என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
    • அணையில் இருந்து 2,950 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.12 அடியாக உள்ளது.

    நேற்று அணைக்கு வினாடி 4,487 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் மழைப்பொழிவு இல்லாததால் இன்று 711 கனஅடி வீதமாக குறைந்து வருகிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 550 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,950 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.77 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 12.95 அடியா கவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.19 அடியாகவும் உள்ளது.

    • மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட நிர்வா கம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வரும் 30-ந் தேதி ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். இவ்வேலை வாய்ப்பு முகா மில் 200-க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலை அளிப்பவர்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்களுக்கு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

    8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறி யியல் பட்டம் படித்தவர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், செவிலியர், மருந்தாளுநர் பயிற்சி முடித்தவர்கள் என அனை த்து கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களு க்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டு தல்கள் ஆகியன மேற்கொ ள்ளப்பட உள்ளது.

    வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலை வாய்ப்பு முகாம், வேலை நாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    எனவே ஈரோடு மாவட்ட த்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடை யுமாறும்,

    இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணிய மர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.

    மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0424-2275860, 94990 55942 மின்னஞ்சல்முகவரி: erodemegajobfair@gmail.com வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

    • ஆற்றில் இறங்கி சிலையை கரைக்கும் பொழுது சங்கரநாராயணன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தி யூர் பொதியமூப்பனூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 52). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் சங்கரநாராயணன் (20) அந்தப் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று விநாயகர் சிலை கரைப்பதற்காக தனது நண்பர்களுடன் ஆப்பக்கூடல் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றிற்கு சென்றனர்.

    ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்துள்ளது. ஆற்றில் இறங்கி சிலையை கரைக்கும் பொழுது சங்கரநாராயணன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.

    பின்னர் அங்கிருந்தவர்கள் தேடிப் பார்த்தனர். ஆனால் சங்கரநாராயணன் கிடைக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் இருந்து சிறிது தொலைவில் சங்க ரநாராயணன் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    பின்னர் இது குறித்து அவரது தந்தை பெரியசாமி கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்ப டையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மற்ற ஊழியர்களை வைத்து வங்கியின் கதவை இழுத்து மூடினர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேகரை கைது செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடை வீதியில் செயல்பட்டு வரும் சத்தியமங்கலம் நகர கூட்டுறவு வங்கியில் வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு நகை கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று வங்கிக்கு வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த சேகர் (44) என்பவர் புதிதாக வங்கி கணக்கு தொடங்கி தங்க நகையை அடகு வைத்து நகை கடன் பெற வேண்டும் என வங்கி நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.

    அவர் வைத்திருந்த நகைகளை மதிப்பீட்டாளர் மூர்த்தியிடம் கொடுத்த போது வங்கி கணக்கு தொடங்குவதற்காக கொடுக்கப்பட்ட பாஸ்போர்ட் புகைப்படத்தை பார்த்த வங்கி ஊழியர் மூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    வங்கி ஊழியர்களின் வாட்ஸ்-அப் குழுவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த எச்சரிக்கை செய்தியில் கரூரில் உள்ள கூட்டுறவு வங்கி கிளையில் போலி நகையை அடகு வைத்து நகைக்கடன் பெற வந்த நபர் போலி நகையை கொடுத்தபோது வங்கி ஊழியர்கள் அந்த நபரை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடியதாகவும், இந்த நபர் வேறு எங்கேயாவது வங்கி கிளைக்கு சென்று அடகு வைத்து கடன் பெற முயற்சி செய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்த நபரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் பதிவிட்டதை கவனத்தில் வைத்திருந்த வங்கி ஊழியர்கள், வாட்ஸ்-அப் குழுவில் இருக்கும் புகைப்படமும் இந்த நபரும் ஒரே நபர் தான் என்பதை கண்டுபிடித்தனர்.

