என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • நெடுஞ்சாலைத்துறையினர் விரிவான ஆய்வு நடத்தி ஓடையூர் ஏரிப்பகுதி பாதிக்காத வகையில் திட்டத்தில் மாற்றம் செய்து உள்ளனர்.
    • விரிவான அறிக்கையை கடந்த ஜூலை 14 -ந்தேதி பசுமை தீர்ப்பாயத்தில் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்து உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சாலை கூவத்தூர் அடுத்த முகையூர் அருகே உள்ள ஓடையூர் ஏரியை ஒட்டி செல்கிறது. இதற்காக அடையாள கற்கள் நடப்பட்டன. நெடுஞ்சாலை பணியால் ஏரிப்பகுதியில் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் நெஞ்சாலை பணியை தொடர பசுமைத்தீர்ப்பாயம் தடை விதித்தது. மேலும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் சாலை அமைப்பதற்கான மாற்று முறைகளை பரிசீலிக்க நெஞ்சாலைத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் விரிவான ஆய்வு நடத்தி ஓடையூர் ஏரிப்பகுதி பாதிக்காத வகையில் திட்டத்தில் மாற்றம் செய்து உள்ளனர். சென்னையில் இருந்து வரும்போது வலது புறத்தில் சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ளாமல், இடதுபுறத்தில் மேலும் 3 மீட்டர் முதல் 4 மீட்டர் வரை சாலையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் ஏரி பகுதியை தவிர்க்க புதிய தடுப்பு சுவர் கட்டவும் முடிவு செய்து உள்ளனர். ஆனால் ஏரியின் குறுக்கே புதிய நான்கு வழிப்பாதையில் மேம்பாலம் கட்டுவது தொடர்பான வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதுதொடர்பான விரிவான அறிக்கையை கடந்த ஜூலை 14 -ந்தேதி பசுமை தீர்ப்பாயத்தில் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்து உள்ளது.

    மேலும் புதிய திட்டத்திற்கான வரைபடத்தை சமர்ப்பிக்குமாறு பசுமை தீர்ப்பாயம் கேட்டுள்ளது. இந்த வழக்கு இன்று(24-ந் தேதி) (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    • ஒவ்வொரு குடும்பத்திலும் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம்.
    • முகாம்கள் மூலம் ஆரம்ப தொகை இல்லாமல் சேமிப்பு கணக்கு துவங்கி பயனடையலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான மு.முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் உரிமைத் தொகை பெற கட்டணமின்றி "சேமிப்பு கணக்கு" தொடங்க 50 இடங்களில் சிறப்பு முகாம் நடத்த காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி ஏற்பாடு செய்து உள்ளது.

    தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் வரும் ஜூலை 24-ந் தேதி தொடங்குகின்றன.

    இத்திட்டத்தில் பயன்பெற ஒவ்வொரு குடும்பத்திலும் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ளவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க, சேமிப்பு கணக்கு துவங்க, முகாம் நடக்கும் நாளில் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, 2 பாஸ் போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றை கொண்டு ஆரம்ப தொகை இல்லாமல் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் கிளைகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அருகாமையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    பொது மக்கள் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி நடத்தும் இந்த முகாம்கள் மூலம் ஆரம்ப தொகை இல்லாமல் சேமிப்பு கணக்கு துவங்கி பயனடையலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பக்தர்கள் தும்பவனம் மாரியம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்து தரிசனம் செய்தனர்.
    • மூலவர் கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    காஞ்சிபுரம் நாகலத்து தெருவில் அமைந்து உள்ள ஸ்ரீ சிவகாமி சமேத அழகிய நடராஜ பெருமான் ஆலயத்தில் ஸ்ரீ கங்கை அம்மன் ஸ்ரீ தும்பவனம் மாரியம்மன் சித்திரை மற்றும் ஆடித்திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ கங்கை அம்மன் நின்ற திருக்கோலத்தில் சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார்.

