என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • கேரள மாநிலத்திற்கு தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
    • கேரளாவிற்கு ஆந்திர அரசு ரூ. 10 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவிப்பு .

    வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி அன்று வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 310க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

    நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்து வருகின்றன. தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. நேற்று ஆந்திர அரசு ரூ. 10 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி திரட்டும் விதமாக, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேநீர் கடையில் கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் இருவரும் தேநீர் அருந்தி நிதி உதவி வழங்கினர்.

    இதற்கு முன்னதாக, தெலுங்கு திரையுலகில் இருந்து பிரபாஸ் இரண்டு கோடியும், சிரஞ்சீவி மற்றும் சரண் ஒரு கோடி ரூபாயும், அல்லு அர்ஜுன் ரூ. 25 லட்சம், ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம், தயாரிப்பாளர் நாகவம்ஷி ரூ. 5 லட்சம் என பிரபலங்கள் பலர் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நிவாரண நிதி அளித்துள்ளனர்.

    இதேபோல், நடிகைகள் மீனா, குஷ்பு, சுஹாசினி மற்றும் சில சினிமா நட்சத்திரங்கள் நேரடியாகச் சென்று ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை கேரள முதல்வரிடம் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மூத்த தமிழறிஞர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.
    • தாரகை கத்பர்ட், வட்டார தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரிலான விருது கடந்த 2021- ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் மூத்த தமிழறிஞர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. இத்துடன் ரூ. 10 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


    இந்த வருடத்திற்கான தகைசால் விருது பெற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் அவர்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பைக் பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தேன். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தாரகை கத்பர்ட், வட்டார தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



    தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சார்பில் சுசீந்திரம் கோவிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் அவர்களுடன் இணைந்து துவக்கி வைத்தோம்.

    • விஜய் வசந்த் சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
    • வீடுகளை இழந்த மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியதாக விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று நாகர்கோவிலில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினருடன் விஜய் வசந்த் எம்.பி., தேசிய கொடியேற்றினார்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் அலுவலகத்தில், மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகை வழங்கப்பட்டதாக விஜய் வசந்த் எம்.பி., தெரிவித்தார். 

    மேலும், விஜய் வசந்த் சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில், "அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நாம் சுவாசிக்கும் இந்த சுதந்திர காற்றை பெற்று தர தியாகங்கள் பல மேற்கொண்ட சுதந்திர போராட்ட வீரர்களை இன்று நினைவு கூர்வோம். நாம் பெற்ற சுதந்திரத்தை பேணி காக்க வேண்டியது நமது கடமை. அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்" என்றார்.

    இதைதொடர்ந்து, கோதநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செம்பருத்திவிளையில் மழை வெள்ளம் காரணமாக வீடுகளை இழந்த மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியதாக விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

    பாதுக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்க ஆவன செய்யப்படும் என்றும், சம்பத்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக்கொண்டதாகவும் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

    குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று நன்றி தெரிவித்து கொண்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
    • ஜல்லி கிடங்கை நடைமேடையில் இருந்து சற்று தூரம் தள்ளி அமைக்க வேண்டும்.

    இடைக்கோடு, தேவிகோடு மற்றும் புலியூர்சாலை ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நன்றி கூறி அவர்கள் அன்பை ஏற்று வாங்கினோம். மேலும் அவர்கள் தெரிவித்த குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய உறுதி அளித்தோம்.


    அன்னை இந்திரா காந்தி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மேல்புறம் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நன்றி கூறும் பயணத்தை ஆரம்பித்தோம்.

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி சொல்ல வருகிறோம்.

    தென்னக ரெயில்வேயின் பொது மேலாளர் ஆர். என். சிங் அவர்களை சென்னையில் சந்தித்து இரணியல் ரெயில் நிலையத்தை ஒட்டி ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருக்கும் ஜல்லி கிடங்கை மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.


    தற்போது திட்டமிட்டிருக்கும் ஜல்லி கிடங்கு நடைமேடைக்கு மிக அருகில் இருப்பதால் அங்கிருந்து கிளம்பும் தூசு மற்றும் மாசு பொருட்கள் பொதுமக்களுக்கு தீங்கை ஏற்படுத்தும் என தெரிவித்தேன்.

    இந்த ஜல்லி கிடங்கை நடைமேடையில் இருந்து சற்று தூரம் தள்ளி அமைக்க வேண்டும் எனவும்,

    இந்த பிரச்சனைக்கு சமூக தீர்வு காண்பதற்காக ரெயில்வே துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆய்வு செய்வதற்கு அனுப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன்.

    • பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • மருத்துவக் கல்லூரி துணை இயக்குனர் சுதாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-


    மதுரையில் நடைபெற்ற மதுரை வாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவையின் 20 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினேன்.

    மேலும் பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினேன்.

