என் மலர்tooltip icon

    ஈரோடு

    • லாரி ஒன்று துரைசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
    • இதில் துரைசாமிக்கு தலையில் பலத்த அடிபட்டது.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே சோளக்காளிபாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (65). விவசாயி. இவர் சம்பவத்த ன்று மாலைய வருந்தியாபா ளையம் அருகே நொய்யல் செல்லும் சாலையில் தனது மொபெட்டில் சென்று கொண்டிருந்துள்ளார்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று துரைசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் துரைசாமிக்கு தலையில் பலத்த அடிபட்டது.

    இதனால் உயிருக்கு போராடிக்கொ ண்டிருந்த துரைசாமியை அருகில் இருந்தவர் மீட்டு அவரை தனியார் ஆம்புல ன்ஸ் மூலம் கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற துரைசாமி பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் துரைசாமி யின் உடல்நிலை மோசமான தையடுத்து அங்கிருந்து சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக துரைசாமி அனுப்பி வைக்கப் பட்டுள்ளார்.

    தற்போது சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் துரைசாமி சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
    • அணையின் நீர்மட்டம் 74.58 அடியாக சரிந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.58 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வினாடி 1,512 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • 18 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என சிவகிரி, வரப்பாளையம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது கொமரபாளையம் மற்றும் கோவில் காடு பகுதிகளில் அரசு அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த நம்பியூர் கொமரபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் திருநாவுக்கரசு (வயது 31), தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் நாகராஜன் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 18 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார்த்திக் ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.
    • மருத்துவர்கள் கார்த்திக் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அவ ல்பூந்துறை காத்துப்பா ளையம் பகுதியைச் சேர்ந்த வர் சங்கர் (வயது 42). இவரது மகன் கார்த்தி (20). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கார்த்தி அவரது நண்பர்களுடன் கொடிவேரி அணைக்கு குளிக்கச் சென்றுள்ளார். அணையில் நீர் அதிகமாக சென்று கொண்டிருந்தது.

    நண்பர்கள் அனைவரும் குளித்து கொண்டிருக்கும் போது கார்த்திக் ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். உடன் அவரது நண்பர்கள் சத்தம் போட்டனர்.

    அலரல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் நீரில் மூழ்கிய கார்த்திக்கை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சக்தி அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவ ரது தந்தை சங்கர் பங்களா புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • வாலிபர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
    • அவரை கைது செய்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் மற்றும் போலீசார் சென்னிமலையில் உள்ள ஈங்கூர் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்குள்ள மாரியப்பா நகர் என்ற இடத்தில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அந்த வாலிபர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    மேலும் அவரை விசாரித்த போது அந்த வாலிபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் குமார் (30) என தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 600 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • இளநீர் கடை அதிக அளவில் வைக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.
    • விலை குறையாமல் அதே 40 ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விழைய கூடிய தேங்காய் மற்றும் இளநீரை வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து வாங்கி வந்து வார சந்தைகளிலும், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களுக்கு தேங்காய் விற்பனை செய்து வருகின்றார்கள்.

    இந்த நிலையில் வெயில் காலங்களில் இளநீர் விற்பனை தொடங்கி தற்போது வெயில் காலம் குறைந்தும் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள ரவுண்டானா பகுதிகளில் இளநீர் கடை அதிக அளவில் வைக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.

    இது குறித்து அந்தியூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில்,

    வெயில் காலங்களில் இளநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்த படியால் 50 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்ப ட்டது. தற்போது வெயில் காலம் குறைந்து குளிர்ந்த காற்றும், வெயிலின் தாக்கம் குறைந்தும் இருக்கும் நிலையில் மருத்து வர்கள் அறிவுறு த்தலின்படி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்ப ட்டிருக்கும் நோயாளி களுக்கும் மற்றும் கோ வில்களில் அபிஷேகங்களுக்கும் தற்போது இளநீர் வாங்கி செல்கின்ற னர்.

    இன்னும் விலை குறையாமல் அதே 40 ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட வருகிறது.

    இதனை வியாபாரிகள் விவசாய இடத்தில் எடுத்துக் கூறி அங்கு விலையை சற்று குறைத்து வாங்கி பொது மக்கள் விற்பனை செய்யும் விலையும் சிறிது குறைத்தால் தற்போது இருக்கும் காலகட்ட சூழ்நிலைக்கு சிரமம் இன்றி இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

    • செந்தில் தனக்குத்தானே மண்எ ண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
    • சிகிச்சை பலனின்றி செந்தில் பரிதாபமாக இறந்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே கே.ஜி.வலசை அடுத்த களிச்சாங்காட்டுவலசை சேர்ந்தவர் செந்தில் (வயது 41). இவர் சென்னிமலை குமராபுரியில் கடந்த 6 ஆண்டுகளாக மருந்து கடை நடத்தி வந்தார்.

