என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு அடுத்த நசியனூர் புதுப்பாளையம் பகுதியில் அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளுக்காக குழாய்கள் பொருத்தும் பணியை அமைச்சர் முத்துசாமி இன்று பார்வையிட்டார்.
    • இதனை முதல்-அமைச்சர் வந்து திட்டத்தை தொடங்கி வைப்பார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த நசியனூர் புதுப்பாளையம் பகுதியில் அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளுக்காக குழாய்கள் பொருத்தும் பணியை அமைச்சர் முத்துசாமி இன்று பார்வையிட்டார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    இப்பகுதியில் திட்ட பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இது சம்பந்தமாக விவசாயிகள், பொதுப்பணித்துறை மற்றும் பணியை செய்து வரும் நிறுவனத்துடன் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் தொடக்கப்பட்டுள்ளன .

    இதேபோன்று காலிங்கராயன் பாளையம், நசியனூர் போன்ற பகுதிகளிலும் 2 இடங்களில் சிறு சுணக்கம் பணிகளில் ஏற்பட்டது. அதுவும் தீர்க்கப்பட்டு விடும்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருந்துறை பகுதியில் கடந்த மாதம் அரசு நிகழ்ச்சிக்கு வந்த பொழுது அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகள் 2 மாதத்திற்குள் முடிவ டையும். நானே வந்து திட்ட த்தை தொடங்கி வைப்பேன் என்று அறிவித்தார்.

    அதன்படி அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகள் அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும். அதற்காக பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இதனை முதல்-அமைச்சர் வந்து திட்டத்தை தொடங்கி வைப்பார். திட்டத்தின் கீழ் விடுபட்ட குளம், குட்டைகளை சேர்ப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    கீழ்பவானி பாசன திட்டத்தில் முறை வைத்து நீர் தற்போது விநியோகி க்கப்படுவது சம்பந்தமாக விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்துள்ளனர். இது சம்பந்தமாக பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேசி உரிய தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வாய்க்காலை நவீனப்படு த்துவது குறித்து விவசா யிகளிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்படும். இது சம்பந்தமாக ஏற்கனவே ஒரு தீர்ப்பு வந்த போதும் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்று இருந்த போதிலும், விவசாயிகளிடம் பேசி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்வோம்.

    பவானி நகருக்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது போன்று கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் அமைக்க மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதுவும் அரசின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து தூய்மை பணியாள ர்களுக்கும் மாதத்தின் முதல் தேதி அன்று ஊதியம் வழங்க வேண்டும். மலேரியா, டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தின ஊதியம் ரூ.707 ஆக வழங்க வேண்டும்.

    480 நாட்கள் பணி முடித்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மை பணி, குடிநீர் வழங்கல், தெருவி ளக்கு பராமரிப்பு ஆகிய வற்றை ஒப்பந்த முறையில் தனியார் இடம் கொடுக்க வகை செய்யும் அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியு றுத்தி கண்டன ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    • சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கி ணைந்த குழந்தைவளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 62 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழாவினை தொடங்கி வைத்து சீர்வரிசை பொருட்கள் மற்றும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.1,000 ரொக்கம் மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினார்.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன், காமராஜர் நகரில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கி ணைந்த குழந்தைவளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 62 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி. முன்னிலையில் வகித்தார். அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழாவினை தொடங்கி வைத்து சீர்வரிசை பொருட்கள் மற்றும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.1,000 ரொக்கம் மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினார்.

