என் மலர்tooltip icon

    கரூர்

    • செந்தில் பாலாஜி தேர்தலின்போது மக்களுக்கு வெள்ளி கொலுசு கொடுத்துள்ளார்.
    • செந்தில் பாலாஜிக்கு அளவுக்கு அதிகமான அதிகாரம் தரப்பட்டுள்ளது.

    மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எந்த போராட்டமாக இருந்தாலும் எங்களது ஆட்சியில் அனுமதி கொடுத்தோம். சிவாஜி கணேசனை விட மிகவும் சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி.

    செந்தில் பாலாஜி தேர்தலின்போது மக்களுக்கு வெள்ளி கொலுசு கொடுத்துள்ளார். செந்தில் பாலாஜிக்கு அளவுக்கு அதிகமான அதிகாரம் தரப்பட்டுள்ளது.

    தேர்தல் முடியும் வரை தான் செந்தில் பாலாஜி திமுகவில் இருப்பார், தேர்தல் முடிந்த பின் எந்த கட்சியில் இருப்பார் என தெரியாது.

    கரூரில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கு மணல் திருட்டு நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியால் அவரையே காப்பாற்றிக் கொள்ள முடியாது, அவரை நம்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு மின்வாரியத்தில் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
    • பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லாமல் எல்இடி திரை மற்றும் மேடை அமைக்கக்கூடாது.

    கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், தவெக-வுக்கு 11 நிபந்தனையுடன் காவல்துறை அனுமதி விதித்துள்ளது.

    நிபந்தனைகள் வருமாறு:

    நிகழச்சி நடத்தும் இடத்தில் உள்ள சென்டர் மீடியன் பகுதிகளில் பிளக்ஸ், பேனர் வைக்கக்கூடாது, அதன்மீது தொண்டர்கள் ஏற கூடாது.

    நிகழ்ச்சி நடைபெறும்போது தவெக தொண்டர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பாத வண்ணம் கூட்டத்தை நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும்.

    நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு மின்வாரியத்தில் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

    ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிட வேண்டும், முதலுதவி சிகிச்சைக்கான முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும்.

    கூட்டத்தை முறையாக நடத்த தீயணைப்பு துறையினர் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் தொடர்பாக மாநகராட்சியிடமும் அனுமதி பெற வேண்டும்.

    திருக்காம்புலியூர் ரவுண்டானா தேசிய நெடுஞ்சாலை என்பதால் ரோடு ரேஷ நடத்த தடை, கூட்டம் முடிந்ததும் கொடி, பேனரை அற்ற வேண்டும்.

    பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லாமல் எல்இடி திரை மற்றும் மேடை அமைக்கக்கூடாது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • விஜய் பிரசாரம் செய்ய லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.
    • விஜய் பரமத்திவேலூர் திருக்காம்புலியூர் வழியாக கரூர் வந்து, பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கரூர்:

    சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை (சனிக்கிழமை) அவர் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    கரூரில் விஜய் பிரசாரம் செய்வதற்கான இடத்தை தேர்வு செய்து அனுமதி பெறுவதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கரூர் வந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையாவை சந்தித்து மனு அளித்தார். அதில் விஜய் பிரசாரம் செய்ய லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.

    தமிழக வெற்றி கழகத்தினர் கொடுத்த 3 இடங்களிலும் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. அதற்கு பதிலாக நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்த ஈரோடு ரோடு வேலுசாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்வதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

    நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு காரில் வரும் விஜய் பரமத்திவேலூர் திருக்காம்புலியூர் வழியாக கரூர் வந்து, பிற்பகல் 3 மணிக்கு பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • விஜய் பிரசாரம் செய்ய லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.
    • தமிழக வெற்றிக்கழகத்தினர் கொடுத்த 3 இடங்களிலும் காவல்துறை அனுமதி அளிக்க வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது.

    கரூர்:

    சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை (சனிக்கிழமை) அவர் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    கரூரில் விஜய் பிரசாரம் செய்வதற்காக லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை, கரூர் பஸ் நிலைய மனோகரா கார்னர் ரவுண்டானா ஆகிய 3 இடங்களில் ஒன்றை ஒதுக்குமாறு காவல்துறையினரிடம் அனுமதி கோரினர். லைட் ஹவுஸ் கார்னர் ஒதுக்குவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு, பின்னர் அந்த இடத்தை ஒதுக்க இயலாது என காவல்துறை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து இடத்தை தேர்வு செய்து அனுமதி பெறுவதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கரூர் வந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையாவை சந்தித்து மனு அளித்தார். அதில் விஜய் பிரசாரம் செய்ய லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.

