என் மலர்
கள்ளக்குறிச்சி
- சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக பழைய குப்பைகள் தேங்கிய நிலையில் இருந்தது
- இதில் அடிக்கடி சமூக விரோதிகள் தீவைப்பதால் அந்தபகுதி முழுவதும் புகைமயமாக காட்சியளிக்கும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக பழைய குப்பைகள் தேங்கிய நிலையில் இருந்தது. இதில் அடிக்கடி சமூக விரோதிகள் தீவைப்பதால் அந்த முழுவதும் பகுதி புகைமாக காட்சியளிக்கும்.இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதை உணர்ந்த பேரூராட்சி நிர்வாகம் இந்த தேங்கிய குப்பை கழிவு களை அகற்ற பேரூராட்சி துறையிடம் அனுமதி கேட்டப்பட்டது. இந்நிலையில் அந்த தேங்கி கிடக்கும் பழைய குப்பை கழிவுகளைஉயிரி அகழ்வு முறையில் இயந்திரம் மூலம் அகற்றுவதற்கு தனியார் நிறுவனத்திடம் ரூ.32.32 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டிருந்தது. இந்த குப்பைகளை அகற்றும் பணி செயல் அலுவலர் உஷா, தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் ஆகியோர் மேற்பார்வையில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த இயந்திரத்தில் கல், மண் தனியாகவும், பிளாஸ்டிக்ல் பொருட்கள் தனியாகவும், மக்கிய குப்பைகள் தனியாகவும் வெளியேறும்.
இந்நிலையில் உயிரி அகழ்வு முறையில் குப்பைகளை அகற்றும் பணியை நேற்று ' காலை கூடுதல் தலைமை செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாள ருமான சிவதாஸ்மீனா, கலெக்டர் ஷ்ரவன்குமார் மற்றும் அதிகாரிகளுடன் வந்து ஆய்வு செய்தார். மேலும் ஒப்பந்ததாரரிடம்இந்த பணியை காலதாமதம் இல்லாமல் விரைவாக நேர்த்தியாக செய்து முடிக்கும்படி துறை செயலாளர் உத்தரவிட்டார். இந்தநிலையில் பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் பேரூராட்சி துணை சேர்மன் ராகேஷ், வார்டு உறுப்பினர்கள் , சாரங்கன் ,உமா ஜெயவேல், காந்தி,பேபிகுமார், பத்மாவதி சிவகுமார், சுகாதார ஆய்வாளர் முத்துகுமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- கூழாங்கற்களை கடத்தும் லாரிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்
- புகாரின் பேரில், செல்போன் நம்பரின் டவரை வைத்து லாரியை தேடிச் சென்றனர்
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பச்சைவெளி, நைனார்குப்பம், பள்ளமேடு பகுதிகளில் உள்ள ஒரு சிலர் கூழாங்கற்களை லாரியில் கடத்தி வெளிமாநிலங் களுக்கும், வெளிநாடு களுக்கும் சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக புவியி யல் துறை அதிகாரிகள், கூழாங்கற்களை கடத்தும் லாரிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். அதன்படி கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பாக கூழாங்கற்களை கடத்தி சென்ற 4 லாரிகளை விழுப்புரத்தில் புவியியல் துறை லாரிகளை பறிமுதல் செய்தனர். இதில் பாதிக்கப்பட்ட லாரி உரிமை யாளர்கள், இதற்கு உளுந்தூர்பேட்டை யில் கந்த சாமி புரத்தில் வசிக்கும் சதீஷ் என்ப வர்தான் காரணம் என்று கருதினர். இதையடுத்து
கள்ளக்குறிச்சி:
உளுந்தூபேட்டை சுங்கச் சாவடி அருகே நிறுத்தப்பட் டிருந்த சதீஷ்-க்கு சொந்தமான 3 லாரிகளை பள்ளமேடு பகுதியைச் சேர்ந்த குழந்தைவேல், வீரமணி உள்ளிட்டவர்கள் கடத்தி சென்றனர். இந்த லாரியை கொளுத்தப் போவதாக சதீஷ்-க்கு போன் செய்து கூறினர். இதனால் பதறிப்போன சதீஷ், உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், செல்போன் நம்பரின் டவரை வைத்து லாரியை தேடிச் சென்றனர். அப்போது அங்கிருந்த ஏரிக்கரை அருகில் 3 லாரிகளிலும் கூழாங்கற்கள் ஏற்றப்படுவதை போலீசார் கண்டனர். உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லாரியை திருடியது, அதில் சட்ட விரோதமாக கூழாங்கற்களை கடத்த முயற்சி செய்தது போன்ற பிரிவுகளில் குழந்தைவேல், வீரமணி, ரஞ்சித்குமார், ஆறுமுகம், ராஜசேகர், சத்தியராஜ், அணில்குமார் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில் சத்தியராஜ், ஆறுமுகம், ரஞ்சித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், பறிமுதல் செய்த லாரிகளை அதன் உரிமையாளர் சதீஷ்-ம் போலீசார் ஓப்படைத்தனர்.
