என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சியில் ராஜா நகர் ஏரி பகுதியில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை?  -போலீசார் தீவிர விசாரணை
    X

    கள்ளக்குறிச்சியில் ராஜா நகர் ஏரி பகுதியில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை? -போலீசார் தீவிர விசாரணை

    • ஏரி பகுதியில் உள்ள மரத்தில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்ததாக தகவல் வந்தது,
    • இவர் ராமச்சந்திரன்( )இவர் கம்பிகட்டும் வேலை பார்ததுவந்தார்,

    கள்ளக்குறிச்சி,:

    கள்ளக்குறிச்சி ராஜா நகர் ஏரி பகுதியில் உள்ள மரத்தில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்ததாக கள்ளக்குறிச்சி போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், தூக்கில் தொங்கியவர் சின்னசேலம் அருகே நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 45) என்பதும், இவர் கம்பி கட்டும் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×