    ஆனால் காவல்துறையினர் பிரசாரக் கூட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கை, எத்தனை வாகனங்கள் உள்ளிட்ட விவரங்களை கூறினால் மட்டுமே அதற்கேற்றவாறு இடம் ஒதுக்கப்பட்டு அனுமதி வழங்க இயலும் எனக் கூறினர். அதைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் காவல்துறையினர் கேட்ட விபரங்களை நிர்வாகிகள் மூலம் அளிப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இன்று காலை வரை விஜய் பிரசாரம் செய்யும் இடம் இறுதி செய்யப்படவில்லை. தமிழக வெற்றிக்கழகத்தினர் கொடுத்த 3 இடங்களிலும் காவல்துறை அனுமதி அளிக்க வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரசாரம் செய்த ஈரோடு ரோடு வேலுசாமிபுரம் பகுதியில் நின்று பேசுவதற்கு விஜய்க்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

    அவ்வாறு வேலுச்சாமிபுரம் ஒதுக்கப்படும பட்சத்தில் நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் பரமத்திவேலூர் திருக்காம்புலியூர் வழியாக கரூர் வந்து, பிற்பகல் 3 மணிக்கு பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாமக்கல்லில் பிரசாரம் செய்யும் இடம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கரூரில் இதுவரை இறுதி செய்யப்படாமல் உள்ளது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று மதியத்துக்குள் விஜய் பேசும் இடம் உறுதி ஆகும் என காவல்துறை மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • 3-வது கட்ட பிரசாரம் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறுவதாக முன்பு அறிவிக்கப்பட்டது.
    • விஜய் பேசுவதற்கு கரூரில் 4 இடங்களை தமிழக வெற்றிக்கழகத்தினர் தேர்வு செய்துள்ளனர்.

    கரூர்:

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமது அரசியல் பிரவேசத்திற்கு பின்னர் கடந்த 13-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

    முதல் நாளான 13-ந் தேதி திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். பின்னர் கடந்த வாரம் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    3-வது கட்ட பிரசாரம் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறுவதாக முன்பு அறிவிக்கப்பட்டது.

    பின்னர் பிரசாரத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு அன்றைய தினம் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாளை மறுநாள்( சனிக்கிழமை) நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    விஜய் பேசுவதற்கு கரூரில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர், வெங்கமேடு எம்.ஜி.ஆர். சிலை அருகில், ஈரோடு ரோடு வேலுச்சாமி புரம், 80 அடி சாலை ஆகிய 4 இடங்களை தமிழக வெற்றிக்கழகத்தினர் தேர்வு செய்துள்ளனர்.

    காவல்துறை அனுமதி கேட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளனர்.

    அந்த வகையில் கரூரில் அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ள 4 இடங்களில் ஏதேனும் ஒரு இடம் பிரசாரத்துக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. அனேகமாக கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய இடம் ஒதுக்கப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    விஜய் கரூர் வருகையை முன்னிட்டு அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    • தமிழக மக்கள் உரிமை காக்கப்பட வேண்டும். இந்த தமிழ் மண்தான் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்தது.
    • மண்ணை காக்கும் கடமை, பொறுப்பு நமக்குதான் இருக்கு.

    கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மாநிலங்கள்தான் நாட்டிற்கு வலிமையான அடித்தளம் என மத்திய அரசு என்று அல்ல, ஒன்றிய அரசு என அழுத்தமாக சொல்கிறோம். போராடி போராடி தமிழகத்தை தலை நிமிர்த்துகிறோம். இப்படி தலை நிமிர்ந்த தமிழ்நாட்டை ஒருபோதும் தலை குணிய விடமாட்டோம்.

