என் மலர்tooltip icon

    ஈரோடு

    • அடுக்குமாடி குடியிருப்பு பகுதி சுகாதார மில்லாத வகையில் புதர் மண்டி கிடப்பதாக கூறப்படுகிறது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் காணப்படு கிறது.
    • அதிகாரிகள் இந்த பகுதியில் ஆய்வு செய்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ளது குதிரைகல்மேடு. இந்த பகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நீர்மின் பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. மேலும் அடுக்கு மாடி குடியிருப்பு களும் உள்ளது.

    அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துறை சார்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதி சுகாதார மில்லாத வகையில் புதர் மண்டி கிடப்பதாக கூறப்படுகிறது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் காணப்படு கிறது. இதனால் சிலர் அந்த குடியிருப்பு பகுதியை காலி செய்து விட்டு வேறு பகுதிக்கு சென்று விட்டனர்.

    மேலும் குடியிருப்பு பகுதியில் புதர்மண்டி கிடப்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடிக்கடி வருவதாக மக்கள் கூறினர். இதுகுறித்து அங்கு குடியிருப்பவர்கள் அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

    மேலும் அப்பகுதி புதர் மண்டி இருப்பதால் சிலர் அந்த பகுதிக்கு வந்து மது அருந்துவது தொடர் கதையாகி வருகிறது.

    மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்த பகுதியில் உள்ள நீர்மின் பயிற்சி நிலையத்தில் பயிற்சி எடுப்பதற்காக மின்வாரிய அதிகாரிகள் வந்து செல்கிறார்கள். ஆனால் அதனை சுற்றி புதர் மண்டிக் கிடப்பதை பார்த்து முகம் சுளித்து கொண்டு செல்கின்றனர்.

    எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் ஆய்வு செய்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் பிளஸ்- 2 பொதுத்தேர்வை 10 ஆயிரத்து 754 மாணவர்களும், 11, 626 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 380 மாணவ மாணவிகள் எழுதினர்.
    • ஈரோடு மாவட்டத்தில் 93.85, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.45 என மொத்தம் 95.72 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ் -2 தேர்வுகள் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மே மாதம் கடைசி வாரத்தில் முடிவடைந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து மதிப்பெண்களை கணினியில் ஏற்றும் பணியும் முடிவடைந்தது.

    இதைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் காலை பிளஸ்- 2 தேர்வுகள் முடிவுகள் வெளியாகின. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் பிளஸ்- 2 பொதுத்தேர்வை 10 ஆயிரத்து 754 மாணவர்களும், 11, 626 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 380 மாணவ மாணவிகள் எழுதினர்.

    இதில் மாணவர்களில் 10 ஆயிரத்து 93 பேரும், மாணவிகளில் 11 ஆயிரத்து 329 பேரும் என மொத்தம் 21, 422 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 93.85, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.45 என மொத்தம் 95.72 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் 108 அரசு பள்ளிகளை சேர்ந்த 4696 மாணவர்களும், 5839 மாணவிகள் என மொத்தம் 10,535 பேர் பிளஸ்- 2 பொது தேர்வை எழுதினர். இதில் 4158 மாணவர்களும், 5,597 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.54, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 95.86, மொத்த தேர்ச்சி விகிதம் 92.60 சதவீதமாகும்.

    பிளஸ் 2 பொதுத் தேர்வை 36 மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் எழுதினர். இதில் 35 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகளை எளிதில் அறியும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சார்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    மாணவ மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் சென்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். மாணவர்களின் செல்போனுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருந்தது. 

    • தனக்கு சொத்தை பிரித்து தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
    • இந்த சம்பவம் குறித்து பொங்கியண்ணன் புஞ்சை புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் நம்பி யூர் அருகே உள்ள வெள்ளக் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொங்கி யண்ணன் (வயது 70). இவரது மகன் நாகராஜ் (42). விவசாயி. இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.

    நாகராஜ் தனது தந்தை யிடம் தனக்கு சொத்தை பிரித்து தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பொங்கி யண்ணன் புஞ்சை புளிய ம்பட்டி அடுத்த காரப்பாடி யில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று அவருடன் தங்கி இருந்தார்.

