search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WITHOUT TREATMENT"

    • முருகன் சமையல் எண்ணையை தனது உடலில் ஊற்றி தீப்பற்றி வைத்துக்கொ ண்டார்.
    • பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த நடராஜபுரம் என்.ஜி.ஜி.ஓ. காலனி யை சேர்ந்தவர் முருகன் (56). இவருக்கு குடி ப்பழக்கம் இருந்ததாக கூற ப்படுகிறது.

    இந்நிலை யில் கடந்து சில வருடங்களாக அவர் உடல்நிலை பாதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் முருகன் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று அவரை காப்பாற்றியு ள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை முருகன் வீட்டிற்கு வெளியே தனக்குத்தானே சமையல் எண்ணையை தனது உடலில் ஊற்றி தீப்பற்றி வைத்துக் கொ ண்டார். அவர் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் தீயை அணைத்து முருகனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற பின்பு மேல் சிகிச்சைக்காக பெரு ந்துறையில் உள்ள மருத்து வ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயில்சாமி பராமரிப்பில் இருந்து கொண்டு, கால்நடைகளை வளர்த்து வந்தார்.
    • காளியப்பன் கீழே விழுந்து நெஞ்சு, நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பெரிய கள்ளிப்பட்டி கோட்டை புதூரை சேர்ந்த வர் காளியப்பன்(70). இவர், அவரது மகன் மயில்சாமி பராமரிப்பில் இருந்து கொண்டு, கால்நடைகளை வளர்த்து வந்தார்.

    கடந்த மாதம் 28-ந் தேதி காளியப்பன் அவரது 2 மாடு கன்றுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார். அப்போது, கன்று வேகமாக கயிறுடன் இழுத்து சென்றதில், காளியப்பன் கீழே விழுந்து நெஞ்சு, நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து காளியப்பன் மீட்கப்பட்டு அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சோ்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நேற்று பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்
    • இதயம் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம். ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது

    வேலூர்:

    திருவள்ளுவர் மாவட்டம் ,வீரமங்கலம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எபிநேஷன் (வயது 48). இவர் திருத்தணி அருகே உள்ள அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

    கடந்த 21-ந் தேதி மருதாலம் கூட்டு ரோட்டில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர்கள் பின்னால் வந்த மணல் லாரி எபிநேஷன் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட எபிநேஷன் படுகாயம் அடைந்தார்.

    அருகில் இருந்தவர்கள் எபிநேஷனை மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டை சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எபிநேஷன் நேற்று மூளை சாவு அடைந்தார்.

    அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து எபிநேஷனின் இதயம் நுரையீரல் சென்னை எம் ஜி எம் ஆஸ்பத்திரிக்கும் கல்லீரல், இடது புற சிறுநீரகம் ராணிப்பேட்டை சிஎம்சி ஆஸ்பத்திரிக்கும் வலது புற சிறுநீரகம் சென்னை அப்போலோ ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கப்பட்டது.

    மூளை சாவு அடைந்த எபிநேசனுக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், பால் ஆபிரகாம், கிரேஸ்சன், கத்ரின் ரோஸ் என 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

    • விக்னேஷ் மதுவுடன் பூச்சி மருந்தை (விஷம்) கலந்து குடித்து மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • விக்னேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம்மணல்மேடு அருகே உள்ள உச்சிதமங்கலத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது40). இவருடைய உறவினர் சீர்காழி தென்னலகுடியைச் சேர்ந்த வீரமணி மகன் விக்னேஷ் (25) என்பவர் கார்த்திக் வீட்டிற்கு வந்துள்ளார்.

    இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று காலை அருகில் உள்ள கிழாய் ஓடக்கரை பகுதியில் மதுவுடன் பூச்சி மருந்தை (விஷம்) கலந்து குடித்து மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டில் இருந்த போது ராமசாமி திடீரென மயங்கி விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த தளுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (60). டெய்லர். இவரது மனைவி நிர்மலா (52).

    இருவருக்கும் திருமணமாகி 35 வருடங்களாகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை.

    ராமசாமிக்கு கடந்த சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலை 7 மணியளவில் வீட்டில் இருந்த போது ராமசாமி திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் உயர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடைக்கு சென்ற ராஜ் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை கடக்க முயன்றபோது கால் தவறி சாக்கடைக்குள் விழுந்து விட்டார்.
    • உடனடியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கோட்டுவீராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் (50). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தாயுடன் வசித்து வந்தார்.

    உடல் நலம் பாதித்ததால் ராஜ் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று கடைக்கு சென்றவர் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை கடக்க முயன்றபோது கால் தவறி சாக்கடைக்குள் விழுந்து விட்டார். அப்போது காயம் எதுவும் இல்லாததால் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி மாலை அவருக்கு வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜ் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கயிறு திரிக்கும் தொழிலாளி . இவர் இரவு கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார்.
    • மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள அழகுசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி ராஜாமணி (வயது 55), கயிறு திரிக்கும் தொழிலாளி . இவர் இரவு கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது சேலத்தில் இருந்து தாரமங்கலம் நோக்கி பெரியசோரகை சீரங்கனுர் பகுதியை சேர்ந்த தனசேகரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு மூதாட்டியை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்தார்.

    • நேற்று சகிலாமணி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு 2- மணியளவில் ஏதோ பூச்சி கடித்து விட்டதாக சத்தமிட்டு உள்ளார்.
    • இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    டி.என்.பாளையம் 

    டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் லட்சுமிபுரம் பாரதி வீதியை சேர்ந்தவர் சகிலாமணி (56), இவரது கணவர் அழகிரிசாமி, இவர்களுக்கு திருமணமாகி கோவிந்தராஜ் (33) என்ற மகன் உள்ளார்.

    சகிலாமணியின் கணவர் கடந்த 6- வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார், இந்நிலையில் நேற்று சகிலாமணி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு 2- மணியளவில் ஏதோ பூச்சி கடித்து விட்டதாக சத்தமிட்டு உள்ளார்.

    சத்தம் கேட்டு அருகில் இருந்த உறவினர்கள் வந்து பார்க்கையில் பாம்பு கடித்து விட்டதாக அறிந்து கொண்டு, பாம்பை அடித்து கொன்ற உறவினர்கள், சகிலாமணியை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்திருந்த சகிலாமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
    • வயிற்றுவலியால் அவதிபட்டு வந்தார்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள வாராப்பூர் கரையாபட்டி சின்னப்பா மகன் மகேஸ்வரன் (வயது 44) இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

    நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், மனவிரக்தியில் கடந்த மாதம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார் . அப்போது அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த மகேஸ்வரன் இறந்து விட்டார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து சப்-இன் ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். 

    ×