காலில் விழுந்த பின் முகத்தை மூட கர்ச்சீப் எதற்கு?: இபிஎஸ்சை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியதே பாஜக தான் என உண்மையை பேசியுள்ளார் எடப்பாடி.தமிழக உரிமைகளுக்காக குரல் கொடுக்க தெம்போ, திராணியோ இல்லாதவர் இபிஎஸ்.
காலில் விழுந்த பின் முகத்தை மூட கர்ச்சீப் எதற்கு?: இபிஎஸ்சை விமர்சித்த மு.க.ஸ்டாலின்
Published on

கரூர்:

தி.மு.க. முப்பெரும் விழா கரூர் கோடங்கிப்பட்டியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

தி.மு.க. எப்போதும் நெருக்கடிகளுக்கு அஞ்சுகிற கட்சி அல்ல.

அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியதே பாஜக தான் என உண்மையை பேசியுள்ளார் எடப்பாடி.

தமிழக உரிமைகளுக்காக குரல் கொடுக்க தெம்போ, திராணியோ இல்லாதவர் இபிஎஸ்.

எதிர்க்கட்சி தலைவர் என்ற மாண்பின்றி என்னை ஒருமையில் விமர்சிக்கிறார்.

திராவிட கொள்கை என்னவென்றே தெரியாமல் அதிமுக தலைவராக இருக்கிறார் எபிஎஸ்

அண்ணாயிசம் பேசிய அதிமுகவினரை அடிமையிசம் பேச வைத்துள்ளார் இபிஎஸ்.

காலில் விழுந்த பின் முகத்தை மூட கர்ச்சீப் எதற்கு என மக்கள் கேட்கின்றனர்.

தமிழ்நாட்டைக் காவல்காக்கும் அரணாக விளங்குவது திமுக என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com