    ஆனாலும் நாகராஜ் அங்கு சென்று தொடர்ந்து தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நாகராஜ் மீண்டும் காரப்பாடிக்கு சென்று அவரது தந்தை பொங்கியண்ணனை தாக்கி சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்தார்.

    இது குறித்து பொங்கிய ண்ணன் புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர்கள் செந்தில்குமார், செல்வம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நாகராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • நீர்வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்துக்காக அதிக அளவில் பவானிசாகர் அணையின் நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
    • பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது .

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.

    எனினும் நீர்வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்துக்காக அதிக அளவில் பவானிசாகர் அணையின் நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.55 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 298 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது . 

    • சொத்துவரி உயர்வு வரும் ஜூலை 1-ந் தேதி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • புதிய வரி உயர்வுக்கான சாப்ட்வேர்கள் உருவாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    ஈரோடு:

    தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி பொது சீராய்வு செய்திட அரசாணை பிறப்பித்தது. இதன்பேரில் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு தொடர்பான கூட்டம் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இதில், ஈரோடு மாநகராட்சியில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி சொத்து வரி பொது சீராய்வு கூட்டமும் கடந்த மே மாதம் 24-ந் தேதி நடத்தப்பட்ட அவசர கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் சொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதை தொடா்ந்து ஈரோடு மாநகராட்சியில் அரசாணைப்படி கடந்த 1-4-2022-ம் தேதியில் இருந்து புதிய சொத்து வரி அமல்படுத்தப்பட்டு, இந்த வரி உயர்வினை வரும் ஜூலை 1ம் தேதி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி உதவி ஆணையர்(கணக்கு) குமரேசன் கூறியதாவது:-

    விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவை மற்றும் மாநகராட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரிப்பு செய்தல் போன்றவற்றிற்கு தேவைப்படும் கூடுதல் செலவினம், மாநகராட்சி செலுத்த வேண்டிய கடன் தொகை மற்றும் பிற துறைகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை ஆகியவற்றை கருத்தில் கொண்டும், பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை அளிக்க ஏதுவாகவும் அரசாணையில் அறிவுறுத்தியுள்ளவாறு, கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் 1981 அத்தியாயம் 5 பிரிவு, 118ல் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றியும் மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கூட்ட பொருட்களின் அடிப்படையில் ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி உயா்வு பொது சீராய்வு செய்யப்பட்டது.

    இதையடுத்து புதிய வரி உயர்வு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் 600 சதுர அடிக்கு குறைவான பரப்பளவில் இருந்தால் பழைய வரி தொகையில் கூடுதலாக 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

    601 சதுர அடி முதல் 1200 சதுர அடிக்குள் இருந்தால் 50 சதவீதமும், 1,201 சதுர அடி முதல் 2800 சதுர அடி வரை இருந்தால் 75 சதவீதமும், 2,800 சதுர அடிக்கு மேல் இருந்தால் 100 சதவீதம் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல், காலியிடங்களுக்கு ஏற்கனவே உள்ள வரியில் இருந்து 100 சதவீத உயர்வும், பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு 50 சதவீதம் உயர்வும், தொழிற்சாலைகளுக்கு 100 சதவீதமும், வணிக நிறுவனங்களுக்கு 150 சதவீதமும் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு அரசாணைப்படி கடந்த 1-4-2022ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.

    ஆனால், மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதன்பிறகு தான் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளதால், அது அரசு கெஜட்டில் பதிவு செய்வதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிய வரி உயர்வுக்கான சாப்ட்வேர்கள் உருவாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த வரி உயர்வு வரும் ஜூலை 1-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

    முதல் அரையாண்டிற்கான புதிய வரியை வரும் செப்டம்பர் 30-ந் தேதிக்குள்ளும், 2-ம் அரையாண்டிற்கான வரியை வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் ஆண்டு(2023) மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் செலுத்தலாம். புதிய வரி விதிப்புக்கு மக்கள், மாநகராட்சி அலுவலகத்தில் உரிய விண்ணப்பத்தை பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாங்கள் இதுவரை வட்டியாக ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து உள்ளோம்.
    • எங்களிடம் சமாதானம் பேசி ரூ.25 லட்சம் பணத்தை கொடுத்தால் நிலத்தை ஒப்படைப்பதாக கூறினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஒலகடம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். டெக்ஸ்டைல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜோதிமணி. இவர் இன்று காலை தனது தாய் மற்றும் சகோதரி மகளுடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    பின்னர் திடீரென அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மண்எண்ணை கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை ஓடிச்சென்று தடுத்து நிறுத்தினர். பின்னர் ஜோதிமணி ஒரு புகார் மனு கொடுத்தார்.

