search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "one"

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு வாகனங்கள் அடுத்தடுத்து மோதியாதல் ஒருவர் பலியானார்.
    • அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் உருக்குலைந்த ஆண் சடலம் கிடந்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு வாகனங்கள் மோதியதில், உடல் உருக்குலைந்து அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் கிடந்தது.

    இதுகுறித்து ச.வாழப்பாடி வி.ஏ.ஓ. பெரியசாமி, வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சாலையில் உருக்குலைந்து கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    விபத்தில் சிக்கி இறந்தவர் யார்? விபத்திற்கு காரணமான வாகனம் எது? என்பது குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோட்டில் ஒரே நாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.
    • இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 15 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒரே நாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 961 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 16 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 13 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
    • தற்போது தொற்று அதிகரித்து வருவதால் பரிசோதனையை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதேப்போல் கொரோனா தடுப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 13 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒரே நாளில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 712 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 955 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 13 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தினமும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருவதால் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ளனர்.

    அதேபோல் தற்போது ஆஸ்பத்திரிகளில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் நிறைய பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    மேலும் தற்போது தொற்று அதிகரித்து வருவதால் பரிசோதனையை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதேப்போல் கொரோனா தடுப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 11 நாட்களுக்கு மேலாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 11 நாட்களுக்கு மேலாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒரே நாளில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 699 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 952 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 11 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×