உளுந்தூர்பேட்டையில் அதிகளவில் உள்ள கனிமமான கூழாங்கற்களை கடத்துவதும், அதில் தொழில் போட்டி ஏற்பட்டு இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதும் வாடிக்கையாக உள்ளது. எனவே, இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்படுபவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். வாகனத்தின் உரிமம் ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- ராயதுரை (வயது 56). விவசாயி. இவரது மனைவி முத்துலட்சுமி (48). இவர்களுக்கு தனுசு (29) என்ற மகளும் பாபு என்ற மகனும் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தனர்.
- அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர், வீட்டின் உள்ளே சென்று தூங்கிக் கொண்டிருந்த தனுசு கழுத்தில் இருந்த ஒன்பது பவுன் தங்க சங்கிலியை திருடி கொண்டு தப்பி சென்று விட்டார்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே நமச்சிவாயபுரம் கிராமத்தை சேர்ந்த ராயதுரை (வயது 56). விவசாயி. இவரது மனைவி முத்துலட்சுமி (48). இவர்களுக்கு தனுசு (29) என்ற மகளும் பாபு என்ற மகனும் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் முத்துலட்சுமி எழுந்து வெளியே வந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர், வீட்டின் உள்ளே சென்று தூங்கிக் கொண்டிருந்த தனுசு கழுத்தில் இருந்த ஒன்பது பவுன் தங்க சங்கிலியை திருடி கொண்டு தப்பி சென்று விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.
- வடசிறுவள்ளூர் பகுதியில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
- வட சிறுவள்ளூர் ஏரிக்கரை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே 5 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடசிறுவள்ளூர் பகுதியில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது வட சிறுவள்ளூர் ஏரிக்கரை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே 5 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். அப்போது போலீசார் வருவதைப் பார்த்து அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் விரட்டிச்சென்று 5 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 27), முருகன் (40), தேவபாண்டலத்தை சேர்ந்த கிருஷ்ணன் (29), சங்கராபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் (48), முத்துசாமி (60) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் ேபாலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
- அண்ணாதுரை இவர் சொந்தமாக ஆட்டோ தொழில் செய்து வருகிறார்.அண்ணாதுரை ஆட்டோவில் மருத்துவமனயைிலிருந்து டிஸ்ஜார்ஜ் ஆன கண்ணன் ,இவரோடு சிலரை ஏற்றிகொண்டு சென்றார்.