    மேலும் 62 கர்ப்பிணிகளுக்கு 5 வகை உணவுகளும், சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டது. தொடர்ந்து சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில், சென்னிமலை பேரூராட்சி மற்றும் அரசு மருத்து மனைக்கு இடம் வழங்கிய முத்துசாமி முதலியார் உருவப்படத்தினை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும் அவர்களின் வாரிசு தாரர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும் முதல்- அமைச்சர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ந்தேதி பெருந்துறையில் நடந்த அரசு விழாவில் ரூ.46.66 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சென்னிமலை சென்குமார் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் கட்டிடத்தில் கட்டப்பட்ட காட்சி அறையுடன் கூடிய சில்லறை விற்பனை நிலையம் மற்றும் சரக்கு இருப்பு கிடங்கினை திறந்து வைத்ததை தொடர்ந்து, அமைச்சர் சாமிநாதன் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சி. பிரபு, நகர செயலாளர் ராமசாமி, பொதுகுழு உறுப்பினர் சா. மெய்யப்பன், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, சென்னிமலை யூனியன் தலைவர் காயத்திரி, துணை தலைவர் பன்னீர் செல்வம், இளைஞர் அணி சதீஷ் என்கிற சுப்பிர–மணியம், அசோக், கைத்தறி துறை உதவி இயக்கு–நர் சரவணன், மேலாண்மை இயக்குநர் தமிழ்செல்வன், சென்னிமலை பேரூராட்சி செயல் அலு–வலர் ஆயிஷா உள்பட பலர் பங்கேற்றனர். 

    • கடைக்கு சென்ற ராஜ் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை கடக்க முயன்றபோது கால் தவறி சாக்கடைக்குள் விழுந்து விட்டார்.
    • உடனடியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கோட்டுவீராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் (50). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தாயுடன் வசித்து வந்தார்.

    உடல் நலம் பாதித்ததால் ராஜ் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று கடைக்கு சென்றவர் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை கடக்க முயன்றபோது கால் தவறி சாக்கடைக்குள் விழுந்து விட்டார். அப்போது காயம் எதுவும் இல்லாததால் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி மாலை அவருக்கு வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜ் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பவானியில் மாலை ஒரு மணி நேரம் இடிடன் கூடிய கனமழை பெய்தது.
    • ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பவானி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக ரித்து வந்தது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்நிலையில் மாலை லேசான மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் மின்னலுடன் சாரல் மழை பெய்தது. இந்த திடீர் மாலையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    பவானியில் மாலை ஒரு மணி நேரம் இடிடன் கூடிய கனமழை பெய்தது. பவானி-மேட்டூர் மெயின் ரோட்டில் நகராட்சி அலுவலகம் செல்லும் எதிரே உள்ள மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் பவானி நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் மோகன் ராஜ், விஜய் ஆனந்த் மற்றும் பணியாளர்கள் உடனே சம்பவத்திற்கு வந்து மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    இதன் பிறகு போக்குவரத்து சீரானது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக இங்கு 67 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

    இதைபோல் கவுந்தப்பாடி, அம்மா பேட்டை, வரட்டுப்பள்ளம், சென்னிமலை பகுதியில் சாரல் மழை பெய்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    பவானி-67, கவுந்த–ப்பாடி-18.40, அம்மா–பேட்டை-11.60, வரட்டு–பள்ளம்-7, குண்டேரி–பள்ளம்-6.20, சென்னி–மலை-3.

    • தி.மு.க. வின் 15-வது உட்கட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அதிகார பூர்வமாக தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
    • திருப்பூர் தெற்கு மாவட்டம், காங்கேயம் தொகுதியில் இருந்து மீண்டும் 2-வது முறையாக சென்னிமலை டவுன் காட்டூர் ரோட்டை சேர்ந்த சா. மெய்யப்பன் தலைமை பொதுகுழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சென்னிமலை:

    தி.மு.க. வின் 15-வது உட்கட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அதிகார பூர்வமாக தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

    இதில் திருப்பூர் தெற்கு மாவட்டம், காங்கேயம் தொகுதியில் இருந்து மீண்டும் 2-வது முறையாக சென்னிமலை டவுன் காட்டூர் ரோட்டை சேர்ந்த சா. மெய்யப்பன் தலைமை பொதுகுழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இவர் பள்ளிகளில் படிக்கும் காலத்தில் இருந்தே மாணவர் தி.மு.க.வில் பணியாற்றி அதன் பின்பு தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் என படிப்படியாக கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். சா.மெய்யப்பன் மீண்டும் 2-வது முறையாக தலைமை பொதுக்குழு உறுப்பினராக தேர்வு பெற்றுள்ளார்.

