என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • 3 பேரும் சிறையில் இருக்கும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • 2 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    சோழிங்கநல்லூர்:

    செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு 7-வது அவென்யுவில் வசித்து வந்தவர் அருண்குமார் (வயது 24). தனியார் கம்பெனியில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். கடந்த 17-ந்தேதி அதிகாலை வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளை காணாது அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தீவிர விசாரணை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் சோழிங்கநல்லூர் கே.கே.சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது நம்பர் பிளேட் இல்லாமல் ஒரே மோட்டார் சைக்கிளிள் வந்த 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த இளவரசன் (24), யாழின்ராஜ் (24), செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த அசோக் (24) என்பது தெரியவந்தது. அவர்கள் திருட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி சென்னை மணலி புதுநகர் பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது.

    தொடர் விசாரணையில் இளவரசன் மீது திருச்சி, துறையூர் போலீஸ் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி, உள்ளிட்ட பல வழக்குகளில் பலமுறை சிறை சென்று வந்ததுள்ளார் என்பதும் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

    அசோக் மீது அடிதடி, திருட்டு, வழிப்பறி, மிரட்டல், கத்தியால் வெட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட பலவழக்குகள் நிலுவையில் உள்ளது. பலமுறை சிறை சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. யாழின்ராஜ் மீது கடந்த 2021-ம் ஆண்டு பெண் கடத்தல் வழக்கு, ஆள் கடத்தல் வழக்குகளில் சிறை சென்றதும், 12-ம் வகுப்பு முடித்து விட்டு டாக்டருக்கு படிக்க பிலிப்பைன்ஸ் சென்று வந்ததும், கடைசியாக சுகாதார ஆய்வாளராக தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று பணி உத்தரவுக்காக காத்திருப்பதும் தெரியவந்தது. 3 பேரும் சிறையில் இருக்கும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தால் அசோக் சென்னையில் திருடும் மோட்டார் சைக்கிள்களை திருச்சிக்கு எடுத்து சென்று இளவரசன் மற்றும் யாழின்ராஜிடம் விற்பனைக்கு கொடுத்துள்ளார்.

    இடையில் துறையூர் போலீசாரின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து இளவரசன், யாழின் ராஜ் இருவரும் அங்குள்ள கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். யாழின்ராஜின் மனைவிக்கு வலிப்பு நோய் உள்ளதால் அதை சரி செய்ய சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால் கம்பெனியில் வேலை பார்த்தால் போதுமான பணம் கிடைக்காது என்பதால் திருட்டு தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    • ஓட்டலுக்கு வந்த திருமலை தனக்கு ஓசியில் சாப்பாடு கேட்டு ரகளையில் ஈடுபட்டார்.
    • தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் திருமலை (வயது50). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதி காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் ஓட்டலில் அடிக்கடி சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில் திருமலை தனக்கு ஓசியில் சாப்பாடு தரும்படி அடிக்கடி ஓட்டல் நடத்திவரும் பச்சையம்மாளிடம் கேட்டார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று மாலையும் ஓட்டலுக்கு வந்த திருமலை தனக்கு ஓசியில் சாப்பாடு கேட்டு ரகளையில் ஈடுபட்டார்.

    இதனை ஓட்டலில் ஊழியராக வேலைபார்த்து வந்த காஞ்சிபுரம் ரெயில்வே சாலை, சன்னதி தெருவை சேர்ந்த ராமு என்கிற ராமச்சந்திரன்(40) என்பவர் கண்டித்தார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் அருகில் கிடந்த சவுக்கு கட்டையால் திருமலையை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே கொலையாளி ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதே பகுதியில் பதுங்கி இருந்த ராமச்சந்திரனை கைது செய்தனர். அவரிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பலத்த மழையாக விட்டு விட்டு பெய்ததால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.
    • திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்தது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தின் மேல்பகுதியில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது

    இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை கொட்டியது. இதனால் காலை முதலே குளிர்ச்சியான சூழல்நி லவியது.