    இந்த விழாவில் பேரவை பொதுச் செயலாளர் ஜான் ஸ்டீபன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தாயுமானசாமி, பேராசிரியர் இளங்கோ, மருத்துவக் கல்லூரி துணை இயக்குனர் சுதாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


    கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஆர். அழகு மீனா இ.ஆ. ப அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.


    மாலை முரசு அதிபர் அமரர் பா. ராமச்சந்திர ஆதித்தன் அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரையில் அவரது திருவுருவ படத்திற்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சு. வெங்கடேசன் அவர்களுடன் சேர்ந்து மரியாதை செலுத்தினோம்.


    முன்னர் சு. வெங்கடேசன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பரிமாறி கொண்டோம்.

    • தொழிலாளர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
    • சலுகைகள் வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன்.

    கன்னயாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

    மாத சம்பளம் ரூபாய் 30,000 வரை பெறும் தொழிலாளர்களை இ.எஸ்.ஐ எனப்படும் தொழிலாளர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.

    மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பணிபுரியும் சமூக பாதுகாப்பு உதவியாளர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட தொழில் முன்னேற்ற உறுதி (MACP) சலுகைகள் வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன்.

    • அத்தியாவசிய பொருட்களின் வரியினை குறைக்க வேண்டும்.
    • நடுத்தர மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வு.

     கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து மாணவர்களுக்கு வட்டியில்லா கல்வி கடன், மற்றும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர பல அத்தியாவசிய பொருட்களின் வரியினை குறைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டேன்.


    முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நினைவு தினத்தில் எமது இதய அஞ்சலி.


    • குமரி மாவட்டத்தில் 72 கி.மீ. தூரத்தில் கடற்கரை உள்ளது.
    • அனைத்து மீனவ கிராமங்களிலும் மீன் பதனிடும் நிலையங்கள் நிறுவ வேண்டும்.

    நாகர்கோவில்:

    மீன் பிடிக்க செல்லும்போது கடலில் மீனவர்கள் காணாமல் போனால் 3 மாதங்களில் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி. பேசினார்.

    பாராளுமன்றத்தில் மீன்வள பட்ஜெட் மானியங்கள் குறித்த கூட்டத் தொடர் நடந்தது. இதில் விஜய் வசந்த் எம்.பி. பேசியபோது கூறியதாவது:-


    குமரி மாவட்டத்தில் 72 கி.மீ. தூரத்தில் கடற்கரை உள்ளது. கடற்கரையோரமாக 48 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 5 லட்சம் மக்கள் கடலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். குமரி மாவட்ட கடற்கரையில் அடிக்கடி நிகழும் கடல் அரிப்பு காரணமாக மீனவர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பெரும் அச்சம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண கடற்கரை முழுவதும் தடுப்பு சுவர்கள் மற்றும் தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும். இதற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.

    மீன்பிடிக்க சென்று கடலில் காணாமல் போகும் மீனவர்களுக்கான இறப்பு சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு பிறகு தான் வழங்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் அந்த குடும்பம் பல இன்னல்களை சந்திக்கிறது. எனவே இதுபோன்ற சூழலில் உயர்மட்ட குழு அமைத்து 3 மாதத்திற்குள் இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீனவர் கடலில் இறந்தால் அவர்களது குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.


    டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியத்தின் அளவை உயர்த்த வேண்டும். குமரி மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் சாலை உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க நிதி ஒதுக்க வேண்டும். தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் பணிகளை விரைவில் முடிக்கவும், குளச்சல் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யவும், வாணியகுடியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அனைத்து மீனவ கிராமங்களிலும் மீன் பதனிடும் நிலையங்கள் நிறுவ வேண்டும். தேங்காப்பட்டணம்-இரயுமன்துறை இடையே மேம்பாலம் அமைத்து, ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை கடற்கரை சாலைகளை சீரமைக்க வேண்டும். வெளிநாட்டு சிறைகளில் வாடும் இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க கடல்சார் பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு உயர்மட்ட குழு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடல் சீற்றத்தினால் எழுந்த ராட்சத அலையில் சிக்கி இவர்களது வள்ளம் கவிழ்ந்தது.
    • வள்ளம் கடலில் கவிழ்ந்ததில் என்ஜின் சேதம் அடைந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் ஜார்ஜியார் குருசடி தெருவை சேர்ந்தவர் ரஸ்டன் (வயது 50) மீனவர். இவருக்கு சொந்தமான வள்ளத்தில் இவரும், மற்ற 5 பேரும் இன்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் வலை விரித்து நெத்திலி மற்றும் சாளை போன்ற மீன்களை பிடித்து விட்டு இன்று காலை 7.30 மணிக்கு கரை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கடல் சீற்றத்தினால் எழுந்த ராட்சத அலையில் சிக்கி இவர்களது வள்ளம் கவிழ்ந்தது.