- மறவாநத்தம் பிரிவு ரோட்டில் செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக அங்குள்ள சிமெண்ட் தடுப்பு மீது ஆட்டோ மோதி விபத்தானது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே உள்ள க. மாமனந்தல் கிராமத்தை சேர்ந்த லட்சுமி வயது 45 இவரது கணவர் அண்ணாதுரை இவர் சொந்தமாக ஆட்டோ தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணன் என்பவரை மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்தனர்.அண்ணாதுரை ஆட்டோவில் கண்ணன் இவரது மனைவி லட்சுமி மகன் முருகேசன் பேரன் ராமச்சந்திரன் ஆகியோர் சின்ன சேலத்திற்கு சென்றனர். அப்பொழுது மறவாநத்தம் பிரிவு ரோட்டில் செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக அங்குள்ள சிமெண்ட் தடுப்பு மீது ஆட்டோ மோதி விபத்தானது. இதில் ஆட்டோ டிரைவர் அண்ணாதுரை லட்சுமி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை அடுத்து இருவரையும் சின்ன சேலம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் ஆட்டோ டிரைவர் அண்ணாதுரை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தியாகதுருகத்தில் கோவில் மாடு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக 10- க்கும் மாடுகள் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை மர்ம நபர்கள் கோவிலுக்கு சொந்தமான காளை மாட்டை பிடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து கோவிலில் இருந்தவர்கள் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் கள்ளக்குறிச்சி அருகே ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த லூர்துசாமி மகன் பவுன்ராஜ் (வயது 27), இருதரராஜ் மகன் ஜான் எடிசன் (36), அருள்தாஸ் மகன் டோமிக் சேவியர் (32) என்பதும் இவர்கள் மாட்டை திருடி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பவுன்ராஜ், ஜான் எடிசன், டோமிக் சேவியர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- அன்றன்றே குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து உரமாக மாற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கழிப்பிடத்தை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை அருகே உள்ள குப்பை கிடங்கில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அங்குள்ள குப்பை கிடங்கில் குப்பைகள் கொட்டப் பட்டு வருகிறது.இந்நிலையில் கடலூர் செயற் பொறியாளர் கருப்பையா, விழுப்புரம் உதவி செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் குப்பை கிடங்கை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மலைபோல் குவிந்து உள்ள பழைய குப்பைகளை உடனடியாக தரம் பிரித்து அதை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், இனி வரும் காலங்களில் குப்பைகளை குப்பைக்கிடங்கில் கொட்டி அன்றன்றே குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து உரமாக மாற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய பஸ் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடத்தையும் ஆய்வு செய்தனர். கழிப்பிடத்தை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது சின்னசேலம் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- நகர சபை ஆணையர் மற்றும் திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் ஆகியவற்றிற்கு நேரில் சென்று ஒரு கோரிக்கை மனு கொடுத்த னர்.
- பொதுமக்கள் போலீசாரின் இந்த கெடுபிடியால் கடை தெருவுக்குள் வருவதையே தவிர்த்து விடுகின்றனர்
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அனைத்து வணிகர்கள் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் டிடி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகளும் வியா பாரிகளும் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர், நகர சபை ஆணையர் மற்றும் திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் ஆகிய வற்றிற்கு நேரில் சென்று ஒரு கோரிக்கை மனு கொடுத்த னர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது,
திருக்கோவிலூர் நகர போலீஸ் நிலையம் சார்பில் கட்ட கோபுரம் அருகே பேரிகார்டு வைக்கப்பட்டு அனைவருமே கட்ட கோபுரத்தின் வாயில் வழியாக கடைத்தெருவிற்கு செல்லும் வகையில் வைத்துள்ளனர். அதேபோல் போக்குவரத்து காவல்துறை சார்பில் கட்ட கோபுரத்திற்கு முன்னதாக எம்ஜிஆர் சிலை அருகில் போக்குவரத்திற்கு இடையூறாக சாமியான பந்தல் போட்டு கடை தெருவுக்கு செல்லும் ரோட்டையே ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பஸ் நிலையத்தில் இருந்து கடை தெருவுக்கு வரும் பொதுமக்கள் போலீசாரின் இந்த கெடுபிடியால் கடை தெருவுக்குள் வருவதையே தவிர்த்து விடுகின்றனர். திருக்கோவிலூர் நகர பொதுமக்கள் மற்றும் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்களை நம்பி கட்டை கோபுர தெரு கடைவீதி பள்ளிவாசல் வீதி மற்றும் சின்ன கடை தெருவில் உள்ள சுமார் 600க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் உள்ளன. அது தவிர சுமார் 200க்கும் மேற்பட்ட தெருவோர பாதசாரி வியாபாரிகளும் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் எங்களைப் போன்ற வணிக நிறுவனங்களும் பாதசாரி வியாபாரிகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே கட்ட கோபுரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேரீகார்டரை அகற்றிவிட்டு கடைத்தெருவுக்குள் வருவ தற்கு ஒரு வழியா கவும் கோபுரத்தின் வழியே வெளியே செல்லும் வழியா கவும் மாற்றி யமைத்தல் வியாபாரிகளின் வியாபாரம் கெடாது. எனவே வியா பாரிகள் மற்றும் பாதசாரி வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- மணிகண்டன். இவரது மகள் விக்னேஷ்வரி (வயது 6) இவர் மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி .
- இவரது தாய் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தார்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலை அடுத்துள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் விக்னேஷ்வரி (வயது 6) இவர் மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி .
இவருக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என இவரது தாய் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தார். மனுவை பெற்று மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலமாக ரூ.11 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலியினை மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- 100 நாள் வேலை செய்யும் பொதுமக்களுக்கு கூலி தொகை கடந்த 3 மாத காலமாக சரிவர வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை
- திருக்கோவிலூர் வேட்டவலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் தாலுக்கா வீரபாண்டி கிராமத்தில் 100 நாள் வேலை செய்யும் பொது மக்களுக்கு கூலி தொகை கடந்த 3 மாத காலமாக சரி வர வங்கி கணக்கில் வரவு வைக்காததை கண்டித்தும், இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டும் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும், வங்கி கணக்கில் பணம் எடுக்கும் போது பொதுமக்களிடம் ஆயிரம் ரூபாய்க்கு ரூ. 20 கமிஷன் கேட்கும் வங்கி ஊழியரை கண்டித்தும் 300-க்கும் மேற்பட்டோர் திருக்கோவிலூர் வேட்டவலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் தாசில்தார் கற்பகம், முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம் மற்றும் நாராயணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அரிகரசுதன் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் பொதுமக்கள் தரப்பில் ஊராட்சி நிர்வாகத்தை கடுமையாக குற்றம் சாட்டியதுடன், பொது மக்களின் வங்கி கணக்குகளில் ஆதார் அட்டை முறையாக இணைக்கப் படவில்லை எனக் கூறும் தனியார் வங்கியின் அலட்சிய போக்கை கடுமையாக கண்டித்து பேசினார்கள். மேலும் வீரபாண்டி கிராமத்தில் உள்ள தனியார் வங்கியின் சேவை மிகவும் குறைவாக இருப்பதாகவும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளையை வீர பாண்டி கிராமத்தில் தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் கூறிய அனைத்து கோரிக்கைகளையும் கேட்டறிந்த அதிகாரிகள் குழுவினர் வருகின்ற 24-ந்தேதி முதல் வீரபாண்டி புலிக்கல், ஒட்டம்பட்டு, அருணாபுரம் கல்லந்தல் மற்றும் தண்டரை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களுக்கு வங்கி கணக்கில் ஆதார் அட்டை இணைக்கும் சிறப்பு முகாம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பொதுமக்கள் தங்கள் கூலித் தொகையை வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கும் பொழுது கமிஷன் கேட்கும் வங்கி ஊழியரை கண்டிக்க வேண்டும் என்றும் தனியார் வங்கி நிர்வாகத்திடம் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஷஇந்த சாலை மறியல் போராட்டம் மற்றும் முற்றுகை போராட்டத்தால் வீரபாண்டி கிராமத்தில் 2 மணி நேரம் பதட்டமான நிலை காணப்பட்டது. தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து வந்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ஏரி பகுதியில் உள்ள மரத்தில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்ததாக தகவல் வந்தது,
- இவர் ராமச்சந்திரன்( )இவர் கம்பிகட்டும் வேலை பார்ததுவந்தார்,
கள்ளக்குறிச்சி,:
