search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy police"

    • துணை ராணுவ படை வருகை
    • புதுவை விமான நிலையத்துக்கு செல்கிறார் ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார். அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    புதுச்சேரி:

    தமிழகம், புதுவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு கர்நாடக மாநிலம் மைசூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை சென்னை வருகிறார்.

    சென்னையில் ராஜ்பவனில் தங்குகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார். தொடர்ந்து ராஜ்பவனில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். நாளை இரவும் ராஜ்பவனில் தங்குகிறார்.

    நாளை மறுநாள் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு கவர்னர் தமிழிசை, முதல்- அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஜனாதிபதியை வரவேற்கின்றனர்.

    அங்கிருந்து கார் மூலம் ஜிப்மர் செல்கிறார். ஜிப்மர் கலையரங்கில் நடைபெறும் விழாவில் புற்றுநோய் சிகிச்சைக்கான லீனியர் ஆக்சிலேட்டர் உபகரணத்தை தொடங்கி வைக்கிறார். அதோடு, தேசிய ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் வில்லியனூரில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கை கொண்ட மருத்துவமனையையும் அவர் திறந்து வைக்கிறார்.

    பின்னர் அவர் கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் தங்கும் விடுதியில் ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து மாலையில் மணக்குள விநாயகர் கோவிலுக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு சென்று கைவினை பொருட்களை பார்வையிட்டு, கலைஞர்களோடு உரையாடுகிறார்.

    அங்கிருந்து திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலுக்கு வழிபடுகிறார். அன்று இரவு கவர்னர் மாளிகையில் பாரம்பரிய உணவு விருந்தில் பங்கேற்கிறார். பின்னர் நீதிபதிகள் தங்கும் விடுதியில் ஓய்வெடுக்கிறார்.

    மறுநாள் (செவ்வாய்கிழமை) காலை அரவிந்தர் ஆசிரமத்துக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஆரோவில் செல்கிறார். அங்கு மாத்ரி மந்திரை பார்வையிடுகிறார். அதன் பின் ஆரோவில்லில் நடைபெறும் கண்காட்சி, அரவிந்தரின் 75-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். அங்கேயே மதிய உணவு அருந்துகிறார்.

    ஆரோவில்லில் மாலை 4 மணி வரை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஜனாதிபதி அங்கிருந்து நேராக புதுவை விமான நிலையத்துக்கு செல்கிறார் ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார். அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதி புதுவை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி காரில் செல்லும் சாலைகளின் இருபுறமும் சவுக்கு கட்டைகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    டெல்லியிலிருந்து புதுவைக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் வந்துள்ளனர். அவர்கள் ஜனாதிபதி பங்கேற்கும் இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். தமிழகம், புதுவை போலீசாருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.  மாலையிலும், இன்று காலையிலும் ஜனாதிபதி வருகையையொட்டி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    11 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து ஜிப்மர் வரை காரில் செல்வதுபோல ஒத்திகை பார்த்தனர். இதில் 20-க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்றன. விழா முடிந்து கடற்கரை சாலைக்கு வருவது, கவர்னர் மாளிகை செல்வது ஆகியவற்றையும் ஒத்திகை நடத்தினர்.

    புதுவை டி.ஜி.பி ஸ்ரீனிவாஸ் தலைமையில் போலீசாருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி வருகையையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் துணை ராணுவ படையின் 2 கம்பெணி படையினர் பாதுகாப்பு பணிக்காக புதுவை வந்துள்ளனர்.

    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது.
    • இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது.

    ஈரோடு:

    நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

    இதில் தமிழகத்தில் மட்டும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கைதை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடை பெற்றன.

    இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது. உடனடியாக இந்த தடை அமலுக்கு வருவதாகவும் அறிவித்தது.

    இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது.

    ஈரோடு காவிரிரோடு, ஜின்னா வீதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் பச்சபாளியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கும், இந்து முன்னணி கட்சி அலுவல கத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு காளை மாட்டு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, பஸ் நிலையம், ஜி.எச். ரவுண்டானா, மேட்டூர் ரோடு, ஸ்வஸ்திக் கார்னர், வீரப்பன்சத்திரம் கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் வழிபாட்டுத் தலங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சத்தியமங்கலம் கோபி, பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு வாகனங்களை தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து அதன் பிறகு உள்ளே அனுமதிக்கின்றனர்.

    • மத்திய அரசின் அக்னிபத் ராணுவ வீரர்கள் ஒப்பந்த சேர்க்கைக்கு எதிர்ப்பு.
    • ஒவ்வொரு தண்டவாளத்துக்கும் 2 போலீஸ்காரர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு

    நெல்லை:

    மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.இந்த திட்டத்தின் மூலம் ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேரும் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள்.

    மத்திய அரசின் இந்த அக்னிபத் ராணுவ வீரர்கள் ஒப்பந்த சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டம் தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திலும் இன்று ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு தண்டவாளத்துக்கும் 2 போலீஸ்காரர்கள் என 20-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் ரெயில்வே மேம்பாலங்கள், தண்டவாளங்கள் உள்ளிட்ட இடங்களில் ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் ரெயில் நிலையங்களில் போராட்டத்திற்கு நுழைந்து விடக்கூடாது என்பதற்காக மாநகர போலீசாரும் சந்திப்பு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    ×