    இவர் தமிழக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றி வர். மேலும் சென்னிமலை, அம்மா டெக்ஸ் கைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் சங்கத்திலும் தலைவராக தி.மு.க. ஆட்சியில் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

    மீண்டும் தலைமை பொதுகுழு உறுப்பினராக தேர்வு பெற்றுள்ள சா. மெய்யப்பனுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், சென்னிமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.எஸ். செல்வம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.பிரபு உள்பட கட்சி நிர்வாகிகள், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • தி.மு.க. 15-வது உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், மாநகர, மாவட்டங்களில் தேர்ந்து எடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர கழக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    • ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளராக நல்லசிவம், ஈரோடு மாநகர செயலாளராக சுப்பிரமணியம் ஆகியோர் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    தி.மு.க. 15-வது உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், மாநகர, மாவட்டங்களில் தேர்ந்து எடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர கழக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளராக நல்லசிவம், ஈரோடு மாநகர செயலாளராக சுப்பிரமணியம் ஆகியோர் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகிகள் விவரம் வருமாறு:

    அவை த் தலைவர் - கே.குமார்முருகேஸ், செயலாளர் - சு. முத்துசாமி, துணைச் செயலாளர் (பொது) -ஆ.செந்தில் குமார், துணைச் செயலாளர் (ஆதிதிராவிடர்) - க. சின்னையன், துணை ச் செயலாளர் (மகளிர்) -அ. செல்லப்பொன்னி, பொருளாளர் - ப.க. பழனிச்சாமி.

    1. டி.எஸ்.குமாரசாமி, 2. ப.மணிராசு, 3.ராஜ் (எ) முருகேசன், 4.என். கொண்டசாமி,

    1.சி.கேசவன், 2.என்.டி. பத்மநாபன், 3.பி. கதிர்வேல் , 4.எம்.கோபால், 5.தா.மகாலிங்கம், 6.டி.ஜி.கே .பூபதி, 7.ஆர்.பொன்னுசாமி, 8. மு.பல்கீஸ்.

    மொடக்குறிச்சி கிழக் கு -வா.கதிர்வேல், மொடக்குறிச்சி மேற்கு - சு. குணசேகரன், மொடக்குறிச்சி தெற்கு - ஆர்.விஜயகுமார், கொடுமுடி வடக்கு - மு. சின்னசாமி, கொடுமுடி மே ற்கு - ப ா.நடராசன், பெருந்துறை வடக்கு - ப .சின்னசாமி, பெருந்துறை தெற்கு - கே.பி.சாமி, பெருந்துறை கிழக்கு - சி.பெரியசாமி, சென்னிமலை வடக்கு - பி.செங்கோட்டையன், ஈரோடு - டி.சதாசிவம்,

    ஊத்துக்குளி வடக்கு - செ.சுப்பிரமணியம், ஊத்துக்குளி தெற்கு - பி.பி.ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி மத்திய - வி.ராஜா.

    பள்ளபாளையம் - சு.தங்கமுத்து, வெ ள்ளோட்டம்பரப் பு - ப .சண்முகம், மொடக்குறிச்சி - பி.வி.சரவணன், அவல் பூந்துறை - அ.சண்முகசுந்த ரம், அரச்சலூர் - பி.கோவிந்தசாமி, வடுகபட்டி - த.விஸ்வநாதன், கொடுமுடி- எம்.ராஜாகமால்ஹசன், சென்னசமுத்திரம் - ப .உலகநாதன், வெங்கம்பூர் - என்.செந்தில்குமார், ஊஞ்சலூர் - ஊ.கோ.சுப் புரத்தினம், பாசூர் - எஸ்.ராமமூர்த்தி, கிளாம்பாடி - பி.விஸ்வநாதன், சிவகிரி - அ.கோபால், கொல்லன் கோவில் - பி.சந்திரசேகர், பெருந்துறை - ஒ.சி.வி.இராஜேந்திரன், கருமாண் டிசெல்லிபாளையம் - பி.எஸ்.திருமூர்த்தி,