    தமிழக மக்கள் உரிமை காக்கப்பட வேண்டும். இந்த தமிழ் மண்தான் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. மண்ணை காக்கும் கடமை, பொறுப்பு நமக்குதான் இருக்கு. டெல்லி நம் மீது எப்படியெல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஒன்றா? இரண்டா?. இந்தி மொழியை திணிக்கிறார்கள். நீட் தேர்வில் இருந்து விலக்கு தர மறுக்கிறார்கள். கல்வி நிதியை விடுவிக்க மறுக்கிறார்கள். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் உரிமையை பறிக்கிறார்கள்.

    அந்நாள், இந்நாள் என என்றைக்குமே இங்கு அடக்கு முறைக்கு நோ என்ட்ரிதான். ஆதிக்கத்திற்கு இங்கே நோ என்ட்ரிதான். திணிப்புக்கு இங்கே நோ என்ட்ரிதான். மொத்தத்தில் பாஜக-வுக்கு இங்கே நோ என்ட்ரிதான். இது பெரியார், அண்ணா, கலைஞர் செதுக்கிய தமிழ்நாடு.

    மூன்று முறை மத்தியில் ஆட்சி அமைத்தும், தமிழகத்தில் மட்டும் மோடி மஸ்தான் வேலை பழிக்கவில்லையே. இன்னுமா எங்களை பற்றி உங்களுக்கு தெரியல. நம்முடைய உரிமைகள் பறிபோவதை அனுமதிக்கலாமா?. பாஜக-வை தற்போது நாம் தடுத்து நிறுத்தவில்லை என்றால், மாநிலங்கள் இல்லை என்பதை நோக்கி நகருவார்கள்.

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

    • தி.மு.க.வுக்கு நாங்கள்தான் மாற்று எனப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
    • மாற்றோ, மாற்ற வேண்டும் எனச் சொன்னவர்கள் மாறினார்கள் என்றார்.

    கரூர்:

    தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    எடப்பாடி பழனிசாமி கடந்த அ.தி.மு.க. ஆட்சியைக் காப்பாற்றியது பா.ஜ.க.தான் என உண்மையை பேசியிருக்கிறார்.

    கைப்பாவை அரசை தி.மு.க. நீக்கியதாக பா.ஜ.க. நம்மீது வன்மத்தை கக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் தொடர்ந்து நமக்கு எவ்வளவோ குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அதைப் பார்த்து முடங்கி விடுவோம் என நினைச்சாங்க. தி.மு.க. என்ன மிரட்டலுக்கு பயப்படுகிற கட்சியா?

    இந்தியாவிலேயே முதன்முறையாக மாநில கட்சி ஒன்று மாநிலத்தில் ஆட்சியை பிடித்த வரலாற்றை உருவாக்கியர்கள் நாம். நமக்கு 70 வருட வரலாறு இருக்கிறது.

    அதன்பின் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் தி.மு.க.வை அழிப்போம், ஒழிப்போம் எனச் சொன்னார்கள். இப்போவும் சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    தி.மு.க.வுக்கு நாங்கள்தான் மாற்று எனப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்னத்த மாற்ற போறாங்க.

    நம்முடைய கொள்கைதான் நம்முடைய பலம். மாற்றோ, மாற்ற வேண்டும் எனச் சொன்னவர்கள் மாறினார்கள். மறைந்து போனார்கள். தி.மு.க. மட்டும் மாறவில்லை. மக்கள் மனதில் இருந்து மறையவில்லை. இதுதான் தமிழக பாலிட்டிக்ஸ் என தெரிவித்தார்.

    • அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியதே பாஜக தான் என உண்மையை பேசியுள்ளார் எடப்பாடி.
    • தமிழக உரிமைகளுக்காக குரல் கொடுக்க தெம்போ, திராணியோ இல்லாதவர் இபிஎஸ்.

    கரூர்:

    தி.மு.க. முப்பெரும் விழா கரூர் கோடங்கிப்பட்டியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    தி.மு.க. எப்போதும் நெருக்கடிகளுக்கு அஞ்சுகிற கட்சி அல்ல.

    அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியதே பாஜக தான் என உண்மையை பேசியுள்ளார் எடப்பாடி.

    தமிழக உரிமைகளுக்காக குரல் கொடுக்க தெம்போ, திராணியோ இல்லாதவர் இபிஎஸ்.

    எதிர்க்கட்சி தலைவர் என்ற மாண்பின்றி என்னை ஒருமையில் விமர்சிக்கிறார்.

