என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
    • திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. காலையில் தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை வரை நீடித்து வந்தது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்து வந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலை முதல் இரவு வரை பல்வேறு பகுதி களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    குறிப்பாக வரட்டு பள்ளம், குண்டேரி பள்ளம், கொடி வேரி அணை, பவானிசாகர் போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. வரட்டு பள்ளம் அணை பகுதியில் அதிகபட்சமாக 37 மில்லி மீட்டர் மழை பதிவா கியுள்ளது. இதேபோன்று பவானி, பவானிசாகர், சத்தியம ங்கலம், கோபி, பெருந்துறை, அம்மா பேட்டை, கவுந்தப்பாடி, நம்பியூர் போன்ற பகுதிகளி லும் பரவலாக மழை பெய்த து. திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இதே போல் தாளவாடி மலைப்பகுதியிலும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- வரட்டு பள்ளம்-37, பவானி-28, பவானி சாகர்-19.20, குண்டேரி பள்ளம்-15.80, கொடிவேரி அணை-11, சத்தியம ங்கலம்-10, கோபி-8.20, பெருந்துறை-8, அம்மா பேட்டை-6, கவுந்தப்பாடி-4, நம்பியூர்-3, தாளவாடி, மொடக்குறிச்சி -1.

    • குட்கா பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது
    • உணவு பாதுகாப்பு துறையினர் ஈஸ்வரனிடம் இருந்த சுமார் 500 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்

    டி.என்.பாளையம்,

    டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை யினர் சோதனையில் ஈடுப ட்டனர். அப்போது டி.என்.பாளையம் அடுத்த வாணிப்புத்தூர் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். சோதனையில் ஈஸ்வரன் என்பவர் தனது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா எனும் பான் மசாலா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது.

    அதைத்தொடர்ந்து ஈஸ்வரனிடம் இருந்த சுமார் 500 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறையினர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையின் அலுவலர் சக்திவேல் கூறியதாவது; மளிகை கடையில் தரம் குறைவு மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் 94 440423 22 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றார்.

    • வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஈரோடு,

    சேலம் மாவட்டம் எடப்பாடி கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு. இவரது மகள் சிவரஞ்சனி (வயது 30). இவர் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு வங்கியில் துணை மேலா ளராக பணியாற்றி வந்தார். இவர் பெருந்துறை சென்னி மலை ரோட்டுப் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார். இந்நிலையில் சிவரஞ்சனி நீண்ட நாட்களாக வரன் அமையாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ராமு தனது மகள் சிவரஞ்சனிக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் சிவரஞ்சனி வீட்டிற்கு செல்லாததால பெருந்துறையில் மகள் தங்கி இருந்த வீட்டிற்கு ராமு மற்றும் அவரது மகன் சென்றனர். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கு சிவரஞ்சனி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து ராமு பெருந்துறை போலீஸ் நிலையத்தில் தனது மகளுக்கு வரன் அமையாததால் மன வருத்தத்தில் ஏதோ சாப்பிட்டு இருந்திருக்கலாம் என புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்க ர்நாடகா மாநி லம் பெங்களூரை சேர்ந்தவர் ரேகா (40). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் தர்ஷினி (19). இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு நடனக் குழுவில் நடனம் ஆடு பவர் ஆவார். இந்நிலையில் தர்ஷினி தூக்குமாட்டி இறந்து விட்டதாக ரேகாவுக்கு தகவல் கிடைத்தது. பின்னர் இதுகுறித்து ரேகா மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொடிவேரியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்
    • பவானிசாகர் அணை பூங்காவில் பொதுமக்கள் குவிந்தனர்

    கோபி,

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்ப ணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொ ட்டி ஆர்ப்பரித்து செல்கிறது. இந்த கொட்டும் தண்ணீ ரில் குளிப்பதற்கும், ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான சற்றுலா பயணிகள் தடுப்ப ணைக்கு வந்து செல்கி றார்கள். மேலும் விழா மற்றும் விடுமுறை நாட்க ளில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் குடு ம்பத்து டன் வந்து தடுப்பணையில் குளி த்து மகிழ்ந்து செல்கி றார்கள்.

    இந்த நிலையில் சனி க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விநாயகர் சதுர்த்தி என தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் கடந்த 2 நாட்களாக கொடிவேரிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். நேற்று சனிக்கிழமை பொது மக்கள் பலர் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதே போல் விடுமுறை தினமான இன்று ஞாயிற்று க்கிழமை கொடிவேரிக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்தனர்.

    காலை நேரத்தில் கூட்டம் குறைந்து காணப் பட்டாலும் நேரம் செல்ல, செல்ல மக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. ஈரோடு, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம் மற்றும் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இரு ந்தும், சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் இன்று ஏராளமான பொதுமக்கள் கொடிவேரிக்கு தங்கள் குடு ம்பத்துடன் வந்திருந்த னர்.