    காஞ்சிக்கோவில் - கே கே.வி.பி.செந்தில் முருகன், பெத்தாம்பாளையம் - கே கே.பி.தங்கமுத்து, நல்லா ம்பட்டி - எம்.குருசாமி, சித்தோடு - சி.முத்துகிருஷ்ணன், நசியனூர் - கே.மோகனசுந்தரி, குன்ன த்தூர் - சி.சென்னியப்பன், ஊத்துக்குளி - கே.கே.இராசுக்குட்டி.

    அவைத் தலைவர் - இரா. சேகரன், செயலாளர் - மு. சுப்பிரமணியம், துணைச் செயலாளர் (பொது) - கு.நந்தகுமார், துணை செயலாளர் (ஆதிதிராவிடர்) கே . சந்திரசேகர், துணை செயலாளர் (மகளிர்) இ. பாத்திமா, பொருளாளர் - ஜி. சண்முகம்

    சூரியம்பாளையம் - எஸ்.குமாரவடிவேலு, வீரப்பன்சத்திரம் - வி.சி. நடராஜன், பெரியசேமூர் - வி. செல்வராஜ், கோட்டை - இராமு (எ) பொ.ராமச்சந்திரன், சூரம்பட் டி - ஆ. முருகேச ன், பெரியார் நகர் -அக் னி சந்துரு (எ) ர.சந்திரசே கர், கொல்லம்பாளையம் - கா. லட்சுமணகுமார், கருங்கல்பாளையம் - குறிஞ்சி என். தண்டபாணி.

    அவைத் தலைவ ர் - ஏ. பெருமாள்சாமி, செயலாளர் - என்.நல்ல சிவம், துணை ச் செயலாளர் (பொது) -எம்.பி. அறிவானந்தம், துணை செயலாளர் (ஆதிதிராவிடர்) - எஸ்.எஸ்.குருசாமி, துணை செயலாளர் (மகளிர்) - கீதா நடராஜன், பொருளாளர் - கே .கே . சண்முகம்,

    1.ஓ. சுப்பிரமணியம், 2.எஸ்.பி. புகழேந்தி, 3.வி.பி. சண்முகசுந்தரம், 4.எம்.எஸ். சென்னிமலை

    1.மு.சம்பத்குமார், 2.கா.கி.ராசேந்திரன், 3.ஆர்.மாதேஸ்வரன், 4.ஜெ யராஜ், 5.என். கிருஷ்ணமூர்த்தி, 6.எஸ்.எஸ்.வெள்ளியங்கிரி, 7.பி. சரஸ்வதி, 8.எஸ். கீதா

    பவானி வடக்கு - கே கே.எ.சந்திரசேகர் (எ) பவானி கே.ஏ.சேகர், பவானி தெற்கு - கே.பி.துரைராஜ், அம்மாபே ட்டை வடக்கு - கே.எஸ்.சரவணன், அம்மாபே ட்டை தெற்கு - எம்.ஈஸ்வரன், அந்தியூர் - ஏ.ஜி.வெங்கடாசலம், கோபிசெட்டிபாளையம் வடக்கு - கே .ரவீந்திரன், கோபிசெட்டிபாளையம் தெற்கு - எஸ்.ஏ.முருகன், தூக்கநாயக்கன்பாளை யம் - எம்.சிவபாலன், நம்பியூர் - பி.செந்தில்குமார், பவானிசாகர் வடக்கு - கே.எஸ்.மகேந்திரன், பவானிசாகர் தெற்கு - ந .காளியப்பன், சத்தியமங்கல ம் வடக் கு - ஐ.ஏ.தேவ ராஜ், சத்தியமங்கலம் தெ ற்கு - கே.சி.பி.இளங்கோ, தாளவாடி மேற்கு - டி.சிவண்ணா, தாளவாடி கிழக்கு - மா.நாகராஜ்

