மயங்கி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

வீட்டில் இருந்த போது ராமசாமி திடீரென மயங்கி விழுந்தார்.சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மயங்கி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த தளுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (60). டெய்லர். இவரது மனைவி நிர்மலா (52).

இருவருக்கும் திருமணமாகி 35 வருடங்களாகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை.

ராமசாமிக்கு கடந்த சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை 7 மணியளவில் வீட்டில் இருந்த போது ராமசாமி திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்டு கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் உயர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com