search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liquor bottle selling"

    • சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
    • குற்றசம்பவத்தில் ஈடுப ட்டால் குண்டாஸ் பாயும் என உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை- திருச்சி மெயின் ரோட்டில் கஞ்சா விற்பதாக உளுந்தூ ர்பேட்டை உட்கோ ட்டை டிஎஸ்பி மகேசுக்கு கிடைத்த ரகசிய தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்வா ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சீனிவாசன் என்பவரை மடக்கி பிடித்து போலீசார் வழக்கு பதிவு அவரை கைது செய்தனர். மேலும் இதேபோல் இடைக்கால் பகுதியில் கள்ளத்தனமாக பூ மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த பிரியதர்ஷினி இளம் ஆசிரியர் கோட்டை பகுதியில் எரியூர் கிராம த்தைச் சேர்ந்தவர் சின்ன ப்பையன் நம்பிக்கை மேரி திடீர்குப்பம் ராஜா ஆகியோர்களை கைது செய்தனர். மேலும் இந்த குற்றசம்பவத்தில் ஈடுப ட்டால் குண்டாஸ் பாயும் என உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தெரிவித்தார்.

    • மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ராஜமாணிக்கத்தை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள பாவந்தூரில் ஒரு வீட்டின் பின்புறம் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு சென்றனர். அப்போது சேவி மகன் ராஜமாணிக்கம்(55) என்பவர் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய ப்படுவதாக பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கணவன்-மனைவி இருவர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சிங்காரத்தோப்பில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய ப்படுவதாக பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார்கள் சிங்காரத்தோப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த தர்மா என்கிற ஜான்பீட்டர் (38) மற்றும் அவரது மனைவி சகாயராணி (32) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.

    ×