    பவானி - ப.சீ.நாகராசன், கோபிசெட்டிபாளையம் - என்.ஆர்.நாகராஜ், சத்தியமங்கலம் - ஆர்.ஜானகி, புன்செய்புளியம்பட் டி - பி.ஏ.சிதம்பரம்,

    ஜம்பை - ந.ஆனந்த குமார், ஆப்பக்கூடல் - கே .கோபாலகிருஷ்ணன், சலங்கபாளையம் - எஸ்.பழனிச்சாமி, அம்மாபே ட்டை - எஸ்.பெரியநாயகம், நெரிஞ்சிப்பேட்டை - என்.பி.கண்ணன், ஒலகடம் - ஒ.ஆர்.மகேந்திரகுமார், அந்தியூர் - எஸ்.காளிமுத்து

    அத்தாணி - ஏ.ஜி.எஸ்.செந்தில்கணேஷ், கூகலூர் - எஸ்.பி.ராஜாராம், பி.மேட்டுப்பாளையம் - எம்.எம்.குமாரசாமி, லக்கம்பட் டி- க.வே.சு.வேலவன், கொளப்பலூர் - ஆ.அன்ப ரசு, வாணிபுத்தூர் - கே .எஸ்.பழனிச்சாமி, பெரியகொடிவேரி - ஏ.ஆறுமுகம், காசிபாளை யம் - எம்.எம்.பழனிச்சாமி, நம்பியூர் - எஸ்.பி.ஆனந்த குமார், எலத்தூர் - சு.சண் முகம், பவானிசாகர் - டி.ஏ.மோகன், கெம்மநாயக்கன்பாளை யம் - கே.ரவிச்சந்திரன், அரியப்பம்பாளையம் - ஏ.எஸ்.செந்தில்நாதன்.

    திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சென்னிமலை கிழக்கு ஒன்றிய செயலாளராக சி.பிரபு, மேற்கு ஒன்றிய செயலாளராக எஸ்.ஆர்.எஸ். செல்வம் (எ) தமிழ்செல்வம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    • மின் விசிறி மாட்டும் கொக்கியில், துப்பட்டாவால் தூக்கு மாட்டிய நிலையில் ரூபினா கதுன் தொங்கியவாறு இருந்துள்ளார்.
    • இது குறித்து தந்தை ருலமின் காஸி அளித்த புகாரின்பேரில் திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் ருலமின் காஸி (40).

    இவர் தனது மனைவி ரூப்சனா, மூத்த மகள் ரூபினா கதுன் (16), இளைய மகள் ரீனா கதுன் ஆகியோ ருடன் ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே உள்ள சின்ன வீரசங்கிலி பகுதியில் வசித்து அங்குள்ள கோழிப் பண்ணை ஒன்றில் கணவன், மனைவி இருவரும் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை ருலமின் காஸி அவரது மனைவி மற்றும் 2-வது மகள் ஆகியோருடன் விஜயமங்கலம் சந்தைக்கு பொருள்கள் வாங்க சென்று விட்டார். மூத்த மகள் ரூபினா கதுன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

    சந்தைக்கு சென்றவர்கள் இரவு சுமார் 8 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளனர். மூடப்பட்டிருந்த கதவை திறந்து பார்த்தபோது, மின் விசிறி மாட்டும் கொக்கியில், துப்பட்டாவால் தூக்கு மாட்டிய நிலையில் ரூபினா கதுன் தொங்கியவாறு இருந்துள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரூபினா கதுனை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து தந்தை ருலமின் காஸி அளித்த புகாரின்பேரில் திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது.
    • இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது.

    ஈரோடு:

    நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

    இதில் தமிழகத்தில் மட்டும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கைதை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடை பெற்றன.

    இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது. உடனடியாக இந்த தடை அமலுக்கு வருவதாகவும் அறிவித்தது.

    இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது.

