search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    62 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு
    X

    62 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

    • சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கி ணைந்த குழந்தைவளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 62 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழாவினை தொடங்கி வைத்து சீர்வரிசை பொருட்கள் மற்றும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.1,000 ரொக்கம் மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினார்.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன், காமராஜர் நகரில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கி ணைந்த குழந்தைவளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 62 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி. முன்னிலையில் வகித்தார். அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழாவினை தொடங்கி வைத்து சீர்வரிசை பொருட்கள் மற்றும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.1,000 ரொக்கம் மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினார்.

    மேலும் 62 கர்ப்பிணிகளுக்கு 5 வகை உணவுகளும், சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டது. தொடர்ந்து சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில், சென்னிமலை பேரூராட்சி மற்றும் அரசு மருத்து மனைக்கு இடம் வழங்கிய முத்துசாமி முதலியார் உருவப்படத்தினை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும் அவர்களின் வாரிசு தாரர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும் முதல்- அமைச்சர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ந்தேதி பெருந்துறையில் நடந்த அரசு விழாவில் ரூ.46.66 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சென்னிமலை சென்குமார் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் கட்டிடத்தில் கட்டப்பட்ட காட்சி அறையுடன் கூடிய சில்லறை விற்பனை நிலையம் மற்றும் சரக்கு இருப்பு கிடங்கினை திறந்து வைத்ததை தொடர்ந்து, அமைச்சர் சாமிநாதன் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சி. பிரபு, நகர செயலாளர் ராமசாமி, பொதுகுழு உறுப்பினர் சா. மெய்யப்பன், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, சென்னிமலை யூனியன் தலைவர் காயத்திரி, துணை தலைவர் பன்னீர் செல்வம், இளைஞர் அணி சதீஷ் என்கிற சுப்பிர–மணியம், அசோக், கைத்தறி துறை உதவி இயக்கு–நர் சரவணன், மேலாண்மை இயக்குநர் தமிழ்செல்வன், சென்னிமலை பேரூராட்சி செயல் அலு–வலர் ஆயிஷா உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×