    உடனடியாக மற்ற ஊழியர்களை வைத்து வங்கியின் கதவை இழுத்து மூடினர். பின்னர் சேகரை தப்பி ஓடாதவாறு பிடித்துக்கொண்டனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேகரை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து 42 பவுன் எடையுள்ள போலி நகைகள், போலி ஆதார் கார்டு, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் பல்வேறு இடங்களில் இதேபோன்று கைவரிசை காட்டியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் சேகர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 12 கிலோ காலாவதியான சிக்கன் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி தனது குடும்பத்தி னருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாமக்கலில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சவர்மா மற்றும் துரித உணவு வாங்கி சாப்பிட்டு உள்ளார். இதில் அந்த மாணவி பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் ஆய்வு செய்ய வேண்டும் என சுகாதார த்துறையினர் அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி இருந்தனர்.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையில் அலுவலர்கள் செல்வன், அருண்குமார் தலைமையில் குழுவினர் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஓட்டலில் சிக்கன், நூடுல்ஸ் உள்பட பல்வேறு உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. உணவு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டதில் 12 கிலோ காலாவதியான சிக்கன் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த 12 கிலோ சிக்கனை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பினாயில் ஊற்றி அழித்தனர்.

    இதைத்தொடர்ந்து மற்ற ஓட்டல்களிலும் ஆய்வு செய்யப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தெரிவித்தார்.

    • மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • அணையின் நீர்மட்டம் 74.58 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்ப ட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.58 அடியாக உள்ளது. நேற்று அணைக்கு வினாடி 1,534 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 4,887 கனடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. காளிங்க ராயன் பாசனத்திற்கு 550 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,950 கனஅடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது. 

    • வீட்டின் மேல் கூரைகள் அனைத்தும் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் அணைத்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் கூனக்கா பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது வீடு கூரை வீடு ஆகும். இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தார்கள். பின்னர் அதிகாலை நேரம் வீட்டில் புகை வருவதை கண்ட அனைவரும் எழுந்து வீட்டின் வெளியே வந்தனர்.

    அப்போது வீட்டின் மேல் கூரைகள் அனைத்தும் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியோடு தீயை அணைக்க முயற்சி த்தனர். இருப்பிடம் மள மள என கூரை வீடு என்பதால் பற்றி கொண்டது.

    விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் அணைத்தனர்.

    ஆனால் அதற்குள் வீடு முற்றிலும் தீயில் கருகி சேதமானது. இதில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள், ஆதார் கார்டு, பள்ளி, வீட்டு பத்திரங்கள், சான்றிதழ்கள் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமானது.

    முதற்கட்ட விசாரணை யில் மின் கசிவின் காரண மாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு நிலைய அலுவ லர்கள் தெரிவித்தனர்.

    • நிதி நிறுவனத்தின் கதவை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உரிமையாளர் அதிர்ச்சி அடந்தார்.
    • ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளையடிக்கபட்டது தெரிய வந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று ப்பகுதிகளில் அதிக அள வில் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான நிறுவன ங்கள் காலை 9 மணிக்கு திறக்கப்படுகிறது.

    இதை யடுத்து மதியம் 2 மணிக்கு உணவு இடை வேளைக்காக அடைக்கப்பட்டு மீண்டும் மதியம் 3 மணிக்கு திறப்பது வழ க்கம். ஒரு சில நிறுவனங்கள் கதவு மட்டும் அடைக்கப்படு வது வழக்கம்.

    நிறுவனங்கள் காலையில் பணம் வசூல் செய்யப்பட்டு அந்த பணம் நிறுவனங்களில் உரிமையாளர்கள் அப்படியே வைத்து விட்டு உணவு இடைவேளைக்காக வீட்டிற்கு சென்று விடுகின்றார்கள்.

    இதை மர்ம கும்பல் நோட்டமிட்டு வரு கிறார்கள். இதனை பயன்படுத்தி கொள்ளையர்கள் முன் கதவை கம்பியால் பெயர்த்து உள்ளே சென்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் தொகையினை திருடி செல்வதாக அவர்கள் புகார் கூறி வருகிார்கள்.

    இந்த நிலையில் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் ஒரு நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மதியம் பூட்டி விட்டு சென்றனர்.

    இதையடுத்து அவர்கள் மதியம் 3 மணி அளவில் வந்து பார்த்தனர். அப்போது அந்த நிறுவனத்தின் முன் கதவை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் அதிர்ச்சி அடந்தார்.

    இதையடுத்து அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளையடிக்கபட்டது தெரிய வந்தது.

    இது குறித்து நிதி நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயராமன் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் சப்- இன்ஸ்பெ க்டர் கார்த்தி மற்றும் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளி களை தேடி வருகின்றார்கள.