    எனக்கும் எனது மகன் சசிகுமாருக்கும் ஒலகடம் பகுதியில் 2.22 சென்ட் நிலம் உள்ளது. நாங்கள் அவசர தேவைக்காக ஜம்பை பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.25 லட்சம் கடன் பெற்றோம். இதற்காக 100 ரூபாய்க்கு மாதம் 2.50 வட்டியாக கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் தயார் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் அவரது பெயருக்கு பத்திரம் எழுதிக் கொடுத்தோம். இதன் மதிப்பு ரூ.2 கோடியே 50 லட்சம் ஆகும்.

    இந்நிலையில் நாங்கள் இதுவரை வட்டியாக ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து உள்ளோம். பின்னர் நாங்கள் முழுத்தொகையையும் கொடுத்து விடுகிறோம் என்று கூறினோம். ஆனால் அவர் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்தார். இது தொடர்பாக நாங்கள் பவானி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இதையடுத்து எங்களிடம் சமாதானம் பேசி ரூ.25 லட்சம் பணத்தை கொடுத்தால் நிலத்தை ஒப்படைப்பதாக கூறினார். அதன்படி நாங்கள் முதல் கட்டமாக ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தோம். மீதி தொகையான ரூ.15 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுக்க முயன்ற போது அவர் பணத்தை வாங்க மறுத்து விட்டார். மேலும் எங்களது நிலத்தை வேறு ஒருவருக்கு பத்திரம் செய்து கொடுத்து விட்டார்.

    இது குறித்து கேட்டால் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். மேலும் நிலத்தை வாங்கியவரும் நிலத்தை சுற்றி முள்வேலி போட்டு விட்டார். எனவே எங்கள் நிலத்தை மீட்டு ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • பயணிகளின் உடமைகளையும் பரிசோதனை செய்கின்றனர்.

    ஈரோடு:

    இந்திய முப்படைகளில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு ஆள் சேர்க்கும் புதிய திட்டமான அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வட மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களில் ரெயில் பெட்டிகள் எரிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் ரெயில் நிலையங்களும் சூறையாடப்பட்டு வருகிறது. மேலும் இளைஞர்கள் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இளைஞர்கள் கூட்டமாக சென்றால் அவர்களை தடுத்து நிறுத்தி எங்கு செல்கிறீர்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பயணிகளின் உடமைகளையும் பரிசோதனை செய்கின்றனர். இளைஞர்கள் போராட்டம் நடத்துவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதேப்போல் ரெயில் நிலையத்திற்குள்ளும் ஈரோடு ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு ரெயில்களையும் பெட்டி பெட்டியாக சென்று சோதனை செய்கின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று அக்னிபாத் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

    இதையடுத்து ஈரோடு மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவுப்படி ஈரோடு மாவட்டத்தில் முக்கியமான இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

    இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்திடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, காளைமாடு சிலை, ரெயில் நிலையம், ஜி.எச். ரவுண்டானா, பஸ் நிலையம், சுவஸ்தி கார்னர், பஸ் டிப்போ, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற நகரின் முக்கியமான பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி, கவுந்தபாடி, நம்பியூர் மற்றும் ஈரோடு மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • உணவு தேடி இடம் பெயர்தல் காரணமாக பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிகோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டம் தஞ்சமடைந்து அட்டகாசம் செய்து வருகிறது.
    • பகல் நேரத்தில் உணவு தேடி வீடுகள், கடைகளுக்கு உள்ளே குரங்குகள் செல்லுவதால் பொதுமக்கள் அச்சமடைத்துள்ளனர். மேலும் தெருக்களில் பெண்கள் நடமாட அச்சம் அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வனப்பகுதி மற்றும் சென்னிமலை முருகன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் அதிகளவில் வசித்து வருகிறது.