    மேலும் தற்போது சென்னிமலை அருகே அம்மாபாளையத்தில் புதிதாக ஒரு மருந்து கடையை திறந்து 6 மாதமாக நடத்தி வந்தார். மருந்து கடையில் போதிய வருமானம் இல்லாததால் செந்தில் யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மருந்து கடைக்கு செல்லாமல் செந்தில் வீட்டிலேயே இருந்துள்ளார்.

    அப்போது குளியலறைக்குள் சென்ற செந்தில் தனக்குத்தானே மண்எ ண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    இதனை கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக செந்திலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதில் சிகிச்சை பலனின்றி செந்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செந்திலின் மனைவி கார்த்திகா கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.84 அடியாக சரிந்துள்ளது.
    • அணையில் இருந்து 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதி யாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.84 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வினாடி 1,162 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணையை தொடர்ந்து மற்ற அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வரு கிறது. குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.83 அடியா கவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 13.61 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.19 அடியாகவும் உள்ளது.

    • விற்பனைக்காக வைத்திருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறு கிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னிமலை, ெரயில் நிலையம், அம்மா பேட்டை, கடத்தூர் பகுதி யில் அனுமதியின்றி மதுவி ற்று கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் விவேக்ராஜ் (வயது 37), சென்னிமலை ரோடு பெரிய தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் முருகேசன் (41), பவானி தொட்டி பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (43), கடத்தூர் பகுதியை சேர்ந்த நல்லதம்பி மகன் ஆறுமுகம் (63) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதைப்போல் கருங்க ல்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த முபாரக் மகன் இப்ராஹிம் (22) என்பவரை கருங்கல்பாளையம் போலீ சார் பிடித்தனர்.

    பின்னர் அவரிடம் இரு ந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் எதிர்பாராத விதமாக ரோட்டின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் மேகநாதன். இவர் அரசு மருத்துவர் ஆவார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று அறச்சலூரை அடுத்த ஓடா நிலை ஜெயராமபுரம் அருகே காரில் தனியாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கார் எதிர்பாராத விதமாக ரோட்டின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மேகநாதன் உடல்நசுங்கி பலியானார்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து தகவல் அறி்ந்த அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான மருத்துவர் மேகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரில் அந்தியூரில் இருந்து புதுக்கோட்டை, பிள்ளையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்துடன் சென்றனர்.
    • விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அ.தி.மு.க. ஒன்றிய துணைச்செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி.சண்முகானந்தம். இவர் இவரது மனைவி புஷ்பவல்லி (வயது 47), இவர்களது மகன் மோகன் மற்றும் உறவினர் சரஸ்வதி ஆகியோர் குடும்பத்தினருடன் நேற்று காரில் அந்தியூரில் இருந்து புதுக்கோட்டை, பிள்ளையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்துடன் சென்றனர்.

    காரை திருக்குமரன் என்பவர் ஓட்டி சென்றார். பின்னர் அங்கிருந்து காரில் அந்தியூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது கரூர் அருகே அரவக்குறிச்சி என்ற இடத்தில் கார் வந்துகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் எஸ்.ஜி.சண்முகானந்தம் சீட்பெல்ட் அணிந்திருந்தார். இதனால் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    இதில் அ.தி.மு.க. பிரமுகரின் மனைவி புஷ்பவல்லி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இவரது மகன் மோகன் மற்றும் உறவினர் சரஸ்வதி ஆகியோரும் லேசான காயம் அடைந்தனர்.

    டிரைவர் திருக்குமரன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    • பாக்கியலட்சுமி தான் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை காணவில்லை என கூச்சலிட்டார்.
    • பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டது.

    ஈரோடு:

    கோவை மாவட்டம் மோ லப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பாக்கியல ட்சுமி (60). இவர் தனது உறவினர்களுடன் கோபிசெட்டி பாளையத்தில் உள்ள கோவிலுக்கு செல்வதற்காக பெருந்துறை பஸ் நிலையம் வந்துள்ளார்.

    அங்கு கோபிசெட்டி பாளையம் செல்வதற்காக தயாராக இருந்த டவுன் பஸ்சில் ஏறியுள்ளனர். பஸ் புறப்ப ட்ட நிலையில் மூதாட்டி பாக்கியலட்சுமி தான் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை காணவில்லை என கூச்சலிட்டார்.

    இதனையடுத்து பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் பஸ்சில் இருந்த பயணிகளு டன் பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

    பின்னர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டது.

    மேலும் போலீசார் பஸ் முழுவதும் தீவிர சோதனையிட்டனர். எனினும் நகையை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×