என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • பஸ்சினை திருநெல்வேலியைச் சேர்ந்த தவமணி என்பவர் ஓட்டி வந்தார்.
    • விபத்தில் 28-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    உளுந்தூர்பேட்டை:

    சென்னையில் இருந்து முப்பதுக்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் ஆம்னி பஸ் ஒன்று மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டி ருந்தது. பஸ்சினை திருநெல்வேலியைச் சேர்ந்த தவமணி என்பவர் ஓட்டி வந்தார்.

    உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து தனியார் பால் பண்ணை அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு மாடுகளை ஏற்றுக்கொண்டு முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக மோதியது.

    இந்த விபத்தில் தனியார் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த அந்தோனிதாசன் (வயது 58), கன்னியக்குமரி விளவங்கோடு கமலாபாய் (64) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 28-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதே போல விபத்தில் சிக்கிய லாரியில் கொண்டு செல்லப்பட்ட மாடுகளில் 4 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  உயிர் இழந்தவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    இந்த விபத்தால் 2 மணி நேரத்திற்கு மேலாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டு உளுந்தூர்பேட்டை நகராட்சி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

    கள்ளக்குறிச்சியில் போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி, ஜன.28-

    கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் ( வயது23). இவர் அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து செய்து கைது செய்தனர்.

    • இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
    • இவரை அக்கம், பக்கம் தேடியும் கிடைக்கவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மனைவி ஜெயகவுரி (வயது 60) இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக மாத்திரை சாப்பிட்டு வந்தார். இவர் தினமும் சிறிது தூரம் நடந்து சென்று மீண்டும் வீட்டுக்கு வருவது வழக்கம். சம்பவத்தன்று நடந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இவரை அக்கம், பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை தேடி வருகின்றனர்.

    • போலீசார் மைக்கேல் (வயது 35) என்பவரை கைது செய்தனர்.
    • அவரிடம் இருந்து 15 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்க்பெக்டர் நரசிம்மஜோதி தலைமை யிலான போலீசார் கொசப்பாடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த மைக்கேல் (வயது 35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார்.
    • வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன் பர்னபாஸ் (வயது 66). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரான இவா் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்துபர்னபாஸ் குடும்பத்தினருடன் ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் மாடியில் வசித்து வரும் அவரது மகன் விஜய் இருதயராஜ் வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

    . உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நெக்லஸ், வளையல், தோடு உள்ளிட்ட 13 பவுன் நகைகளை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் என கூறப்படுகிறது.      இது குறித்து பர்னபாஸ் கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீ்ட்டில் புகுந்து மர்ம நபர்கள் 13 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படு த்தியுள்ளது.

    • 90-க்கும் மேற்பட்டோர் 2 பஸ்சில் ஆதிதிருவரங்கம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
    • 2 பஸ்களில் வந்த சுமார் 18 பேர் படுகாயமடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளை யத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் சுமார் 90-க்கும் மேற்பட்டோர் 2 பஸ்சில் ஆதிதிருவரங்கம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தியாகதுருகம் அருகே ரீட்டா நகர் பகுதி யில் சென்ற போது, முன்னால் சென்ற பஸ் வேகத்த டையை கடந்த போது பின்னால் வந்த பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் 2 பஸ்களில் வந்த சுமார் 18 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தி னர் மீட்டு கள்ளக்கு றிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தியாகதுருகம் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

    • மது பாட்டில்கள் மூடி திறந்த நிலையில் விற்பனை செய்தது தெரியவந்தது.
    • சங்கர் (52) என்பவர் வீட்டில் 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் செல்வம் (வயது57) என்பவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள தனது வீட்டில் மது பாட்டில்கள் மூடி திறந்த நிலையில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல் தியாகதுருகம் சந்தைமேடு பகுதியில் சங்கர் (52) என்பவர் வீட்டில் 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதன்படி செல்வம், சங்கர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    • கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
    • 29 பேருக்கு முதல்வர் பதக்கத்தினை மாவட்ட கலெக்டர் அணிவித்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    நாடு முழுவதும் இன்று 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி னார். மேலும் சமாதான வெண் புறாக்க ளையும், மூவர்ன நிறத்திலான பலூன்களையும் பறக்க விட்டார்,

    மேலும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ் ஆகியோர் வெள்ளை நிற திறந்த வேனில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து காவல்து றையினர் ஆயுதப்படை ஆய்வாளர் இளையராஜா தலைமையிலும், முதல் படைக்கு ஆயுதப்படை உதவி ஆய்வாளர் முத்துசாமி, இரண்டாம் படைக்கு உதவி ஆய்வாளர் கீர்த்தனா, தீயணைப்புத்துறை யினர் நிலைய தலைமை அலுவலர் ராமச்சந்திரன், வனத்துறையினர் வனவன் முருகன், ஊர் காவல் படையினர் ஜான ரத்தினம், தேசிய மாணவர் படையினர் ரஞ்சித், ஜூனியர் பிரிவு கவிராஜ் ஆகியோர் தலைமையிலும் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

    மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினர் 34 பேர், தீயணைப்பு மீட்புபணிகள் துறை 12- பேர், வருவாய்த்துறை 8 பேர், ஊரக வளர்ச்சி துறை 9 பேர், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை 8 பேர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 191 பேருக்கு நற்சான்றுகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மாவட்டத்தில் சிறப்பாக பணி ஆற்றிய காவல்து றையினர் 29 பேருக்கு முதல்வர் பதக்கத்தினை மாவட்ட கலெக்டர் அணிவித்தார். தொடர்ந்து 20 ஆண்டுகளாக மாசற்ற பணி நிறைவு செய்த ஈப்பு ஓட்டுநர்கள் 7 பேருக்கு 4 கிராம் தங்க பதக்கத்தை மாவட்ட கலெக்டர் வழங்கி னார்.

    இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன்,வேளாண் இணை இயக்குநர் வேல்விழி, மருத்தவக்கல்லூரி மருத்து வமனை கண்காணிப்பாளர் நேரு, மாவட்ட திட்ட இயக்குனர் மணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, நகராட்சி ஆணையர் குமரன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பயனா ளிகள் பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • கல்வித் தகுதிக்கேற்ப விருப்பமான வேலை வாய்ப்பு பெற்று பயனடைமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- 

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான தனியார் நிறுவனங் களில் வேலை வாய்ப்பு பெரும் வகையில் வட்டார அளவில் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தீனதயாள் உபாத்யாய - கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் வருகின்ற 28- ந்தேதி சனிக்கிழமை அன்று சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    இந்த வேலை வாய்ப்பு முகாமில் சங்கராபுரம் மற்றும் கல்வராயன் மலை வட்டாரத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலை வாய்ப்பற்ற இளை ஞர்களுக்கு தொழில் சார்ந்த தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். எனவே வாய்ப்பை சங்கராபுரம் மற்றும் கல்வராயன் மலை வட்டாரத்தில் உள்ள தகுதியான அனைத்து ஆண், பெண் இருபாலரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு தங்களின் கல்வித் தகுதிக்கேற்ப விருப்பமான வேலை வாய்ப்பு பெற்று பயனடைமாறு கேட்டுக்கொள்கிறேன். என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • ஆண்டவர் என்பவர் 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்,
    • வலி தாங்க முடியாமல் வயலுக்கு அடிக்கவைத்திருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இந்திலி பகுதியை சேர்ந்த ஆண்டவர் (வயது 33) இவர் 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் 18-ந் தேதி ஆண்டவருக்கு வயிற்று வலி அதிகமானது. இதனால் வலி தாங்க முடியாமல் வயலுக்கு அடிக்கவைத்திருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்தார்.

    பின்னர் அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஆண்டவர் இறந்தார். இது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோமதி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கோமதியை தேடிப் பார்த்தனர்,
    • எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர்,

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே எரவார் கிராமத்தில் வசிக்கும் ராஜாமணி (வயது 55) இவரது கணவர் பெரியசாமி மகள் கோமதியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கோமதி நேற்று அதிகாலையில் தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றார். பின்னர் கோமதி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கோமதியை உறவினர் வீடு, அருகில் உள்ள இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தாய் ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கோமதியை தேடி வருகின்றனர்.

    • ஆறுமுகம் மகன் மணிகண்டன். இவரது சின்ன மாமனார் வீட்டுக்கு சென்றார்.
    • மணிகண்டனை அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல்விடுத்தனர்,

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பாவளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணிகண்டன்(வயது31). இவர் சம்பவத்தன்று பொங்கல் பண்டிகைக்காக கடுவனூரில் உள்ள தனது சின்ன மாமனார் சங்கர் வீட்டுக்கு சென்றார். அப்பொழுது வீட்டுமனை சம்மந்தமான முன் விரோதம் காரணமாக சங்கரிடம் கடுவனூரை சேர்ந்த அவரது அண்ணன் குப்பன் தனது ஆதரவாளர்களுடன் தகராறு செய்ததோடு இதை தடுக்க முயன்ற மணிகண்டனை அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

    பின்னர் இது குறித்து இரு தரப்பினரும் சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். இதில் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் கடுவனூர் கிராமத்தை சேர்ந்த குப்பன்(46), அமுதா, ரவி, அஜித்குமார்(27) ஆகிய 4 பேர் மீது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாகு வழக்குபதிவு செய்து குப்பன், அஜித்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதே போல் குப்பன் மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில் கடுவனூர் கிராமத்தை சேர்ந்த சங்கர், மஞ்சுளா, முத்துராஜ் மற்றும் மணிகண்டன் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×