    பலத்த மழையாக விட்டு விட்டு பெய்ததால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர். இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, வெள்ளை கேட், ஒலிமுகமது பேட்டை, தாமல், ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், குருவிமலை, பரந்தூர், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்தது.

    அதிகாலையில் பலத்த மழை கொட்டியதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறும்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். மிதமான மழையே பெய்து வருவதால் வழக்கம்போல் கல்லூரிகளும் செயல்படும் என்றார்.

    திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர். முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி மழைநீர் மற்றும் கிருஷ்ணா கால்வாய் மூலம் 630 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி ஆகும். தற்போது ஏரியில் 2624 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    • பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.
    • விஜயேந்திரரின் உருவப்படம் மற்றும் பிரசாதத்தை ஸ்ரீமடத்தின் நிர்வாகிகள் கவர்னருக்கு வழங்கினார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், காமாட்சி அம்மன் கோவில் மற்றும் சங்கரமடம் ஆகியவற்றில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

    பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.

    கோவிலுக்கு வந்த அவரை அறங்காவலர் குழுவின் உறுப்பினர் வ.ஜெகன்னாதந், காஞ்சிபுரம் சரக அறநிலையத்துறை இணை ஆணையர் ரா.வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, கோவில் செயல் அலுவலர்கள் முத்துலட்சுமி, தியாக ராஜன், சீனிவாசன் மற்றும் கோவில் அர்ச்சகர் கே.ஆர்.காமேசுவர சிவாச்சாரியார் ஆகியோர் பூரண கும்ப மரியாதையுடன் கோவிலுக்குள் அழைத்து சென்றனர்.

    மகாசக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வரும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை கோவில் ஸ்தானீகர்கள் சியாமா சாஸ்திரிகள், நடன சாஸ்திரிகள், கோவில் மணியக்காரர் சூரியநாராயணன், சங்கர மடத்தின் நிர்வாகி ஜெயராமன் ஆகியோர் வரவேற்றனர்.

    காஞ்சி சங்கரமடத்தில் உள்ள மகாபெரியவர் அதிஷ்டானத்துக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை மடத்தின் நிர்வாகி கீர்த்தி வாசன், சங்கரா கண் மருத்துவமனையின் தலைவர் பம்மல் விஸ்வநாதன் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். பிருந்தாவனத்தில் மகா பெரியவர் கிரீடம் அணிந்தும் தங்க ஹஸ்தத்துடனும் ஜெயேந்திரர் மயில்தோகை அலங்காரத்திலும் காட்சி அளித்தார்.

    பிருந்தாவனத்தின் அர்ச்சகர் பாலாஜி சங்கர மடத்தின் சிறப்புகள் மற்றும் காஞ்சி மடாதிபதிகளின் சிறப்புகளை விரிவாக விளக்கிக் கூறினார். விஜயேந்திரரின் உருவப்படம் மற்றும் பிரசாதத்தை ஸ்ரீமடத்தின் நிர்வாகிகள் கவர்னருக்கு வழங்கினார்கள்.

    • பசு மாடுகளை விநாயக மூர்த்தி அவிழ்த்து விட்ட நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடுகள் நீண்ட நேரமாக வரவில்லை.
    • மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து உள்ளனர்.

    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா தொள்ளாழி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 53). விவசாயி. இவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக 4 கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். நாள்தோறும் பசு மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுவது வழக்கம்.

    இந்த நிலையில் பசு மாடுகளை விநாயக மூர்த்தி அவிழ்த்து விட்ட நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடுகள் நீண்ட நேரமாக வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விநாயகமூர்த்தி மேய்ச்சல் நிலத்திற்கு சென்று பார்த்தபோது அருகில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த மின்கம்பம் உடைந்து விழுந்து, மின்சார கம்பிகள் கீழே கிடப்பதை கண்டு திடுக்கிட்டு உடனடியாக வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    இதன் பேரில் மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து உள்ளனர்.