    இதை தொடர்ந்து சிறுவர், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என பலர் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்த னர். மேலும் இளைஞர்கள் பலர் வந்து குளித்து குதுகளித்த னர். இதையடுத்து பொது மக்கள் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகள், வெளிப்பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன்களையும் ருசித்து விட்டு சென்றனர். இதே போல் சத்தியமங்க லம் அருகே உள்ள பவானி சாகருக்கு இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பொது மக்கள் பலர் வந்திருந்தனர்.

    இதை தொடர்ந்து குடும்ப த்துடன் வந்திருந்த மக்கள் அணை பூங்காவில் விளை யாடி மகிழ்ந்தனர். மேலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடி குது களித்தனர். பெண்கள் பலர் சறுக்கு விளையாடி இய ற்கையை ரசித்து சென்ற னர். இதே போல் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகை ரசித்தனர். இதனால் இன்று பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    • எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.72 லட்சத்து தேங்காய் விற்பனை நடைபெற்றது
    • லோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 90 காசுக்கு விற்பனையானது

    எழுமாத்தூர்,

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 29 ஆயிரத்து 245 எண்ணிக்கையிலான 12 ஆயிரத்து 158 கிலோ எடைகொண்ட தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 90 காசுகள், அதிகபட்ச விலையாக 23.39 காசுகள், சராசரி விலையாக 22.55 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 888-க்கு விற்பனையானது.

    • கார்மெண்ட்ஸ் கம்பெனியில் பணம் திருடிய வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்
    • போலீசார் அவர் வைத்திருந்த பணம் ரூ.3 ஆயிரத்து 850 ரூபாய் மற்றும் செல்போனை பறிமுதல் பறிமுதல் செய்தனர்.

    புளியம்பட்டி, 

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பஸ் நிலையம் பின்புறம் முத்துச்சாமி என்பவர் கார்மெண்ட்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் கடந்த சில தினங்க ளுக்கு முன்பு கேரள மாநிலம் சுற்றுலா சென்றபோது இவரது கம்பெனியின் பின் பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.80 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருடனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் போலீசார் சத்தியமங்கலம் வடக்கு ப்பேட்டையில் சுற்றித்திரிந்து நபரை பிடித்து விசாரித்த போது அவர் கர்நாடகா மாநிலம் நஞ்சன்கோடு சிந்தகள்ளி சேர்ந்த ரங்கசாமி (வயது 27) என்பதும், புளிய ம்பட்டி பனியன் கம்பெனியில் பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரங்கசாமியை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த பணம் ரூ.3 ஆயிரத்து 850 ரூபாய் மற்றும் செல்போனை பறிமுதல் பறிமுதல் செய்தனர். பின்னர் ரங்கசாமியை நீதிம ன்ற காவலுக்கு அனுப்பி வைத்து சிறையில் அடைத்தனர்.

    • வழக்கில் தலைமறைவாக இருக்கும் புகழேந்தி, மோதிலால் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
    • தொழிலாளர்களை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் வால்மிகி. இவர் தனது நண்பர்களான ஜிதேந்திர குமார், வினய்குமார், பவன்குமார், அசோக்குமார், சித்தார்ய குமார், ஆகியோருடன் கடந்த மாதம் 14-ம் தேதி பீகாரில் இருந்து வேலை தேடி கேரளாவிற்கு ரெயிலில் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது பீகாரை சேர்ந்த பிபீன் குமார் என்பவர் தனது நண்பர் மூலமாக வால்மியை தொடர்பு கொண்டு தான் வேலை வாங்கித் தருவதாகக் கூறியும் தன்னுடன் இருக்கும் நண்பர்களை அழைத்துக் கொண்டு ஈரோட்டிற்கு வரும் படியும் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

    ஏற்கனவே ஈரோடு ரெயில் நிலையத்தில் பிபீன் குமார் தனது நண்பர்களுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் வந்தவுடன் அவர்களை ஈரோடு பெரிய சேமூர் பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கொடுக்க வேண்டும் என்றும் கொடுத்தால் தான் தங்களை விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.

    மேலும் ஆன்லைன் மூலமாக பணம் அனுப்ப வேண்டும் என்றும் மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பீகாரில் உள்ள தங்களது உறவினர்களை தொடர்பு கொண்டு ரூ.1.10 லட்சம் ஜி.பே. மூலமாக அனுப்பி வைத்து உள்ளனர்.

    பணம் வந்த உடனே பிபீன் குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தி வைத்திருந்த 6 பேரையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து டெம்போ டிராவலர் மூலமாக அவர்களை கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் விட்டு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து வால்மீகி உட்பட 6 பேரும் சென்னையில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று அங்கிருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். தொடர்ந்து இது குறித்து சென்னை போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து சென்னை போலீசார் புகார் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு அந்த புகார் நகலை அனுப்பி வைத்தனர்.

