என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போக்குவரத்துக்கு இடையுறாக உள்ளபேரிகார்டுகளை அகற்ற வியாபாரிகள் மனு
- நகர சபை ஆணையர் மற்றும் திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் ஆகியவற்றிற்கு நேரில் சென்று ஒரு கோரிக்கை மனு கொடுத்த னர்.
- பொதுமக்கள் போலீசாரின் இந்த கெடுபிடியால் கடை தெருவுக்குள் வருவதையே தவிர்த்து விடுகின்றனர்
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அனைத்து வணிகர்கள் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் டிடி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகளும் வியா பாரிகளும் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர், நகர சபை ஆணையர் மற்றும் திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் ஆகிய வற்றிற்கு நேரில் சென்று ஒரு கோரிக்கை மனு கொடுத்த னர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது,
திருக்கோவிலூர் நகர போலீஸ் நிலையம் சார்பில் கட்ட கோபுரம் அருகே பேரிகார்டு வைக்கப்பட்டு அனைவருமே கட்ட கோபுரத்தின் வாயில் வழியாக கடைத்தெருவிற்கு செல்லும் வகையில் வைத்துள்ளனர். அதேபோல் போக்குவரத்து காவல்துறை சார்பில் கட்ட கோபுரத்திற்கு முன்னதாக எம்ஜிஆர் சிலை அருகில் போக்குவரத்திற்கு இடையூறாக சாமியான பந்தல் போட்டு கடை தெருவுக்கு செல்லும் ரோட்டையே ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பஸ் நிலையத்தில் இருந்து கடை தெருவுக்கு வரும் பொதுமக்கள் போலீசாரின் இந்த கெடுபிடியால் கடை தெருவுக்குள் வருவதையே தவிர்த்து விடுகின்றனர். திருக்கோவிலூர் நகர பொதுமக்கள் மற்றும் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்களை நம்பி கட்டை கோபுர தெரு கடைவீதி பள்ளிவாசல் வீதி மற்றும் சின்ன கடை தெருவில் உள்ள சுமார் 600க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் உள்ளன. அது தவிர சுமார் 200க்கும் மேற்பட்ட தெருவோர பாதசாரி வியாபாரிகளும் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் எங்களைப் போன்ற வணிக நிறுவனங்களும் பாதசாரி வியாபாரிகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே கட்ட கோபுரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேரீகார்டரை அகற்றிவிட்டு கடைத்தெருவுக்குள் வருவ தற்கு ஒரு வழியா கவும் கோபுரத்தின் வழியே வெளியே செல்லும் வழியா கவும் மாற்றி யமைத்தல் வியாபாரிகளின் வியாபாரம் கெடாது. எனவே வியா பாரிகள் மற்றும் பாதசாரி வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்