என் மலர்
ஈரோடு
- மகாத்மா காந்தியின் நினைவிடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
- காந்தியின் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் நினைவிடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
டெல்லி ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவரை தொடர்ந்து பா.ஜ.க. தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதராடை அணிந்து வந்து மரியாதை செலுத்தினார்.
ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியின் உருவ சிலைக்கு கதராடை அணிந்து வந்து மாலை அணிவித்து மலர் தூவி ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.
- யானை கூட்டங்கள் குட்டிகளுடன் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வரட்டு பள்ளம் அணைப்பகுதிக்கு வந்து குதூகலமாக நீரை குளித்து சென்று வருகிறது.
- வரட்டு பள்ளம் அணையை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
கடந்த சில நாட்களாகவே வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானை சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வருவதும் அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் இடத்தை வரட்டுப்பள்ளம் அணை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. அது மட்டுமன்றி வரட்டுப்பள்ளம் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருக்கும் யானை கூட்டங்கள் குட்டிகளுடன் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வரட்டு பள்ளம் அணைப்பகுதிக்கு வந்து குதூகலமாக நீரை குளித்து சென்று வருகிறது.
தற்போது தொடர் விடுமுறை காரணமாக அந்தியூர் வரட்டு பள்ளம் அணையை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் யானை கூட்டங்களும் வரட்டுப்பள்ளம் அணையை நோக்கி படையெடுத்து வருவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- தனது சென்னை பயணம் குறித்து வேண்டுமென்றே வதந்தி பரப்புகின்றனர்.
- மனைவி மருத்துவமனையில் இருப்பதால்தான் சென்னைக்கு சென்றேன்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தனது சென்னை பயணம் குறித்து வேண்டுமென்றே வதந்தி பரப்புகின்றனர்.
* யாரையும் அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை என கூறிய பின்னரும் வதந்தி பரப்புகின்றனர்.
* மனைவி மருத்துவமனையில் இருப்பதால்தான் சென்னைக்கு சென்றேன்.
* வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது.
* அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் என்பதற்காக பேசி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம்.
- நேற்று அரசியல் ரீதியாகவும், மற்ற ரீதியாகவும் யாரையும் சந்திக்கவில்லை.
அ.தி.மு.க.வில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையன் நேற்று சென்னைக்கு சென்றிருந்தார். அப்போது அவர் டி.டி.வி.தினகரனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை என செங்கோட்டையன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று சென்னையில் இருந்து கோபிசெட்டிப்பாளையத்திற்கு திரும்பிய செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
* சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை. சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் எனது மனைவியை சந்திக்க சென்றிருந்தேன்.
* சென்னை சென்றவுடன் எனது சொந்த வேலையை பார்த்துவிட்டு இன்று வீட்டிற்கு திரும்பியிருக்கிறேன். நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் யாரையும் சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை.
* நேற்று அரசியல் ரீதியாகவும், மற்ற ரீதியாகவும் யாரையும் சந்திக்கவில்லை என்றார்.
இதனிடையே, ஒருங்கிணைப்பு பணி எந்தளவு உள்ளது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு யார் என்னுடன் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ். பல்வேறு நண்பர்கள் என்னிடத்தில் பேசுகிறார்கள், ஒருமித்த கருத்துக்கள் அவர்கள் மனதில் இருக்கிறது என கூறினார்.
- ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- நேற்று நள்ளிரவே செங்கோட்டையன் சென்னை சென்று சென்று விட்டார்.
கோபி:
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் எழுச்சி பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று மாலை நடைபெறும் பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை 6 மணி அளவில் சேலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி காரில் கிளம்பினார்.
ஈரோடு மாவட்டம் பவானி வழியாக இன்று காலை 7 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் அருகே வந்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கும் வகையில் கவுந்தப்பாடியில் இருந்து கோபி செட்டிபாளையம் பஸ் நிலையம் வரை சாலையின் இருபுறம் அ.தி.மு.க கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க பொறுப்பாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ தலைமையில், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.சி. கருப்பணன் எம்.எல்.ஏ, ஜெயக்குமார் எம்.எல்.ஏ, கோபி நகரச் செயலாளர் பிரிணியோ கணேஷ் முன்னிலையில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கூட்டத்தை பார்த்து உற்சாகமடைந்த எடப்பாடி பழனிசாமி காரை விட்டு கீழே இறங்கி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. காரில் இருந்தவாறு தொண்டர்களின் நோக்கி கையை அசைத்தார். அப்போது கூடி இருந்தவர்கள் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என கோஷம் எழுப்பினர்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொகுதியில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்ததால் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக காணப்பட்டார்.
சுமார் 30 நிமிடமாக கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் வரவேற்பை ஏற்று அதன் பிறகு அங்கிருந்து காரில் சத்தியமங்கலம் கிளம்பி சென்றார். அங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க ஒருங்கிணைப்பை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டார். இதையடுத்து உடனடியாக செங்கோட்டையன் வசித்து வந்த கட்சி பொறுப்புகளை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
அப்போது அ.தி.மு.க ஒருங்கிணைக்காமல் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோபி செட்டிபாளையம் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கும் வகையில் நேற்று நள்ளிரவே செங்கோட்டையன் சென்னை சென்று சென்று விட்டார்.
ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி முதல் முதலாக கோவை மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசார பயணத்தை தொடங்கும் போது கோபிசெட்டிபாளையம் வழியாக சென்றார். அப்போதும் செங்கோட்டையன் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பர்கூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
- வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக தாளவாடி, ஆசனூர், திம்பம், பர்கூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
கடந்த சில நாட்களாகவே அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு அந்த வழியாக கரும்பு பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்பு துண்டுகளை ருசிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. சில சமயம் வாகனங்களையும், வாகன ஓட்டிகளையும் துரத்தும் சம்பவம் நடந்து வருகிறது.
இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மூன்று நாட்களாகவே ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு வாகனங்களை துரத்தும் சம்பவம் நடந்து வருகிறது.
நேற்று மாலையும் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை எதிர்நோக்கி காத்திருந்த ஒற்றை யானை அந்த வழியாக வந்த ஒவ்வொரு வாகனங்களையும் வழிமறித்து கரும்பு கட்டுகள் உள்ளதா என தேடியது. அப்போது அந்த வழியாக கரும்பு பாரங்களை ஏற்றி வந்த லாரியை மடக்கி லாரியின் மேல் பகுதியில் இருந்த கரும்புகளை லாவகரமாக கீழே எடுத்து போட்டு ருசித்தது.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மீண்டும் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து ஆசனூர் வனப்பகுதியில் சுற்றிவரும் அந்த ஒற்றை யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசனூர் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- கொப்பரை தேங்காய்கள் தேவைப்படும்போது கொள்முதல் செய்யப்பட்டு மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொள்முதல் நிலையம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி காந்தி வீதியில் மேரிகோ லிமிடெட் என்ற தனியார் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இதன் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. மேலும் இதன் கிளைகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
கொப்பரை தேங்காய்கள் தேவைப்படும்போது கொள்முதல் செய்யப்பட்டு மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
அப்போது மதியம் 2 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் திடீரென வந்து இறங்கினர். அவர்கள் கொள்முதல் நிலையத்துக்குள் சென்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இரவு வரை இந்த சோதனை நீடித்தது. இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக தேங்காய் கொள்முதல் நிலையத்திற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையிட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு அடிப்படையில் இந்த சோதனையை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொள்முதல் நிலையம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
- மருந்து, ஊசிகள் இருப்பு, நோயாளிகளின் வருகை, எக்ஸ்-ரே பிரிவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
- உள்நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவுறுத்தினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கரூரில் நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், இன்று காலை ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்திருந்தார். பின்னர் கொடுமுடி பகுதியில் சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து அவர் திடீரென கொடுமுடி அரசு மருத்துவமனைக்குள் சென்று, அங்கிருந்த மருத்துவர்கள், பணியாளர்கள் வருகைப்பதிவேடு, மருந்து, ஊசிகள் இருப்பு, நோயாளிகளின் வருகை, எக்ஸ்-ரே பிரிவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அங்கு உள்நோயாளிகளாக இருந்தவர்களிடம், முறையாக சிகிச்சை அளிக்கின்றார்களா, மருந்து, ஊசிகள் வழங்கப்படுகிறதா என சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.
மேலும், அங்குள்ள சுகாதார வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும், இங்கு ஏதேனும் குறைகள் இருந்தால், உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என மருத்துவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இதனையடுத்து, உள்நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவுறுத்தினார். ஆய்வை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.
- அண்ணாவின் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு.
- அ.தி.மு.க தேர்தலில் வெற்றி பெற மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
கோபி:
அ.தி.மு.க மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த 5-ந் தேதி அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை இன்னும் 10 நாட்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டும். இல்லையென்றால் இதே மனநிலையில் இருப்பவர்களை சேர்த்து ஒருங்கிணைக்கும் பணியை நாங்களே மேற்கொள்வோம் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்து அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் தெரிவித்த கருத்து விவாத பொருளாக மாறியது. இதையடுத்து மறுநாளே செங்கோட்டையன் வசித்து வந்த அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த செங்கோட்டையன் அவசர அவசரமாக கடந்த 7-ந் தேதி டெல்லி சென்றார். அங்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து அ.தி.மு.க ஒன்றிணைவது குறித்து பேசினார். இந்த விவரம் அ.தி.மு.க.வில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவரது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் செங்கோட்டையன் கலந்து கொண்டு அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று அண்ணா பிறந்தநாளில் அவரது தியாகத்தை போற்றி மகிழ்வோம். அண்ணாவின் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. மறப்போம் மன்னிப்போம் என்பதை நினைவூட்டுகிறேன். அண்ணாவின் பெயரால் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க.வை ஜெயலலிதா கட்டி காத்தார்.