கள்ளக்குறிச்சி ராஜா நகர் ஏரி பகுதியில் உள்ள மரத்தில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்ததாக கள்ளக்குறிச்சி போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், தூக்கில் தொங்கியவர் சின்னசேலம் அருகே நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 45) என்பதும், இவர் கம்பி கட்டும் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாய், இருமகன்கள் கொலையில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வளர்மதி மற்றும் அவரது இரு குழந்தைகள் மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி:
தாய், இருமகன்கள் கொலையில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடலூர் மாவடடம் விருத்தாசலம் அருகே உள்ள ஆலடி பாலக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி வளர்மதி (35). இவர்கள் கள்ளக்குறிச்சி ஏமப்பேரி நரிமேடு காட்டுக் கொட்டாய் பகுதியில் வசித்து வந்தனர். சாலை விபத்தில் மணிகண்டன் இறந்து விட்டார். இதனை தொடர்ந்து வளர்மதி தனது மகன்கள் தமிழரசன் (11), 8 மாத ஆண் குழந்தை கேசவன் ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் வளர்மதி மற்றும் அவரது இரு குழந்தைகள் மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டனர். வீட்டின் வெளியில் கன்று குட்டி மற்றும் கோழிகள் இறந்து கிடந்தது. 2 நாட்களுக்கு முன் தாய், மகன்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இக் கொலை குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. கொலை செய்யப்பட்ட வளர்மதிக்கு இது வரை 4 திருமணங்கள் நடைபெற்றுள்ளது. முதல் திருமணம் உளுந்தூர் பேட்டையை அடுத்துள்ள சேந்தநாடு கிராமத்தில் முருகவேல் என்பவருடன் நடந்துள்ளது. அவரை பிரிந்து வாழ்ந்த வளர்மதி சென்னையை சேர்ந்த செல்வம் என்பவரை 2-வது திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது செல்வம் மற்றும் அவரது மகள் சாலை விபத்தில் இறந்தனர். இதனை தொடர்ந்து சென்னையை சேர்ந்த குப்பு சாமியை வளர்மதி 3-வதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். பின்னர் குப்புசாமியையும் பிரிந்து 4-வதாக மணிகண்டனை திருமணம் செய்துள்ளார். வளர்மதி 8 மாத கர்ப்பிணியாக இருந்த போது மணிகண்டனும் சாலை விபத்தில் இறந்து விட்டார். வளர்மதியின் இரு கணவர்களும் இறந்து விட்ட நிலையில் மற்ற 2 பேர் வேறு பெண்களை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
கொலை நடைபெற்ற இடத்தில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி (பொறுப்பு) பகலவன் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
3 பேர் கொலை கொலை வழக்கில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன் கொலை நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. கொலை தொ டர்பாக முக்கியஆதாரங்கள் கிடைத்துள்ளது. கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ் மேற்பார்வையில் 7 தனி ப்ப டை அமைக்கப்பட்டுள்ளன. ஐ.ஜி. உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். குடும்ப பிரச்சினையால் முன்விரோதம் ஏற்பட்டு கொலை நடந்திருக்க கூடும் என தெரிகிறது. ஆனாலும் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். வளர்மதி குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இது கொடூரமான கொலை. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம். இவ்வாறு அவர் கூறினார் .அப்போது போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், டி.எஸ்.பி. ரமேஷ், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். வளர்மதி மற்றும் அவரது குழந்தைகள் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள், மணிகண்டனின முதல் மனைவி குடும்பத்தினர் மற்றும் வளர்மதியின் வீட்டின் அருகே உள்ள 2 பேர் என ெமாத்தம் 6 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.