    அருகில் சென்று பார்த்தபோது மின்சாரக்கம்பம் உடைந்து மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்ததால் அங்கே மேய்ந்து கொண்டிருந்த 4 கறவை மாடுகள் மீது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்து காணப்பட்டது.

    இதுகுறித்து சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பேரன்கள் லட்சன், திலக் ஆகிய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • மகாதேவன் வீட்டின் அருகே செங்குளவி இருந்த பகுதிகளில் ரசாயன மருந்து கலந்த தண்ணீரை பீச்சியடித்து குளவிகளை விரட்டினர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரத்தை சேர்ந்தவர் மகாதேவன் (வயது50). கட்டிட தொழிலாளி. இவர் வீட்டின் அருகே உள்ள முட்புதரை சுத்தம் செய்தார். அந்த நேரத்தில் அருகில் இருந்த பனை மரத்தின் காய்ந்த ஓலை ஒன்று கீழே விழுந்தது. அதில் இருந்த விஷமுள்ள செங்குளவிகள் பறந்து வந்து மகாதேவன் மற்றும் அருகில் நின்ற பேரன்கள் லட்சன், திலக் ஆகியோரை கொட்டியது. இதில் அவர்கள் 3 பேரும் வலியால் அலறி துடித்தனர். மேலும் அவர்களது உடல்நிலையும் மோசம் அடைந்தது.

    இதைத்தொடர்ந்து மகாதேவன் உள்பட 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாதேவன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பேரன்கள் லட்சன், திலக் ஆகிய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மகாதேவன் வீட்டின் அருகே செங்குளவி இருந்த பகுதிகளில் ரசாயன மருந்து கலந்த தண்ணீரை பீச்சியடித்து குளவிகளை விரட்டினர்.

    இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இ-சேவை மையம் மூலமாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களிடம் மேல்முறையீடு செய்யலாம்.
    • விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள்ளாக தீர்வு காணப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏற்கப்பட்ட விண்ணப்பங்கள் போக மீதமுள்ள விண்ணப்பங்கள் கள ஆய்வுக்குட்படுத்தி அதன் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்து விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு 29.9.2023 வரை குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்.

    மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த விவரமறிய, மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையத்தினை தொடர்பு கொண்டு தங்களுடைய ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் தங்களுடைய விண்ணப்பம் பற்றிய விவரங்களை எவ்வித கட்டணமும் இன்றி அறிந்து கொள்ளலாம்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் மகளிர் உரிமைத் திட்டத்தில் தான் தகுதியானவர் என கருதும்பட்சத்தில் இ-சேவை மையம் மூலமாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களிடம் மேல்முறையீடு செய்யலாம்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் குறித்த நிலை அறியவோ, மேல்முறையீடு செய்யவோ எந்த கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள்ளாக தீர்வு காணப்படும்.

    தகுதியற்ற பயனாளிகள் ஒருவேளை தவறுதலாக தேர்வாகி இருந்தால் அது குறித்த குறிப்பான தகவல்களையும் தெரிவிக்கலாம்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த தகவல்களை மாவட்ட கலெக்டர் அலுவலக உதவி மைய எண் 9003758638-யை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மோட்டார் சைக்கிள் ஓட்டி விபத்தில் சிக்கிய யூடியூபர் டி.டி.எப்.வாசன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
    • வழக்குகள் பதிவு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மக்களை அச்சுறுத்தும் விதமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி விபத்தில் சிக்கிய யூடியூபர் டி.டி.எப்.வாசன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    இவர் மீது பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாகனம் ஓட்டுதல் பிரிவு 279, மரணம் விளைவிக்கும் விதத்தில் குற்றம் செய்தல் பிரிவு 308, மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துதல் பிரிவு 336, மோட்டார் வாகன சட்டத்தின்படி ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் பிரிவு 184 மற்றும் குற்றங்களை தூண்டுதலுக்கான தண்டனை பிரிவு 188 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதுபோன்று மக்களை அச்சுறுத்தும் விதமாகவும், போக்குவரத்து விதிகளை மீறியும் வாகனங்களை ஓட்டி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துபவர்கள் மீது நடைமுறையில் உள்ள சட்டவிதிகளின்படி குற்ற வழக்குகள் பதிவு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத, அனுமதிக்கப்படாத ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஹெல்மெட்டை பயன்படுத்தியதால் சர்ச்சை.
    • பிரத்யேகமான வெளிநாட்டு ஹெல்மெட்டை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது என கூறப்பட்டுள்ளது.

    பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன் கோவைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்து விபத்தில் சிக்கினார். இதில், டிடிஎஃப் வாசனுக்கு கை முறிவு ஏற்பட்டது.

    பைக் வீலிங் செய்து, விபத்தில் சிக்கிய நிலையில் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார்.

    தொடர்ந்து, யூ டியூபர் டிடிஎஃப் வாசனை அக்டோபர் 3ம் தேதி வரை சிறையில் வைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுவரை புழல் சிறையில் டிடிஎஃப் வாசன் அடைக்கப்படுகிறார்.

    இந்நிலையில், வெளிநாட்டு ஹெல்மெட்டை அனுமதியின்றி பயன்படுத்தியதாக டிடிஎஃப் வாசன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    டிடிஎஃப் வாசனின் நண்பர் அஜீஸ் இந்த ஹெல்மெட்டை வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    அஜீஸ் வெளிநாட்டில் இருந்து விலை உயர்ந்த ஹெல்மெட்டை உரிய அனுமதி பெறாமல் எவ்வாறு கொண்டு வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத, அனுமதிக்கப்படாத ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஹெல்மெட்டை பயன்படுத்தியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

    பிரத்யேகமான வெளிநாட்டு ஹெல்மெட்டை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது என கூறப்பட்டுள்ளது.

    ஐஎஸ்ஐஎஸ் அனுமதி சான்று பெறாத காரணத்தினால் அந்த ஹெல்மெட்டை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்த முடியாது.

    • விபத்தில் சிக்கிய நிலையில் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.
    • அக்டோபர் 3ம் தேதி வரை புழல் சிறையில் டிடிஎஃப் வாசன் அடைக்கப்படுகிறார்.

    பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன் கோவைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கினார். இதில், டிடிஎஃப் வாசனுக்கு கை முறிவு ஏற்பட்டது.

    பைக் வீலிங் செய்து, விபத்தில் சிக்கிய நிலையில் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்நிலையில், யூ டியூபர் டிடிஎஃப் வாசனை அக்டோபர் 3ம் தேதி வரை சிறையில் வைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தொடர்ந்து, அக்டோபர் 3ம் தேதி வரை புழல் சிறையில் டிடிஎஃப் வாசன் அடைக்கப்படுகிறார்.

    • சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது விபத்து
    • இவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

    பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடி எஃப் வாசன் அம்பத்தூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பைக்கில் செல்ல முடிவு செய்தார். அதன்படி சென்னை- பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு காரை முந்தி செல்ல வேண்டிய நிலையில், சாகசம் செய்ய முயன்றார். அப்போது அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்தது. டிடிஎஃப் வாசம் பைக்கில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார்.

    அப்போது, அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கிடையே, அவருடைய பைக் பறிமுதல் செய்யப்பட்டு காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அவரது லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நண்பர் வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அவரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில்தான் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

    • சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது விபத்து
    • கையில் முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்

    பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடி எஃப் வாசன் அம்பத்தூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பைக்கில் செல்ல முடிவு செய்தார். அதன்படி சென்னை- பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு காரை முந்தி செல்ல வேண்டிய நிலையில், சாகசம் செய்ய முயன்றார். அப்போது அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்தது. டிடிஎஃப் வாசம் பைக்கில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார்.

    அப்போது, அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கையில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. பின்னர், கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, அவருடைய பைக் பறிமுதல் செய்யப்பட்டு காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரர் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×