    இதனைத் தொடர்ந்து சிறப்பு பம்பை மேள இசையுடன் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று இதில் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினார்கள். முன்னதாக மூலவர் கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தூபதீப ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் தும்பவனம் மாரியம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்து தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை ஆலய பரம்பரை தர்மகத்தா தெருவாசிகளுடன் இணைந்து சிறப்பாக செய்தார் . கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டுறவு பட்டு சங்கங்கள் மூலம் வருவாய்களை அதிகரிக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது.
    • கைத்தறி ரகங்களை விசைத்துறையில், உற்பத்தி செய்து வருவதை தடுக்க தனிகுழு அமைக்கப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வழக்கறுத் தீஸ்வரர் கோவில் தெருவில், ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் புதிய விற்பனை நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

    இதனை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர்.காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.பின்னர் அமைச்சர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது-

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் உருவாக்கப்படும் பட்டுகள் தான் உண்மையான கைத்தறி பட்டுகள். இந்த பட்டுக்களில் தான் தங்கத்தின் அளவு, வெள்ளி அளவு ஆகியவற்றுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

    கோ-ஆப்-டெக்ஸ் நிறுவனம் ரூ.7 கோடி நஷ்டத்தில் இயங்கியது. தற்போது அதில் ரூ.9 கோடி லாபம் கொண்டு வந்துள்ளோம். கூட்டுறவு பட்டு சங்கங்கள் மூலம் வருவாய்களை அதிகரிக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. ரூ.150 கோடியாக இருந்த விற்பனையை ரூ.200 கோடியாக உயர்த்தினோம். இந்த ஆண்டு ரூ.400 கோடி இலக்கு வைத்துள்ளோம். இதை நாங்கள் ரூ.1000 கோடியாக அதிகரிப்போம்.

    காமாட்சியம்மன் பட்டு கூட்டுறவில் விற்பனை ரூ.10 கோடியில் இருந்து ரூ.13 கோடியாக அதிகரித்துள்ளது. நலிவடைந்த சங்கங்களுக்கு முதலீடுகள் கொடுத்து தொடர்ந்து அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

    கைத்தறி ரகங்களை விசைத்துறையில், உற்பத்தி செய்து வருவதை தடுக்க தனிகுழு அமைக்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு உண்மையான பட்டு எது? என்று தெரியவில்லை. இதனை தடுக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் போலி பட்டுகள் குறித்த விளம்பர பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். அனைத்து கூட்டுறவு கடைகளிலும், இதுகுறித்து தகவல்கள் இடம்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திடீரென சக்கர பாணியை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
    • பலத்த காயம் அடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    படப்பை அருகே உள்ள ஆதனூர் அம்பாள் நகரை சேர்ந்தவர் சக்கரபாணி (41). இவர் ஆதலூர் ஊராட்சியில் தி.மு.க. அவை தலைவராக உள்ளார். மேலும் வீடு கட்டுவதற்கு தேவையான மணல், ஜல்லி போன்றவைகளை விற்பனை செய்யும் தொழிலும், ஜே.சி.பி. எந்திரத்தை வாடகைக்கு விட்டும் வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை அவர் தனது மகனை அருகில் உள்ள பள்ளியில் விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்துகொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர்கள் திடீரென சக்கர பாணியை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சக்கரபாணிக்கு பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • ராஜீ உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜீ(வயது 36).இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 6 வயது மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளன. ராஜீ தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு மாதமாக வீட்டு உபயோக பொருட்கள் மார்க்கெட்டிங் தொழிலையும் செய்து வந்தார்.

    இந்நிலையில் ராஜீ தனது நண்பர்கள் அக்கம் பக்கத்தினர் மற்றும் தெரிந்தவர்கள் என பலரிடம் பணம் பெற்று ஆருத்ரா, மற்றும் ஐ.எப்.எஸ். நிதி நிறுவனங்களில் ரூ. 7லட்சம் வரை பணம் கட்டியுள்ளார். இந்த நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு வழக்கில் சிக்கியதையடுத்து ராஜீ பணத்தை இழந்து தவித்தார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த ராஜீ என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார். இதற்கிடையே பணம் கொடுத்தவர்களின் நெருக்கடியும் அதிகரித்தது.