    இதில் வள்ளத்தில் இருந்து 6 மீனவர்களும் கடலில் தவறி விழுந்தனர். அவர்கள் 6 பேரும் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதை பார்த்த கரையில் மீன் இறக்கி கொண்டிருந்த மீனவர்கள் கடலில் குதித்து நீந்தி சென்றனர். பின்னர் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் கடலில் தத்தளித்து கொண்டிருந்த அந்த 6 மீனவர்களையும் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

    அதன்பிறகு கடலில் கவிழ்ந்து கிடந்த அந்த வள்ளத்தையும் அவர்கள் மீட்டனர். அதன் பிறகு அந்த 6 மீனவர்களையும் அந்த வள்ளத்தில் ஏற்றி பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் வள்ளம் கடலில் கவிழ்ந்ததில் என்ஜின் சேதம் அடைந்தது.

    இதேபோல கடந்த வாரம் கோவளத்தில் நடுக்கடலில் ஒரு வள்ளம் கவிழ்ந்து 5 மீனவர்கள் உயிருக்கு போராடியபடி தத்தளித்ததும் அவர்களை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மற்ற மீனவர்கள் உயிருடன் மீட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். இப்போது கோவளத்தில் 2-வது முறையாக ராட்சத அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடற்கரையையொட்டி உள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் மீது ராட்சத அலைகள் வேகமாக மோதியது.
    • கடல் சீற்றமாக காணப்பட்டதையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவில் வருகிற 7-ந்தேதி வரை கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையடுத்து குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குமரி மாவட்டத்தில் வருகிற 7-ந்தேதி வரை அனைத்து கடற்கரை கிராமங்களிலும் கடல் வழக்கத்தை விட சீற்றமாக காணப்படும். காற்றின் வேகம் 35 முதல் 45 கிலோமீட்டர் வரையிலும் சில நேரங்களில் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கும் என தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என்று கூறியுள்ளார்.

    இது தொடர்பான அறிவிப்பு குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் மீன்வளத்துறை அதிகாரிகள் மூலமாகவும், பங்கு தந்தைகள் மூலமாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் நேற்று மாலை கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. கணபதிபுரம் லெழூர் கடற்கரையில் நேற்று மாலை சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு வந்திருந்தார்கள்.

    போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரை பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அங்கிருந்து திருப்பி அனுப்பினார்கள். முட்டம், தேங்காய்பட்டினம் உட்பட கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். இன்று மாவட்டம் முழுவதும் கடல் சீற்றமாகவே இருந்தது. ராட்சத அலைகள் எழும்பியது.

     

    கன்னியாகுமரி கடற்கரையில் வள்ளங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

    கன்னியாகுமரி கடற்கரையில் வள்ளங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

    கடற்கரையையொட்டி உள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் மீது ராட்சத அலைகள் வேகமாக மோதியது. கடல் சீற்றமாக காணப்பட்ட தையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் வள்ளல்கள் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. குளச்சல், சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து ஒரு சில விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலோர காவல் படை போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • குமரி அனந்தன், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • விருதுடன் ரூ,10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாவின்போது அவருக்கு இந்த விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் ரூ,10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

    இதுதொடர்பாக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-


    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ் இலக்கியவாதியுமான எனது பெரியப்பா குமரி அனந்தன் அவர்களுக்கு அவர் சேவையை பாராட்டி தகைசால் விருதினை வழங்க முடிவு செய்த தமிழக அரசுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்

    • 3 அணைகளில் இருந்தும் 1,806 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.53 அடியாக இருந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது சற்று குறைந்துள்ளது. மலையோர பகுதியான பாலமோர், பேச்சிபாறை மற்றும் பெருஞ்சாணி அணைப்பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. பாலமோரில் அதிகபட்சமாக 18.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அணைகளுக்கு தொடர்ந்து மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிபாறை அணையில் இருந்து தொடர்ந்து உபரி வெளியேற்றப்பட்டு வருவதால் கோதை ஆறு, குழித்துறை தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதையடுத்து அருவியில் குளிப்பதற்கு இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சிற்றார், பெருஞ்சாணி அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 3 அணைகளில் இருந்தும் 1,806 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.53 அடியாக இருந்தது. அணைக்கு 749 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 432 கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 764 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.88 அடியாக உள்ளது. அணைக்கு 894 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையி லிருந்து 460 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்1 அணை நீர்மட்டம் 14.73 அடியாக இருந்தது. அணைக்கு 125 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்2 நீர்மட்டம் 14.83அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 48.39 அடியாகவும், முக்கடல் நீர்மட்டம் 21.50 அடியாகவும், பொய்கை நீர்மட்டம் 15.40 அடியாகவும் உள்ளது.

    ×