    ஈரோடு காவிரிரோடு, ஜின்னா வீதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் பச்சபாளியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கும், இந்து முன்னணி கட்சி அலுவல கத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு காளை மாட்டு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, பஸ் நிலையம், ஜி.எச். ரவுண்டானா, மேட்டூர் ரோடு, ஸ்வஸ்திக் கார்னர், வீரப்பன்சத்திரம் கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் வழிபாட்டுத் தலங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சத்தியமங்கலம் கோபி, பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு வாகனங்களை தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து அதன் பிறகு உள்ளே அனுமதிக்கின்றனர்.

    • அந்தியூர் செல்லீஸ்வரர் வகையறா திருக்கோவிலில் பத்ரகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது.
    • பக்தர்கள் உண்டியலில் ரூ.16 லட்சத்து 19 ஆயிரத்து 714 தொகையாகவும், 380 கிராம் தங்கமும், 414 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்திருந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் செல்லீஸ்வரர் வகையறா திருக்கோவிலில் பத்ரகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது.

    பக்தர்கள் உண்டியலில் ரூ.16 லட்சத்து 19 ஆயிரத்து 714 தொகையாகவும், 380 கிராம் தங்கமும், 414 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்திருந்தனர்.

    இதில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன், ஆய்வாளர் ஸ்ரீ மாணிக்கம் மற்றும் கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், பணியாளர்கள், தனியார் கல்லூரி மாணவிகள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.

    • ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்து ஈரோடு மாவட்ட போலீசார் தடை விதித்து உள்ளனர்.
    • ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி வருகிற 2-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்து ஈரோடு மாவட்ட போலீசார் தடை விதித்து உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் சோதனை சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • சரவணனை திருமணம் செய்து வைத்த வகையில் சரிதாவுக்கு ரூ.20 ஆயிரம் கிடைத்ததும் மற்ற 8 புரோக்கர்களும் 1 லட்சம் ரூபாயை பங்கு போட்டுக் கொண்டதும் தெரிய வந்தது.
    • மோசடி கும்பல் குறித்து சரவணன் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது தாசப்பகவுண்டர் புதூர்.

    இந்த பகுதியை சேர்ந்த செல்வராஜ், கண்ணம்மாள் தம்பதி மகன் சரவணன் (35). கைத்தறி நெசவு தொழில் செய்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி பெற்றோர் பெண் பார்க்க தொடங்கினர்.

    இதற்காக புளியம்பட்டி பரிசாபாளையத்தை சேர்ந்த மலர், அந்தியூரை சேர்ந்த மற்றொரு பெண், கோபியை சேர்ந்த தங்கமணி, திண்டுக்கல்லை சேர்ந்த முத்துக்காளை, சாத்தூரை சேர்ந்த முத்து, விருதுநகர் மாவட்டம் சூளைக்கரையை சேர்ந்த விஜயலட்சுமி, கவுந்தப்பாடியை சேர்ந்த பாப்பாள், ஈரோட்டை சேர்ந்த சரவணன் ஆகிய 8 புரோக்கர்கள் சரவணனுக்கு பெண் பார்க்க தொடங்கினர்.

    இறுதியில் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரது மகள் சரிதா (27) என்பவரை சரவணனுக்கு பெண் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. பெண் பார்க்கும் போது சரவணனுக்கு சரிதாவை பிடித்து போனது.

    அவரது குடும்பப் பின்னணி குறித்து கேட்டபோது தாய், தந்தை விபத்தில் இறந்து விட்டதாகவும், அண்ணன் ஒருவர் திருமணமாகி கேரளாவில் வசிப்பதாகவும் கூறினர்.

    மேலும் சரிதா ஈரோட்டில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கி பேப்பர் கோன் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்வதாகவும், அவருக்கு அவரது பெரியம்மாள் விஜயலட்சுமி (60) என்பவர் ஆதரவாக உள்ளார் என்றும் கூறப்பட்டது.

    இதனால் மனம் இறங்கிய சரவணன் ஆதரவற்ற ஏழை பெண்ணை திருமணம் செய்தால் குடும்பம் நன்றாக இருக்கும் என்று நினைத்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். அதன்படி கடந்த 20.8.2022 அன்று சரவணன் தனது சொந்த ஊரில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் சரிதாவை திருமணம் செய்து கொண்டார்.

