறு உள்ளது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை இளங்கோவின் மகன் லோகேஷ் (18), அவரது நண்பர் சதீஷ் (18) ஆகிய இருவரும் புகழேந்தி வீட்டிற்குச் சென்றனர். அங்கு புகழேந்தியிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த லோகேஷ் அவரது நண்பர் சதீஷ் ஆகிய இருவரும், புகழேந்தியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். தடுக்க வந்த அவரது மனைவி பப்பி ராணிக்கும் வெட்டு விழுந்தது.

    இதில் கணவன், மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின்போது புகழேந்திக்கு ஆதரவாக பேசிய பக்கத்து வீட்டுக்காரர் கரிகாலன்(50), அவரது மனைவி சரசு (40)ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கபட்டனர்.

    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட கணவன், மனைவி உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தம்பதியை கொலை செய்த லோகேஷ், அவரது நண்பர் சதீஷ் ஆகிய இருவரையும் கிருஷ்ணகிரி நகர போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. சொத்து தகராறில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மருத்துவம் படிக்காமல் கிளினிக்கில் மருந்துகளை வைத்து பொதுமக்களுக்கும், கொரோனா நோயாளிகளுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூர் மலைக்கிராமத்தை சேர்ந்தவர். ஆனந்தன் (வயது 42). தர்மபுரி மாவட்டம் பருவதனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து (47). இவர்கள் இருவரும் முறையாக மருத்துவம் படிக்காமல் கோட்டையூர் மலைக்கிராமத்தில் கிளினிக் நடத்தி வருவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன. மேலும் அவர்கள் கிளினிக்கில் கொரோனா மற்றும் பிற நோய்களுக்கும் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

    இதனையடுத்து கலெக்டரின் உத்தரவின்பேரில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் போலீசார் கோட்டையூர் மலைக்கிராமத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் நடத்தி வரும் கிளினிக்கிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஆனந்தனும், அங்கமுத்துவும் மருத்துவம் படிக்காமல் கிளினிக்கில் மருந்துகளை வைத்து பொதுமக்களுக்கும், கொரோனா நோயாளிகளுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் போலி டாக்டர் ஆனந்தனை கைது செய்தனர்.

    மேலும் போலீசார் வருவதை அறிந்ததும் மற்றொரு போலி டாக்டர் அங்கமுத்து அங்கிருந்து தப்பியோடி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
    தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:


    ஊத்தங்கரை (தனி)
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    தமிழ்செல்வம்அதிமுக99675
    ஆறுமுகம்காங்கிரஸ்71288
    பாக்கியராஜ்தேமுதிக2291
    முருகேசன்மநீம1254
    இளங்கோவன்நாம் தமிழர்10424
    பர்கூர்
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    தே.மதியழகன்திமுக97256
    கிருஷ்ணன்அதிமுக84642
    கணேசகுமார்அமமுக1064
    அருண்கவுதம்இஜக345
    கருணாகரன்நாம் தமிழர்10113
    கிருஷ்ணகிரி
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    கே.அசோக்குமார்அதிமுக96050
    டி.செங்குட்டுவன்திமுக95256
    அமீனுல்லாஓவைசி858
    ரவிசங்கர்மநீம3455
    நிரந்தரிநாம் தமிழர்11137
    வேப்பனஹள்ளி
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    கே.பி.முனுசமிஅதிமுக94104
    பி.முருகன்திமுக91050
    முருகேசன்தேமுதிக3601
    ஜெயபால்மநீம672
    சக்திவேல்நாம் தமிழர்8310
    ஓசூர்
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    பிரகாஷ்திமுக118231
    ஜோதி பால கிருஷ்ண ரெட்டிஅதிமுக105864
    மாரேகவுடாஅமமுக806
    மசூத்மநீம6563
    கீதாலட்சுமிநாம் தமிழர்11422
    தளி
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    ராமச்சந்திரன்சிபிஐ120641
    நாகேஷ்குமார்பாஜக64415
    சேகர்கோமக346
    அசோக்குமார்இஜக788
    மேரி செல்வராணிநாம் தமிழர்3776
    வேப்பனப்பள்ளி அருகே வாகன சோதனையில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும், கஞ்சா கடத்தி செல்லப்படுவதாகவும் வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று மாலை வேப்பனப்பள்ளி அருகே கொத்த கிருஷ்ணப்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் மூட்டை வைத்தவாறு ஒருவர் வந்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரிடம் விசாரித்தனர். அதில் அவர் தீர்த்தம் கிராமத்தை சேர்ந்த ராஜப்பன் (வயது 40) என தெரியவந்தது.

    மேலும் ராஜப்பன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே அவர் கொண்டு வந்த மூட்டையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த மூட்டையில் சுமார் 30 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ராஜப்பனை கைது செய்த போலீசார் 30 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரனையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கெலமங்கலம் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ராயக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் சின்னட்டியை சேர்ந்தவர் சங்கரய்யா (வயது 29). இவர் அக்கொண்டப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இந்தநிலையில் சங்கரய்யா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சசிகலா கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தற்போது தி.மு.க ஆட்சி அமைந்திருப்பதால் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் வாய்ப்பே கே.பி.முனுசாமிக்கு கிடைத்துள்ளது.
    வேப்பனப்பள்ளி:

    தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 6ம் தேதி நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமியும், தி.மு.க சார்பில் முருகனும் போட்டியிட்டனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த 2-ந் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமி வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும் கட்சியில் துணை ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். கடந்த 2011ம் ஆண்டு கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளாட்சித்துறை அமைச்சரான கே.பி.முனுசாமி, 2014ம் ஆண்டு மே மாதம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    பின்னர் 2016 தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் முதலில் வேட்பாளராக ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டார்.

    பிறகு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தோல்வி அடைந்தார். இதையடுத்து ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார் வெற்றி பெற்றார். அதன் பின்னர் அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டு உறுப்பினர் ஆனார். இந்த நிலையில் தான் 2021 சட்டசபை தேர்தலில் வேப்பனப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

    அதிமுக

    எப்படியும் அ.தி.மு.க ஆட்சி அமையும். அதன் பிறகு, தான் அமைச்சர் ஆகி விடலாம். பிறகு எம்.பி. பதவியை துறந்து விடலாம் என கே.பி.முனுசாமி திட்டமிட்டிருந்தார்.

    ஆனால் தற்போது தி.மு.க ஆட்சி அமைந்திருப்பதால் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் வாய்ப்பே கே.பி.முனுசாமிக்கு கிடைத்துள்ளது. இதனால் இவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு, எம்.எல்.ஏ.வாக பதவியை தொடர்வாரா? அல்லது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு எம்.பி.யாக பதவியை தொடர்வாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.

    இதுபற்றி கே.பி. முனுசாமி எம்.பி.யிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நாம் எம்.பி.யாக தொடர்வதா? அல்லது எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பதா? என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை. இதுபற்றி கட்சியின் தலைமையுடன்ஆலோசனை செய்து முடிவு செய்து அறிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×