search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    குருபரப்பள்ளி அருகே வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு

    குருபரப்பள்ளி அருகே வாகனம் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியை அடுத்த குந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 57). விவசாயி. இவர் கடந்த 4-ந் தேதி மாலை குருபரப்பள்ளி- நடுசாலை சாலையில் பீமாண்டப்பள்ளி அருகே தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராமசாமி ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×