search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Baricard"

    • நகர சபை ஆணையர் மற்றும் திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் ஆகியவற்றிற்கு நேரில் சென்று ஒரு கோரிக்கை மனு கொடுத்த னர்.
    • பொதுமக்கள் போலீசாரின் இந்த கெடுபிடியால் கடை தெருவுக்குள் வருவதையே தவிர்த்து விடுகின்றனர்

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அனைத்து வணிகர்கள் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் டிடி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகளும் வியா பாரிகளும் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர், நகர சபை ஆணையர் மற்றும் திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் ஆகிய வற்றிற்கு நேரில் சென்று ஒரு கோரிக்கை மனு கொடுத்த னர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது,

    திருக்கோவிலூர் நகர போலீஸ் நிலையம் சார்பில் கட்ட கோபுரம் அருகே பேரிகார்டு வைக்கப்பட்டு அனைவருமே கட்ட கோபுரத்தின் வாயில் வழியாக கடைத்தெருவிற்கு செல்லும் வகையில் வைத்துள்ளனர். அதேபோல் போக்குவரத்து காவல்துறை சார்பில் கட்ட கோபுரத்திற்கு முன்னதாக எம்ஜிஆர் சிலை அருகில் போக்குவரத்திற்கு இடையூறாக சாமியான பந்தல் போட்டு கடை தெருவுக்கு செல்லும் ரோட்டையே ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பஸ் நிலையத்தில் இருந்து கடை தெருவுக்கு வரும் பொதுமக்கள் போலீசாரின் இந்த கெடுபிடியால் கடை தெருவுக்குள் வருவதையே தவிர்த்து விடுகின்றனர். திருக்கோவிலூர் நகர பொதுமக்கள் மற்றும் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்களை நம்பி கட்டை கோபுர தெரு கடைவீதி பள்ளிவாசல் வீதி மற்றும் சின்ன கடை தெருவில் உள்ள சுமார் 600க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் உள்ளன. அது தவிர சுமார் 200க்கும் மேற்பட்ட தெருவோர பாதசாரி வியாபாரிகளும் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் எங்களைப் போன்ற வணிக நிறுவனங்களும் பாதசாரி வியாபாரிகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே கட்ட கோபுரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேரீகார்டரை அகற்றிவிட்டு கடைத்தெருவுக்குள் வருவ தற்கு ஒரு வழியா கவும் கோபுரத்தின் வழியே வெளியே செல்லும் வழியா கவும் மாற்றி யமைத்தல் வியாபாரிகளின் வியாபாரம் கெடாது. எனவே வியா பாரிகள் மற்றும் பாதசாரி வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பேரிகார்டுகளால் ஏற்படும் வாகன விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப் உத்தவிட்டார்.

    மாமல்லபுரம்:

    இ.சி.ஆர் சாலையில் இரவு நேரம் வேகத்தடைக்காக வைக்கப்படும் பேரிகார்டுகளால் ஏற்படும் வாகன விபத்துக்களை தடுக்க அப்பகுதிகளில் வெளிச்சத்தை ஏற்படுத்த செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப் உத்தவிட்டார்.

    இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எல்கை துவங்கும் பகுதியான திருவிடந்தை இ.சி.ஆரில், மாமல்லபுரம் போக்குவரத்து போலீசார் பேரிகார்டுகளில் சீரியல் விளக்குகள் அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் அனைத்து வாகனங்கள் நின்று நிதானமாக செல்கிறது.

    ×