என் மலர்
ஈரோடு
- லோகநாதன் எல்லக்கடையில் உள்ள கீழ்பவானி கிளை வாய்க்காலில் பிணமாக கிடந்தார்.
- இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் அவலூர் காலனியை சேர்ந்தவர் லோ கநாதன் (45). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக தனது மனைவி பழனியம்மாளிடம் (36) கூறி விட்டு சென்றார்.
ஆனால் அவர் மீண்டும் வீட்டுக்கு வர வில்லை. இந்த நிலையில் லோகநாதன் எல்லக்கடையில் உள்ள கீழ்பவானி கிளை வாய்க்காலில் பிணமாக கிடந்தார். இது குறித்து அவரது உறவினர் பழனியம்மாளுக்கு போனில் தகவல் கொடுத்தார்.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பழனியம்மாள் கீழ்பவா னிகிளை வாய்க்காலில் இறந்து கிடப்பது தனது கணவர் லோகநாதன் தான் என்பதை உறுதி செய்தார்.
இது குறித்து சிவகிரி போலீசுக்கு தகவல் கொடு த்தனர். இதையடுத்து போலீ சார் சம்பவ இடத்துக்கு வந்து லோகநாதனின் உடலை மீட்டு பெருந்துறை மருத்துவகல்லூரி மருத்துவ மனைக்கு பிரேதபரி சோத னைக்காக அனுப்பி வைத்த னர்.
இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 6 கட்டிடங்கள் முடியும் நிலையில் உள்ளன.
- 39 கட்டிடத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்கு கின்றன. சில மற்றும் வாடகை கட்டத்தில் இயங்குகின்றன. சில கட்டிடங்கள் கட்டி பல ஆண்டுகள் ஆவதால் பழுதாகி உள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, 6 கட்டிடங்கள் முடியும் நிலையில் உள்ளன.
39 கட்டிடத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும். இவை 15-ம் நிதி கமிஷன் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படுகின்றன. கடம்பூரில் 2 குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்க உள்ளது. ஓசூரில் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மலைப்பகுதியில் சேசன் நகர், தாளவாடியில் துணை சுகாதார நிலையம் குடியிருப்புடன் அமைய உள்ளது.
இப்பணிகள் நிறை வடையும்போது மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப துணை சுகாதார நிலையங்களும் சொந்த கட்டிடத்தில் செயல்படும் என ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
- 3 சாய தொழிற்சாலைகள் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியதை அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு கண்டுபிடித்தனர்.
- ரசாயன தொழிற்சாலையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
சிப்காட்டில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவுநீரால் பாலத்தொழு குளம் மாசடைவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் பெறப்பட்டதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகம் 3 அதிகாரிகளை கொண்ட சிறப்புக்குழு மூலம் கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 3 சாய தொழிற்சாலைகள் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியதை அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு கண்டுபிடித்தனர். இதையடுத்து இந்த 3 சாய தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டு அந்த 3 தொழிற்சாலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இதேபோல் சிப்காட்டில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலை கழிவு நீரை தொழிற்சாலை வளாகத்திற்கு வெளியே வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த ரசாயன தொழிற்சாலையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
சிப்காட் வளாகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தங்களின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் மற்றும் காற்று மாசு தடுப்பு சாதனங்களை முறையாகவும், தொடர்ச்சியாகவும் இயக்கி சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும்.
அனைத்து தொழிற்சாலைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தவறு இழைக்கும் தொழிற்சாலை மீது சட்டரீதியாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை விற்பனைக்கான ஏலம் நடந்தது.
- மொத்தம் ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்து 223-க்கு விற்பனையானது.
கொடுமுடி:
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை விற்பனைக்கான ஏலம் நடந்தது.
இதில் 7 ஆயிரத்து 844 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காய் விற்பனையானது.
விற்பனையா நிலக்கடலைக்காய் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.61.17 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.84.10 காசுகள், சராசரி விலையாக ரூ.80.40 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்து 223-க்கு விற்பனையானது.
- சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற நாளை செயல்படுத்தப்பட உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
சென்னிமலை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழக பெருந்துறை செயற்பொறியாளர் பி.வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற நாளை (வியாழக்கிழமை) செயல்படுத்தப்பட உள்ளதால் சென்னிமலை டவுன் பகுதி முழுவதும்,
பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்திநகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மா பாளையம்.
அசோகபுரம், புதுப்பாளையம், ராமலி ங்கபுரம், ஒரத்துப்பாளை யம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலை பாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவபட்டி, முருங்கத்தெ ாழுவு, எம்.பி.என்.நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
- ஈரோடு மாநகர பகுதியில் மாலை சாரல் மழை பெய்தது.
- மொடக்குறிச்சி பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
அதைத் தொடர்ந்து மாலை நேரத்தில் வானில் கருமே கங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு மாநகர பகுதியில் மாலை சாரல் மழை பெய்தது.
மொடக்குறிச்சி பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. மாவட்ட த்தில் இங்கு அதிகபட்சமாக 54 மில்லி மீட்டர் அதாவது 5 செ.மீ். மழை பதிவானது.
இதை போல் சென்னி மலை மற்றும் அதன் சுற்றுவ ட்டார பகுதிகளிலும் இடியு டன் கூடிய கனமழை பெய்தது. நம்பியூர், கொடிவேரிஅணை, சத்தியமங்கலம், பெருந்துறை, கொடுமுடி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வைத்தாலும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஈரோட்டில் நேற்று இரவு மழை அளவு மில்லி மீட்ட ரில் வருமாறு:- மொடக்கு றிச்சி-54, சென்னி மலை-42, நம்பியூர்-24, கொடி வேரி அணை-17.20, சத்திய மங்கலம்-11, பெரு ந்துறை-3, கொடுமுடி-2.40.
- பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க அரசு திட்டமிப்பட்டுள்ளது.
- 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
பள்ளிகளில் மரக்க ன்றுகள் நடுதல், மூலிகை தோட்டங்கள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைக ளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பா ண்டில் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் பள்ளிகல்வி த்துறை சார்பில் இந்தாண்டு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 லட்சம் மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மாணவர்க ளுக்கு இயற்கை மீதான பற்றினை உருவாக்கவும், மூலிகை தாவரங்கள் குறி த்தும், அதன் பயன்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் மூலிகை தாவரத்தின் பெயர், பயன்கள், அவற்றை பராமரிக்கும் முறைகளை எடுத்துக்கூறும் வகையில் பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க அரசு திட்டமிப்பட்டுள்ளது.
தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அமைக்கப்படும் இந்த மூலிகை தோட்டத்தை தொண்டு சம்மந்தப்பட்ட தொண்டு நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்து பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளது.
12 சென்ட் காலி இடம், சுற்றுச்சுவர் வசதி, தண்ணீர் வசதி உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகள் மூலிகை தோ ட்டம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பள்ளி வளாகத்தில் காலி இடம் இல்லாவிட்டாலும், மாடியில் இடமிருந்தாலும் மூலிகை தோட்டம் அமைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 46 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பெருந்துறை, சென்னிமலை, பர்கூர், வெள்ளி திருப்பூர், கடத்தூர், சத்தியமங்கலம், பங்களாபுதூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியை சேர்ந்த வீரபத்திரன் மகன் சுரேஷ்கு மார் (வயது 41),
கருங்கல்பாளையம் மரப்பாளையம் சாலையை சேர்ந்த சம்பத் மகன் சக்திவேல் (44), சென்னிமலை ஆறுமுகம் மகன் நாகராஜ் (59), பர்கூர் ராஜா (33),
அந்தியூர் மாணிக்கம் மகன் பிரபு (41), மங்களாபுரம் சுந்தரம் மகன் சதீஷ் என்ற சுரேஷ் (40), சத்தியமங்கலம் சொர்ணம் மகன் பாலு (55), பாரதி நகர் மினியல் (60), டி.என்.பா ளையம் செல்வன் மனைவி ஈஸ்வரி (45) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.
பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 46 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
- அணையில் இருந்து 2,950 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.12 அடியாக உள்ளது.
