search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து தூய்மை பணியாள ர்களுக்கும் மாதத்தின் முதல் தேதி அன்று ஊதியம் வழங்க வேண்டும். மலேரியா, டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தின ஊதியம் ரூ.707 ஆக வழங்க வேண்டும்.

    480 நாட்கள் பணி முடித்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மை பணி, குடிநீர் வழங்கல், தெருவி ளக்கு பராமரிப்பு ஆகிய வற்றை ஒப்பந்த முறையில் தனியார் இடம் கொடுக்க வகை செய்யும் அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியு றுத்தி கண்டன ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    Next Story
    ×