என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை
    X

    வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை

    • வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஈரோடு,

    சேலம் மாவட்டம் எடப்பாடி கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு. இவரது மகள் சிவரஞ்சனி (வயது 30). இவர் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு வங்கியில் துணை மேலா ளராக பணியாற்றி வந்தார். இவர் பெருந்துறை சென்னி மலை ரோட்டுப் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார். இந்நிலையில் சிவரஞ்சனி நீண்ட நாட்களாக வரன் அமையாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ராமு தனது மகள் சிவரஞ்சனிக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் சிவரஞ்சனி வீட்டிற்கு செல்லாததால பெருந்துறையில் மகள் தங்கி இருந்த வீட்டிற்கு ராமு மற்றும் அவரது மகன் சென்றனர். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கு சிவரஞ்சனி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து ராமு பெருந்துறை போலீஸ் நிலையத்தில் தனது மகளுக்கு வரன் அமையாததால் மன வருத்தத்தில் ஏதோ சாப்பிட்டு இருந்திருக்கலாம் என புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்க ர்நாடகா மாநி லம் பெங்களூரை சேர்ந்தவர் ரேகா (40). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் தர்ஷினி (19). இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு நடனக் குழுவில் நடனம் ஆடு பவர் ஆவார். இந்நிலையில் தர்ஷினி தூக்குமாட்டி இறந்து விட்டதாக ரேகாவுக்கு தகவல் கிடைத்தது. பின்னர் இதுகுறித்து ரேகா மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×