    அதே போல் கடந்த 1 மாதத்திற்கு முன்பு அந்தியூர் பவானி ரோட்டில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் மதிய உணவுக்கு சென்ற சமயத்தில் கொள்ளையர்கள் அந்த நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

    இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றர்கள். இது குறித்து புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர் பகுதியில் மதியம் நேரத்தில் கடையை பூட்டி விட்டு செல்லும் நேரத்தில் மர்ம ஆசாமிகள் இதை நோட்டமிட்டு தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் அந்த பகுதி நிறு வனங்கள் மற்றும் கடை காரர்கள் இந்த திருட்டு சம்பவத்தால் ஒரு வித அச்சத்தோடு இருந்து வருகிறார்கள்.

    எனவே அந்தியூர் பகுதி யில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி போலீசார் கண்காணிக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • போதை மாத்திரைகளாக விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.
    • இதையடுத்து வசந்த், கவுதம், அமீர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஈ.பி.பி. நகரில் போதை மாத்திரை விற்ப னை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தக வல் கிடைத்தது. தகவலின் பேரில் ஈரோடு மதுவிலக்கு போலீ சார் அப்பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது ஈ.பி.பி. நகர் நால்ரோடு பகுதியில் சந்தேகப்படும்படியாக 3 வாலிபர்கள் நின்று கொ ண்டிருந்தனர். இதையடுத்து அந்த வாலிபர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் ஈரோடு மாணிக்க ம்பாளையத்தை வசந்த் (26), தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கவுதம்(26), ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த அமீர் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்றி போதை மாத்திரைகளாக விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து வசந்த், கவுதம், அமீர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 420 வலி நிவாரண மாத்திரைகளையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்ப வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
    • பாலசுந்தரம் இது குறித்து சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

    சென்னிமலை:

    சேலம் மாவட்டம் காவேரிப்பட்டி கிராமம், செட்டிப்பட்டியை சேர்ந்தவர் பால சுந்தரம் (27). இவர் சென்னி மலை அருகே ஈங்கூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக வேலை பார்த்து வருகிறார்.

    பாலசுந்தரம் கடந்த 12-ந் தேதி மாலை நண்பர் ஒருவ ருடன் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மலை மேல் உள்ள முருகன் கோவி லுக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

    அங்கு வாகனங்கள் நிறு த்தும் இடத்தில் தனது மோட்டார் சைக்கிளை சைடு லாக் செய்து நிறுத்தி விட்டு கோவிலுக்குள் சாமி கும்பிட சென்றுள்ளார்.

    பின்னர் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்ப வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் பாலசுந்தரம் இது குறித்து சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • மொத்தம் ரூ.35 லட்சத்து 29 ஆயிரத்து 762-க்கு விற்பனையானது.

    எழுமாத்தூர்:

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.

    இதில் 991 மூட்டைகள் கொண்ட 47 ஆயிரத்து 206 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முதல்தர தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.75.09 காசுகள், அதிகபட்சவிலையாக ரூ.79.49 காசுகள், சராசரி விலையாக ரூ.78.89 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம்தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.61.85 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.72.45 காசுகள், சராசரி விலையாக ரூ.70.60 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.35 லட்சத்து 29 ஆயிரத்து 762-க்கு விற்பனையானது.

    • உழவர் சந்தைகளில் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
    • காய்கறிகள் ரூ.17 லட்சத்து 2 ஆயிரத்து122-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    தமிழ் மாதம் புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதத்தில் இந்துக்கள் பெரும்பாலா னோர் அசைவ உணவு வகைகளை தவிர்த்து சைவ உணவுகளை உண்பது வழக்கம். இதனால் இந்த மாதத்தில் காய்கறிகளின் தேவை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் புரட்டாசி மாத பிறப்பையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் அதிக அளவில் காய்கறி களை விற்பனைக்கு கொ ண்டு வந்திருந்தனர்.

    அனை த்து உழவர் சந்தைகளிலும் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காய்கறிகளை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    ஈரோடு மாநகரில் உள்ள சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 22.58 டன் காய்கறிகள் ரூ.6 லட்சத்து 78 ஆயிரத்து 865-க்கு விற்பனையானது.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் மொத்தம் வரத்தான 58.67 டன் காய்கறிகள் ரூ.17 லட்சத்து 2 ஆயிரத்து122-க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர். இன்றும் உழவர் சந்தைகளில் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

    ×