search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி
    X

    சின்னசேலம் அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி

    • தனசேகரன் திருச்செங்கோட்டில் உள்ள தம்பியை பார்த்துவிட்டு மீண்டும் நெய்வேலிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பினார்.
    • கொங்கு திருமண மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் கட்டையில் மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள செங்கோட்டை பாளையம் பகுதியை சேர்ந்த தனசேகரன் மகன் நித்திஷ் (வயது 19). இவர் டிப்ளமோ படித்துவிட்டு நெய்வேலியில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவர் திருச்செங்கோட்டில் உள்ள தம்பியை பார்த்துவிட்டு மீண்டும் நெய்வேலிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பினார். அப்போது அமையாபுரம் தாண்டி வந்து கொண்டிருந்த பொழுது சின்னசேலம் கொங்கு திருமண மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் கட்டையில் மோதியது.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நித்திஷ் சின்னசேலம் அரசு ஆஸ்பத்திக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×