search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 youths arrested for"

    • போதை மாத்திரைகளாக விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.
    • இதையடுத்து வசந்த், கவுதம், அமீர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஈ.பி.பி. நகரில் போதை மாத்திரை விற்ப னை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தக வல் கிடைத்தது. தகவலின் பேரில் ஈரோடு மதுவிலக்கு போலீ சார் அப்பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது ஈ.பி.பி. நகர் நால்ரோடு பகுதியில் சந்தேகப்படும்படியாக 3 வாலிபர்கள் நின்று கொ ண்டிருந்தனர். இதையடுத்து அந்த வாலிபர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் ஈரோடு மாணிக்க ம்பாளையத்தை வசந்த் (26), தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கவுதம்(26), ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த அமீர் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்றி போதை மாத்திரைகளாக விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து வசந்த், கவுதம், அமீர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 420 வலி நிவாரண மாத்திரைகளையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சம்பவத்தன்று தகர கொட்டகையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள கட்டுமான எந்திரங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கட்டுமான எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூளை பூசாரி தோட்டத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (45). கட்டிட கான்டிராக்டர்.

    இந்நிலையில் மகேந்திரன் பூசாரி தோட்டத்தில் அவர் வேலை செய்யும் புதிய கட்டிடத்திற்கு அருகில் தகர கொட்டகையில் கட்டிட வேலைக்கு தேவையான டிரிலிங் மிஷின், மர கட்டிங் மிஷின், இரும்பு கட்டிங் மிஷின், கிரேன் மிஷின் ஆகியவை வைத்திருந்தார்.

    சம்பவத்தன்று தகர கொட்டகையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள கட்டுமான எந்திரங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இது குறித்து மகேந்திரன் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மாணிக்கம்பாளையம் தெற்கு வீதியை சேர்ந்த யுவராஜ் (22), பெரியவலசு திலகர் வீதியை சேர்ந்த பாஸ்கர் (25), மாணிக்கம் பாளையம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த வசந்த் (26) ஆகியோர் திருடியது கண்டுபிடிக்கப் பட்டது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கட்டுமான எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

    ×