    இந்நிலையில் உணவு தேடி இடம் பெயர்தல் காரணமாக பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிகோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டம் தஞ்சமடைந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    பகல் நேரத்தில் உணவு தேடி வீடுகள், கடைகளுக்கு உள்ளே குரங்குகள் செல்லுவதால் பொதுமக்கள் அச்சமடைத்துள்ளனர். மேலும் தெருக்களில் பெண்கள் நடமாட அச்சம் அடைந்து வருகின்றனர். குழந்தைகளை சிலநேரம் குரங்குகள் துரத்துகின்றன.

    இதன் காரணமாக அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று வனத்துறை அலுவலர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர் குரங்குகளை பிடிக்க காஞ்சிகோவில் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குரங்குகளுக்கு பிடித்த உணவுடன் கூடிய இரும்பு கூண்டுகளை வைத்துள்ளனர்.

    இதனையடுத்து பிடிபடும் குரங்குளை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    • இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இதையடுத்து ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் புதிய திட்டமான அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வட மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களில் ரெயில் பெட்டிகள் எரிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இளைஞர்கள் கூட்டமாக சென்றால் அவர்களை தடுத்து நிறுத்தி எங்கு செல்கிறீர்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் உடமைகளையும் பரிசோதனை செய்கின்றனர். இளைஞர்கள் போராட்டம் நடத்துவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதேப்போல் ரெயில் நிலையத்திற்குள்ளும் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு ரெயில்களையும் பெட்டி பெட்டியாக சென்று சோதனை செய்கின்றனர்.

    • கீழ்பவானி அணை நீர்ப்பாசன சபையின் கூட்டம் ரங்கம்பாளைத்தில் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.

    ஈரோடு:

    கீழ்பவானி அணை நீர்ப்பாசன சபையின் கூட்டம் ரங்கம்பாளைத்தில் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் சபையின் 2021 -2022-ம் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவுகள் நிதிஅறிக்கை ஏற்றுக்கொள்ள பட்டுள்ளது.

    கீழ்பவானி சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது ஆனால் தொடர்ந்து நடைபெற வில்லை. இதனால் கீழ்பவானி ஊஞ்சலூர் பகிர்மான கால்வாயில் பாசனம் பெறும் எம் 8 ஏ பாசன சபையிலுள்ள ஆயக்கட்டு நிலங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.

    எனவே சீரமைப்பு வேலைகளை தொடர்ந்து செய்ய வேண்டும். கீழ்பவானி ஆயக்கட்டு விவசாயிகளின் பாசன உரிமையையே பாதுகாக்கும் வகையில் வருகிற ஜூலை மாதம் 10-ந் தேதி சிவகிரியில் கீழ்பவானி ஆயக்கட்டு உரிமை பாதுகாப்பு நடைபெறும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 13 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
    • தற்போது தொற்று அதிகரித்து வருவதால் பரிசோதனையை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதேப்போல் கொரோனா தடுப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 13 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒரே நாளில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 712 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 955 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 13 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தினமும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருவதால் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ளனர்.

    அதேபோல் தற்போது ஆஸ்பத்திரிகளில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் நிறைய பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    மேலும் தற்போது தொற்று அதிகரித்து வருவதால் பரிசோதனையை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதேப்போல் கொரோனா தடுப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • சட்டவிரோதமாக கரு முட்டை விற்பனை செய்தவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

    கருமுட்டை விற்பனை விவகாரத்தில் போலியான ஆவணங்களை தயார் செய்த கும்பல் மீதும், சட்டவிரோதமாக கரு முட்டை விற்பனை செய்தவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் மாவட்ட பொது செயலாளர்கள் எஸ்.எம். செந்தில், வேதானந்தம், ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட துணை தலைவர்கள் சின்னதுரை, குணசேகரன், அய்யாசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்குமார்,

    வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ஈஸ்வர மூர்த்தி, தொழில் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் பாலமுரளி, சக்திசுப்பிரமணி, பி.எஸ்.செல்வமணி, இந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×