என் மலர்tooltip icon

    வழிபாடு

    காஞ்சிபுரம் நடராஜ பெருமான் கோவிலில் ஆடித்திருவிழா: காப்பு கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்
    X

    காஞ்சிபுரம் நடராஜ பெருமான் கோவிலில் ஆடித்திருவிழா: காப்பு கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்

    • பக்தர்கள் தும்பவனம் மாரியம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்து தரிசனம் செய்தனர்.
    • மூலவர் கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    காஞ்சிபுரம் நாகலத்து தெருவில் அமைந்து உள்ள ஸ்ரீ சிவகாமி சமேத அழகிய நடராஜ பெருமான் ஆலயத்தில் ஸ்ரீ கங்கை அம்மன் ஸ்ரீ தும்பவனம் மாரியம்மன் சித்திரை மற்றும் ஆடித்திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ கங்கை அம்மன் நின்ற திருக்கோலத்தில் சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார்.

    இதனைத் தொடர்ந்து சிறப்பு பம்பை மேள இசையுடன் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று இதில் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினார்கள். முன்னதாக மூலவர் கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தூபதீப ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் தும்பவனம் மாரியம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்து தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை ஆலய பரம்பரை தர்மகத்தா தெருவாசிகளுடன் இணைந்து சிறப்பாக செய்தார் . கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×