நேற்று அணைக்கு வினாடி 4,487 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் மழைப்பொழிவு இல்லாததால் இன்று 711 கனஅடி வீதமாக குறைந்து வருகிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 550 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,950 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.77 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 12.95 அடியா கவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.19 அடியாகவும் உள்ளது.
- மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
- வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட நிர்வா கம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வரும் 30-ந் தேதி ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். இவ்வேலை வாய்ப்பு முகா மில் 200-க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலை அளிப்பவர்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்களுக்கு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.
8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறி யியல் பட்டம் படித்தவர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், செவிலியர், மருந்தாளுநர் பயிற்சி முடித்தவர்கள் என அனை த்து கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களு க்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டு தல்கள் ஆகியன மேற்கொ ள்ளப்பட உள்ளது.
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலை வாய்ப்பு முகாம், வேலை நாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.
எனவே ஈரோடு மாவட்ட த்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடை யுமாறும்,
இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணிய மர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.
மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0424-2275860, 94990 55942 மின்னஞ்சல்முகவரி: erodemegajobfair@gmail.com வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
- ஆற்றில் இறங்கி சிலையை கரைக்கும் பொழுது சங்கரநாராயணன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தி யூர் பொதியமூப்பனூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 52). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் சங்கரநாராயணன் (20) அந்தப் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று விநாயகர் சிலை கரைப்பதற்காக தனது நண்பர்களுடன் ஆப்பக்கூடல் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றிற்கு சென்றனர்.
ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்துள்ளது. ஆற்றில் இறங்கி சிலையை கரைக்கும் பொழுது சங்கரநாராயணன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் தேடிப் பார்த்தனர். ஆனால் சங்கரநாராயணன் கிடைக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் இருந்து சிறிது தொலைவில் சங்க ரநாராயணன் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
பின்னர் இது குறித்து அவரது தந்தை பெரியசாமி கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்ப டையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மற்ற ஊழியர்களை வைத்து வங்கியின் கதவை இழுத்து மூடினர்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேகரை கைது செய்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடை வீதியில் செயல்பட்டு வரும் சத்தியமங்கலம் நகர கூட்டுறவு வங்கியில் வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு நகை கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று வங்கிக்கு வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த சேகர் (44) என்பவர் புதிதாக வங்கி கணக்கு தொடங்கி தங்க நகையை அடகு வைத்து நகை கடன் பெற வேண்டும் என வங்கி நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.
அவர் வைத்திருந்த நகைகளை மதிப்பீட்டாளர் மூர்த்தியிடம் கொடுத்த போது வங்கி கணக்கு தொடங்குவதற்காக கொடுக்கப்பட்ட பாஸ்போர்ட் புகைப்படத்தை பார்த்த வங்கி ஊழியர் மூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது.
வங்கி ஊழியர்களின் வாட்ஸ்-அப் குழுவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த எச்சரிக்கை செய்தியில் கரூரில் உள்ள கூட்டுறவு வங்கி கிளையில் போலி நகையை அடகு வைத்து நகைக்கடன் பெற வந்த நபர் போலி நகையை கொடுத்தபோது வங்கி ஊழியர்கள் அந்த நபரை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடியதாகவும், இந்த நபர் வேறு எங்கேயாவது வங்கி கிளைக்கு சென்று அடகு வைத்து கடன் பெற முயற்சி செய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்த நபரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் பதிவிட்டதை கவனத்தில் வைத்திருந்த வங்கி ஊழியர்கள், வாட்ஸ்-அப் குழுவில் இருக்கும் புகைப்படமும் இந்த நபரும் ஒரே நபர் தான் என்பதை கண்டுபிடித்தனர்.
உடனடியாக மற்ற ஊழியர்களை வைத்து வங்கியின் கதவை இழுத்து மூடினர். பின்னர் சேகரை தப்பி ஓடாதவாறு பிடித்துக்கொண்டனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேகரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 42 பவுன் எடையுள்ள போலி நகைகள், போலி ஆதார் கார்டு, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் பல்வேறு இடங்களில் இதேபோன்று கைவரிசை காட்டியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் சேகர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.