    திருமணம் முடிந்ததும் புரோக்கர்கள் 8 பேருக்கும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை கமிஷனாக சரவணன் கொடுத்தார். மன வாழ்க்கையை தொடங்கிய சரவணன் மனைவி சரிதா மீது அளவு கடந்த பாசம் வைத்தார். தாய் தந்தையை இழந்த பெண் என்பதால் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தார். இப்படியாக சில வாரங்கள் இவர்களது திருமண வாழ்க்கை நல்லபடியாக ஓடியது.

    இப்படி நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை செல்போன் வடிவில் சரவணனுக்கு பேரடியாக வந்து விழுந்தது. ஒரு நாள் மனைவியின் செல்போனை ஏதேச்சையாக சரவணன் பார்த்தார்.

    அப்போது வாட்ஸ்அப்பில் சரிதா அவரது பெரியம்மாள் விஜயலட்சுமிக்கு 2 வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தார். இதைப்பார்த்த சரவணன் போனில் பேசியிருக்கலாமே ஏன் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்கிறார் என்று சந்தேகம் அடைந்து அந்த வாய்ஸ் மெசேஜை கேட்டார்.

    அதில் இங்கு எல்லோரும் இருப்பதால் பிரியாக பேச முடியாது. நான் இந்த வாரம் ஊருக்கு போக வேண்டும். ஆஸ்பத்திரிக்கு போகனும். பார்க்க ஆள் இல்லை. ஏதாவது பொய் சொல்லு. குத்து மதிப்பாக ஏதாவது பொய் சொல்லு. பெரியப்பா பாப்பாவை காலேஜில் சேர்க்க போயிட்டார். நான் தனியாக இருக்கேன். இந்த வாரம் பெட்ல சேர சொல்லி இருக்காங்கனு சொல்லு.

    இங்க இருந்துட்டு 10 பைசா என்னால மிச்சம் பண்ண முடியாது. இங்கே ஒரு குறையும் இல்லை என்று பேசி உள்ளார்.

    அடுத்த ஆடியோவில், இந்த வாரம் நீயா வந்து அழைச்சுட்டு போகிற மாதிரி நீயா வா. ஊருக்கு போயிட்டு, குழந்தைகளை பார்த்துட்டு வந்துடறேன். வேறு ஏதாவது கனெக்சன் இருக்கானு பாரு. அவன் கிறுக்கனா இருக்கனும். ஒரு வாரத்துல போயிட்டு ரிட்டர்ன் இங்க வரனும். வேறு ஏதாவது ஆள் இருந்தா பாரு. வயசான ஆளா பாரு. இந்த மாதிரி விவரமான ஆளு வேண்டாம்.

    வயசு அதிகமாக இருக்கிற மாதிரி, போனால் இரண்டு நாளில் எஸ்கேப் ஆகிற மாதிரி ஆளா பாரு. எனக்கு காசு தேவை இருக்கு. நான் ஈரோடு போயி வீட்டை காலி செய்ய வேண்டிய நிலை இருக்கு. ஏகப்பட்ட சிக்கலில் பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு. எல்லோரும் வீட்டில் இருப்பதால் பிரியா பேச முடியலை. அவர்கிட்ட இந்த வாரம் ஊருக்கு போகனும் என்று சொல்லி இருக்கேன். நீ வந்து அழைச்சுட்டு போக வந்தா விட்டுடுவாங்க. வந்து அழைச்சுட்டு போ, ஓடி போயிட மாட்டேன். நான் ஓடி போனா இந்த பையன் ஏதாவது பண்ணினாலும் பண்ணிக்கும். அதுவும் ஒரு பயமா இருக்கு. ரொம்ப பாசமாக இருக்காங்க. அதனால் விட்டுட்டு போகவும் மனசு இல்லை. இப்போதைக்கு கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் சொல்லிக்கலாம் என்ற முடிவில் இருக்கேன். இங்க இருந்து காசு, பணம் சம்பாதிக்க முடியாது. நல்லா யோசனை பண்ணி வேற யாராவது இருந்தால் சொல்லு. நீ வந்தால் போதும் என்று பேசி இருந்தார்.