    இந்நிலையில் ராஜீ வீட்டில் தனியாக இருந்த வந்துள்ளார். நீண்ட நேரமாகியும் ராஜீ வெளியில் வராததால் அவரது பெரியம்மா நீலா என்பவர் கதவை தட்டினார். அப்போதும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சிமெண்ட் சீட் போட்ட இரும்பு கம்பியில் வேட்டியால் தூக்கு போட்டு ராஜீ தற்கொலை செய்தது தெரிய வந்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சிவகாஞ்சி போலீசார் விரைந்து வந்து ராஜீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ராஜீ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ள நிலையில் மனைவி மற்றும் குழந்தைகள் கண்ணீருடன் தவித்து வருகிறார்கள்.

    ராஜீ உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆருத்ரா, ஐ.எப்.எஸ். நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் பலர் மன உளைச்சலில் தவித்து வரும் நிலையில் இது போன்று மேலும் பலர் தற்கொலை செய்து கொள்ளும் முன்னர் பணத்தை இழந்தவர்களுக்கு அதனை திருப்பி கொடுக்க போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் குரலாக உள்ளது.

    • காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சி, தாம்பரம், கோயம்பேடு பகுதிகளுக்கு 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
    • கோயம்பேட்டில் இருந்து திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, திருப்பதிக்கு 50 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 150 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் பஸ்களில் திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சி, தாம்பரம், கோயம்பேடு பகுதிகளுக்கு 60 சிறப்பு பஸ்களும், தாம்பரத்தில் இருந்து திருச்சி, விழுப்புரம் பகுதிகளுக்கு 40 சிறப்பு பஸ்களும், கோயம்பேட்டில் இருந்து திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, திருப்பதிக்கு 50 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 150 பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம் மண்டலம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றாமல் இருந்தனர்.
    • காலி செய்யாமல் இருந்த 78 வீடுகளை ஜே.சி.பி. எந்திரத்துடன் அகற்றும் பணி இன்று தொடங்கியது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் நகரப் பகுதிக்குள் வேகவதி ஆறு பாய்கிறது. ஆற்றின் கரையோரத்தில் இரு புறங்களிலும் ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தன.

    இந்நிலையில் வேகவதி ஆற்றின் கரைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்ற போது அங்கு குடியிருந்த மக்களுக்கு கீழ்கதிர்பூர் பகுதியில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டது.

    ஆனால் வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றாமல் இருந்தனர். இதனால் வேகவதி ஆறு தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்தது.

    இந்நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதையடுத்து வேகவதி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியை நீர்வளத் துறை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தாயார் குளம் பகுதியில் வேகவதி ஆற்றின் கரையோரம் அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு காலி செய்யாமல் இருந்த 78 வீடுகளை ஜே.சி.பி. எந்திரத்துடன் அகற்றும் பணி இன்று தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் வருவாய்த்து றையினரும் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியை கண்காணித்து வருகிறார்கள். வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் முழுவதையும் அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பயன்பெற விரும்பும் சிறு விவசாயிகள் இ-வாடகை செயலியில் சிறு விவசாய சான்று பதிவேற்றி பதிவு செய்து பயன் பெறலாம்.
    • நிலவரை படம், ஆதார் அட்டை மற்றும் ஒளிம நகல் ஆகியவற்றுடன் பதிவு செய்து பயன் பெறலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் பொறியியல் துறையில் வேளாண் எந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ், உழவு பணி மேற்கொள்ளும் சிறு விவசாயிகளுக்கு மொத்ததொகையில் 50 சதவீதம் தொகை உழவு மானியமாக வழங்கப்படவுள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தை உழவு செய்ய அதிகபட்ச மானியமாக ரூ.250 என்ற அடிப்படையில் ஒரு விவசாயிக்கு ஒரு முறை நன்செய் உழவுக்கு ரூ.625 ம் புன்செய் உழவுக்கு ரூ.1250 ம் அதிகபட்ச மானியமாக வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் சிறு விவசாயிகள் இ-வாடகை செயலியில் சிறு விவசாய சான்று பதிவேற்றி பதிவு செய்து பயன் பெறலாம். வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், சிறு விவசாயி சான்று. நிலவரை படம், ஆதார் அட்டை மற்றும் ஒளிம நகல் ஆகியவற்றுடன் பதிவு செய்து பயன் பெறலாம்.

    காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

    செயற்பொறியாளர், 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35. செல்போன் எண் 99529 52253.

    உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் 631 502. அலைபேசி எண்: 044- 24352356, செல்போன் எண்: 90030 90440.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாம்கள் நடைபெறும் இடங்கள் பற்றி அறியவும்.
    • மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட முகாம் 5.8.2023 முதல் 16.8.2023 வரை நடைபெறும்.

    மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத் உத்திரமேரூர் திருப்பெரும்புதூர், குன்றத்தூர், ஆகிய வட்டாசியர் அலுவலகங்கள் உள்ளன. வட்டாட்சியர் அலுவலகங்களில், மகளிர் உரிமைத்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் பெற, சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு பொது விநியாக நியாயவிலைக் கடைகள், அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், இ-சேவை மையங்கள், வாக்குச்சாவடி மையங்கள், சமுதாய கூடங்கள் போன்ற இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் மகளிர் உரிமைத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாம்கள் நடைபெறும் இடங்கள் பற்றி அறியவும். விண்ணப்பங்கள் தொடர்பான சந்தேகங்களை பூர்த்தி செய்ய ஏதுவாகவும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறைகளின் விவரங்கள் வருமாறு:-

    மாவட்ட கலெக்டர் அலுவலகம்-044 27237107, 044-27237207, காஞ்சிபுரம் வட்டம்-044-27222776, வாலாஜாபாத் வட்டம்-044-27256090, உத்திரமேரூர் வட்டம்-044-27272230, திருப்பெரும்புதூர் வட்டம்-044-27162231, குன்றத்தூர் வட்டம்-044-24780449.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஓட்டலுக்கு மாநகராட்சி சார்பில் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • சாலையோர உணவகங்களையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிரபல உணவகத்தில் விற்பனை ஆகாத உணவை பதப்படுத்தி மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலருக்கு புகார் வந்தது.

    இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து அந்த உணவகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது விற்பனை ஆகாத உணவை மீண்டும் பதப்படுத்தி விற்பனை செய்ய வைத்திருந்ததும், மேலும் ஓட்டலை உரிய பராமரிப்பு இல்லாமல் அசுத்தமாகவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு மாநகராட்சி சார்பில் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு நாள் உணவு விற்பனைக்கு தடை விதித்து உணவகத்தை தூய்மைப்படுத்திய பின்னர் மீண்டும் விற்பனையை தொடங்க உணவக உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இதேபோல் சுகாதார அதிகாரிகள், உரிய அனுமதியின்றியும் சுகாதார மில்லாமலும் செயல்படும் சாலையோர உணவகங்களையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மரக்கன்றுகள் நடும் விழா ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தலைமையில் நடைபெற்றது.
    • தரிசு நிலத்தில் கிராம மக்களின் உதவியோடு 400 பயன் தரும் மரக்கன்று களை நட்டு வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக கொண்டாடி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தரிசு நிலங்களில் மரக்கன்றுகள் நடும் விழா ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தலைமையில் நடைபெற்றது.

    மரக்கன்றுகள் நடும் விழாவில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே. தேவேந்திரன் ஒன்றிய குழு துணைத் தலைவர் பி.சேகர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஞ்சனா, முத்து சுந்தரம், ஆகியோர் கிராம மக்களோடு கலந்து கொண்டு ஆடிப்பட்டம் தேடி விதைக்க வேண்டும் எனும் பழமொழிக்கு ஏற்ப தேவரியம்பாக்கம் கிராமப் புறத்தில் தேர்வு செய்யப்பட்ட தரிசு நிலத்தில் கிராம மக்களின் உதவியோடு 400 பயன் தரும் மரக்கன்று களை நட்டு வைத்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோவிந்தராஜன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×