    திராவிட கொள்கை என்னவென்றே தெரியாமல் அதிமுக தலைவராக இருக்கிறார் எபிஎஸ்

    அண்ணாயிசம் பேசிய அதிமுகவினரை அடிமையிசம் பேச வைத்துள்ளார் இபிஎஸ்.

    காலில் விழுந்த பின் முகத்தை மூட கர்ச்சீப் எதற்கு என மக்கள் கேட்கின்றனர்.

    தமிழ்நாட்டைக் காவல்காக்கும் அரணாக விளங்குவது திமுக என தெரிவித்தார்.

    • 2019 முதல் எதிர்கொண்ட எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்திருக்கிறோம்.
    • சாதாரண வெற்றி அல்ல. எதிரிகளை கலங்கடிக்கக் கூடிய வெற்றி பெற்றிருக்கிறோம்.

    திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இது கரூர் அல்ல. திமுக ஊர் இந்த ஊர். கொட்டும் மழையில்தான் இதே நாளில் ராபின்சன் பூங்காவில் திமுகவை அண்ணா தொடங்கி வைத்தார். கொட்டு மழையில் தொடங்கி வைத்த இந்த கழகம் 75 ஆண்டுகள் அல்ல. 100 ஆண்டுகளை நாம் காணப் போகிறோம்.

    திமுக வரலாற்றிலேயே இப்படி ஒரு பிரமாண்டமான முப்பெரும் விழா நடந்திருக்காது. மழை பெய்தாலும் குடை பிடித்துக் கொண்டு, நாற்காலியை பிடித்துக் கொண்டு விழாவை நீங்கள் நடத்திக் கொண்டிருப்பதே இதற்கு சாட்சி.

    2019 முதல் எதிர்கொண்ட எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்திருக்கிறோம். சாதாரண வெற்றி அல்ல. எதிரிகளை கலங்கடிக்கக் கூடிய வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த வெற்றிப் பயணம் தமிழக மக்கள் ஆதரவோடு 2026 தேர்தலிலும் தொடரும்.

    • தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் முப்பெரும் விழா மேடைக்கு முதலமைச்சர் வருகை.
    • திமுக கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.

    தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தைச் சார்ந்த கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது. அதன்படி கரூர் திருச்சி சாலையில் கோடங்கிபட்டி அருகில் இன்று மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா தொடங்கியது.

    தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் முப்பெரும் விழா மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.

    விழா மேடையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

    இவ்விழாவில், கனிமொழி எம்பிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருது வழங்கி கவுரவித்தார்.

    இதேபோல், பாளையங்கோட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் சீத்தாராமனுக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டது. மேலும், கலைஞர் விருது- சோ. மா. ராமச்சந்திரன், முரசொலி அறக்கட்டளை சார்பில் 'முரசொலி செல்வம்' விருது- மூத்த பத்திரிக்கையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

    பாவேந்தர் விருது- அமரர் குளித்தலை சிவராமன், பேராசிரியர் விருது- மருதூர் ராமலிங்கம், மு.க.ஸ்டாலின் விருது- பொங்கலூர் நா. பழனிச்சாமி.

    • தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் முப்பெரும் விழா மேடைக்கு முதலமைச்சர் வருகை.
    • கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.

    தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தைச் சார்ந்த கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது. அதன்படி கரூர் திருச்சி சாலையில் கோடங்கிபட்டி அருகில் இன்று மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா தொடங்கியது.

    தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் முப்பெரும் விழா மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.

    விழா மேடையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

    விழாவில் கரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி வரவேற்று பேசினார். கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.

    கட்சிப்பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 16 நிர்வாகிகளுக்கு நற்சான்று, பணிமுடிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

    • கரூர் திருச்சி சாலையில் கோடங்கிபட்டி அருகில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
    • தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகள் வழங்குகிறார்.

    தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தைச் சார்ந்த கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது. அதன்படி கரூர் திருச்சி சாலையில் கோடங்கிபட்டி அருகில் இன்று மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா நடைபெறுகிறது.

    இவ்விழாவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மூத்த முன்னோடிகள் 6 பேருக்கு பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர், மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இந்நிலையில், திமுகவின் முப்பெரும் விழா தொடங்க இருப்பதை முன்னிட்டு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    ×