    இதைக்கேட்ட சரவணன் அதிர்ச்சியில் உறைந்து போனார். பாசம் வைத்த மனைவி மோசடி கும்பலை சேர்ந்தவர் என்பதை அறிந்தவர் ஒரு வாரமாக விரக்தியில் இருந்தார். இதை பார்த்த அவரது நண்பர்கள் அவரிடம் கேட்டபோது நடந்தவற்றை கூறினார்.

    அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் சரவணனுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் மோசடி கும்பலை கூண்டோடு பிடிக்க திட்டமிட்டனர்.

    அதன்படி வாய்ஸ் மெசேஜ் குறித்து சரவணன் எதுவும் காட்டி கொள்ளாமல் சரிதாவிடம் தனது நண்பருக்கு பெண் பார்க்க வேண்டும் உனது பெரியம்மாளை பார்க்க சொல் என்று கூறினார்.

    அதன்படி சரிதா தனது பெரியம்மாளிடம் இது குறித்து தெரிவித்தார். அவர் கணவரை பிரிந்ததாக ஒரு பெண்ணின் போட்டோவை அனுப்பி வைத்தார். நண்பருக்கு பெண் பிடித்து விட்டது. மணப்பெண்ணை அழைத்து வந்தால் எளிமையாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று சரவணன் கூறினார். அதன்படி ரூ.80 ஆயிரம் கமிஷன் பேசப்பட்டது.

    இதனை அடுத்து சரிதாவின் பெரியம்மாள் ஒரு காரில் ஒரு பெண்ணை தாசப்பன்கவுண்டன் புதூருக்கு அழைத்து வந்தார். அவர்களை நண்பர்களுடன் சேர்ந்து சரவணன் மடக்கி பிடித்தார். இதனால் விஜயலட்சுமி, சரிதா மற்றும் விஜயலட்சுமியுடன் வந்த பெண் ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    திருமணம் செய்ய வந்த பெண்ணை விசாரித்த போது அவர் கரூர் மாவட்டம் திருமாநல்லூரை சேர்ந்த அர்சுணன் என்பவரது மனைவி விஜயா (36) என்பது தெரிய வந்தது. சரிதா உள்பட 3 பேரிடம் இருந்த செல்போனை வாங்கி விசாரித்த போது இவர்கள் திருமணம் ஆகாத வயதான வாலிபர்களையும், மனைவியை இழந்த வயதானவர்களையும் குறி வைத்து திருமண கமிஷனுக்காக இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    மேலும் சரவணனை திருமணம் செய்து வைத்த வகையில் சரிதாவுக்கு ரூ.20 ஆயிரம் கிடைத்ததும் மற்ற 8 புரோக்கர்களும் 1 லட்சம் ரூபாயை பங்கு போட்டுக் கொண்டதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து மோசடி கும்பல் குறித்து சரவணன் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது சரிதா ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவரை இதேபோன்று மோசடியாக ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு அவரிடம் 2½ லட்சம் ரூபாய் பறித்து கொண்டு தப்பியதும் அந்த டிரைவர் சரிதாவை தேடி கண்டுபிடித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டு வெளியே தெரிந்தால் அவமானம் என்று விரட்டி விட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

    சரிதாவின் பெரியம்மாளாக நடித்த விஜயலட்சுமியின் கணவர் ராமேஸ்வரம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்து ஓய்வுபெற்றவர். சரவணனின் நண்பருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அழைத்து வந்த கரூர் மாவட்டம் திருமாநல்லூரை சேர்ந்த அர்சுணன் மனைவி விஜயாவிற்கு 21 வயதில் ஒரு மகளும் 19 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    சரிதா மேலும் இதே போன்று 4 பேரை திருமணம் செய்து ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுபோக இந்த மோசடி கும்பல் இன்னும் நிறைய பேரை ஏமாற்றி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

    இது குறித்து சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சம்பவம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×