    அதன் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் பெரிய சேமூர் பகுதியில் இருந்த பீகாரை சேர்ந்த பிபீன் குமார் மற்றும் அவனுக்கு உதவியாக இருந்த ஈரோட்டை சேர்ந்த தமிழ் செல்வன், சுபாஷ், பிரகாஷ், சசிகுமார், பூபாலன், கண்ணன் ஆகிய 7 பேரை 8 பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் புகழேந்தி, மோதிலால் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். குடும்பத்தை காப்பாற்றி அனைத்து உறவுகளையும் விட்டுவிட்டு குறைந்த ஊதியத்திற்காக மாநிலம் விட்டு மாநிலம் வரும் வடமாநில தொழிலாளர்களை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காரின் அடியில் இருந்து தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
    • உடனடியாக கவின் காரை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் மணிமலை, காளிக்கோ ப்டெக்ஸ் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கவின் (23). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் தனது நண்பரின் காருக்கு கியாஸ் பிடிப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னி மலையில் உள்ள கியாஸ் பங்குக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அரச்சலூர் ரோடு அம்மாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகில் சென்று கொண்டிருந்த போது காரின் அடியில் இருந்து தீ பிடித்து எரிந்து கொண்டி ருந்தது.

    இதனை அந்த வழியே ரோட்டில் சென்று கொண்டி ருந்தவர்கள் பார்த்து காரில் தீ எரிவதை கவினிடம் சத்தம் போட்டு தெரிவித்தனர்.

    பின்னர் உடனடியாக கவின் காரை ரோட்டோ ரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டார்.

    அப்போது தீ மள, மள பரவியது. இதனால் உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது.

    காரில் தீ எரிவதை ரோட்டில் சென்றவர்கள் பார்த்து சொன்னதால் கல்லூரி மாணவர் கவின் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மன உளைச்சல் அடைந்த குணசேகரன் என்ற பேச்சியப்பன் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தங்க மேடு தம்பி கலை அய்யன் கோவில் பகுதியைச் சேர்ந்த வர் குணசேகரன் என்ற பேச்சியப்பன் (வயது 55). இவர் கட்டிட வேலை செய்து வந்தார்.

    இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

    பின்னர் ஜாமினில் வெளியே வந்த குணசேகரன் என்ற பேச்சியப்பன் அம்மாபேட்டை போலீஸ் நிலை யத்தில் தினமும் கையொப்பமிட்டு வந்தார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று சிறைக்கு சென்றதை நினைத்து மன உளைச்சல் அடைந்த குணசேகரன் என்ற பேச்சியப்பன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பின்னர் இதுகுறித்து அவ ரது மனைவி பழனிய ம்மாள் காஞ்சி கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டத்தரசி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • இதல் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து குட்டகம் கிரா மத்தில் பல நூறு ஆண்டு களாக எழுந்தருளி அருளா ட்சி செய்து வரும் அத்தனூர் அம்மன், மாரியம்மன் மற்றும் பட்டத்தரசி அம்மன் கோவில்கள் உள்ளது.

    இதில் பட்டத்தரசி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடை பெற்றது. மேலும் அத்தனூர் அம்மன், மாரியம்மன் கோவிலுக்கு முதலாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

    இதில் பட்டத்தரசி அம்மனுக்கு கடந்த 30-ந் தேதி விநாயகர் அணுக்கை பூஜையுடன் தொடங்கி அம்மன் ஊர்வ லம் நடை பெற்றது. அதனை தொடர்ந்து மாலை மங்கல இசை முழங்க விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாக பூஜை நடைபெற்றது.

    மேலும் இரவு இரண்டாம் கால பூஜையும் நேற்று சிவாச்சாரியார் காயத்ரி மந்திரங்கள் முழங்க கோவில் பட்டத்தரசி அம்ம னுக்கு புனித நீரூற்றி சிறப்பு பூஜை செய்து கும்பா பிஷேகம் நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் மீது புனித நீர் தீர்த்தம் தெளிக்க ப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    பின்பு பட்டத்தரசி அம்மனுக்கு பால், இளநீர் திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். பின்பு பட்டத்தரசி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதனைத் தொடர்ந்து அத்தனூர் அம்மன், மாரியம்மன் ஆகிய தெய்வ ங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

    இதல் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.1.37 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    பெருந்துறை:

    பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

    பெருந்து றை சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3,750 மூட்டைகளில் 1,81,000 கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முதல் தரக் கொப்பரை குறைந்த பட்சமாக கிலோ, ரூ.73.89-க்கும், அதிகபட்சமாக ரூ.80.89-க்கும் விற்பனையாயின.

    இரண்டாம் தரக் கொப்பரை குறைந்த பட்சமாக ரூ.31-க்கும், அதிகபட்ச மாக ரூ.78.99-க்கும் விற்பனையாயின.

    மொத்தம் ரூ.1.37 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    • லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சுந்தரபாண்டியன் என்பவரை போலீசார் பிடித்தனர்.
    • அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சேலம் மாவட்டம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த ரங்கநாதன் மகன் சுந்தரபாண்டியன் (வயது 43) என்பவரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.2 ஆயிரத்து 30 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×