என்னை பொருத்தவரை எம்.ஜி.ஆர். கனவு, ஜெயலலிதா கனவை நினைவாக்கும் வகையில் மீண்டும் 100 ஆண்டு காலம் ஆட்சிக்கட்டிலில் அ.தி.மு.க அமர வேண்டும் என்ற நோக்கில் கடந்த 5-ம் தேதி மனம் திறந்து பேசினேன்.
என்னைப் பொருத்தவரை அ.தி.மு.க ஒன்று பட வேண்டும் என்பதை எனது நோக்கம்.
எனது கருத்துக்கு கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் இடையே வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தொண்டர்கள், பொதுமக்கள் கருத்தைதான் பிரதிபலித்தேன். இதை புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க தேர்தலில் வெற்றி பெற மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 2026 -ல் அ.தி.மு.க ஆட்சி மலர அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து 10 நாள் கெடு விவகாரம், டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த விவகாரம் என பல்வேறு கேள்விகளை நிருபர்கள் செங்கோட்டையனிடம் அடுக்கடுக்காக கேட்டனர். ஆனால் அனைத்து கேள்விக்கும் அவர் பதில் சொல்லாமல் சிரித்தவாறு சென்று விட்டார்.
- ஈரோட்டை சேர்ந்த நிர்வாகிகள் சிலரை அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
- அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்துக்கு பலரும் ஆதரவு அளித்தனர்.
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்தார்.
இதுதொடர்பாக அவர், ஈரோட்டில் கடந்த 5-ந்தேதி அன்று அளித்த பேட்டியில், 10 நாட்களுக்குள் இதை செய்யாவிட்டால் நாங்களே செய்வோம்' என்று எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடு விதித்தார். அவருடைய இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது.
உள்கட்சி விவகாரத்தில் தனக்கு காலக்கெடு விதித்த செங்கோட்டையனின் கட்சி பதவியை எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பறித்தார். மேலும் அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்ளிட்டோரின் பதவிகளும் பறிக்கப்பட்டது. ஈரோட்டை சேர்ந்த நிர்வாகிகள் சிலரை அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
இதனால் விரக்தியடைந்த செங்கோட்டையன் கடந்த 7-ந்தேதி டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார். இதுதொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். கட்சியை வலுப்படுத்த வேண்டும்' என்று அமித்ஷாவிடம் பேசியதாக தெரிவித்தார்.
இந்நிலையில் அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை ஒன்றிணைக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விதித்த கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் கோபிசெட்டிப்பாளையத்தில் பேரறிஞர் அண்ணா படத்திற்கு மரியாதை செலுத்திய பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பேரறிஞர் அண்ணாவின் பெயரால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார், ஜெயலலிதா அதனை கட்டிக் காத்து வளர்த்தார்.
* அ.தி.மு.க. ஒன்றிணையும் விவகாரத்தில் தொண்டர்கள் கருத்தையே நான் பிரதிபலித்தேன்.
* அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்துக்கு பலரும் ஆதரவு அளித்தனர்.
* அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்பது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது.
- இத்திருமணத்தை திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
சேலம், தாரமங்கலம் அருகே உள்ள ஓமலூரைச் சேர்ந்த 32 வயதான சரவணகுமார், தன்னுடைய டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றும் 30 வயதான திருநங்கை சரோவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் நடைபெற்றது.
இத்திருமணத்தை திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் மு. சென்னியப்பன் தலைமையேற்று நடத்தி வைத்தார். இவர்களின் திருமண வீடியோ இணையத்தில் வைரலையுள்ளது. பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- மூத்த முன்னோர்கள் இப்படிச் செய்தால், சாதாரண தொண்டர்கள் எங்கே போக முடியும்?
- அவரது தாயாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மறைமுகமாக தாக்கி விமர்சித்து இருந்தார். ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில்,
பழனிசாமியின் பயணத்திற்கு பேரலையாக மக்கள் வருவதை தாங்கிக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சல் மனிதர்கள்; அத்தகைய வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு ஜெயலலிதாவின் ஆன்மா தோல்வியைத் தரும். மூத்த முன்னோர்கள் இப்படிச் செய்தால், சாதாரண தொண்டர்கள் எங்கே போக முடியும்?
எடப்பாடியை அசைத்துப் பார்க்கலாம் என்று கனவு கண்டால் தோற்பது நீங்களாகத்தான் இருப்பீர்கள். அவரை மாற்றுவோம், இவரை மாற்றுவோம் என்று சொல்பவர்களை எல்லாம் மக்கள் மாற்றி விடுவார்கள்.ஒற்றுமை என்ற பெயரை வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்று கூறியிருந்தார்.
ஆர்.பி.உதயகுமாரின் விமர்சனம் குறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், அவருடைய அம்மாவே இறந்து கிடக்கிறார், அதை பார்க்க சொல்லுங்கள் என்றார்.
இதையடுத்து மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமாரின் தாய் காலமானது குறித்து பேசியதற்கு மன்னிக்க வேண்டும். தன்னால் நேரில் செல்ல இயலவில்லை. அவரது தாயாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். எங்கள் அனைவரின் சார்பாக கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன் என்றார்.






