என் மலர்
நீங்கள் தேடியது "Liquor bottle selling"
- மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய ப்படுவதாக பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கணவன்-மனைவி இருவர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சிங்காரத்தோப்பில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய ப்படுவதாக பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார்கள் சிங்காரத்தோப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த தர்மா என்கிற ஜான்பீட்டர் (38) மற்றும் அவரது மனைவி சகாயராணி (32) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.