search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 cm in Modakurichi"

    • ஈரோடு மாநகர பகுதியில் மாலை சாரல் மழை பெய்தது.
    • மொடக்குறிச்சி பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    அதைத் தொடர்ந்து மாலை நேரத்தில் வானில் கருமே கங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு மாநகர பகுதியில் மாலை சாரல் மழை பெய்தது.

    மொடக்குறிச்சி பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. மாவட்ட த்தில் இங்கு அதிகபட்சமாக 54 மில்லி மீட்டர் அதாவது 5 செ.மீ். மழை பதிவானது.

    இதை போல் சென்னி மலை மற்றும் அதன் சுற்றுவ ட்டார பகுதிகளிலும் இடியு டன் கூடிய கனமழை பெய்தது. நம்பியூர், கொடிவேரிஅணை, சத்தியமங்கலம், பெருந்துறை, கொடுமுடி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வைத்தாலும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஈரோட்டில் நேற்று இரவு மழை அளவு மில்லி மீட்ட ரில் வருமாறு:- மொடக்கு றிச்சி-54, சென்னி மலை-42, நம்பியூர்-24, கொடி வேரி அணை-17.20, சத்திய மங்கலம்-11, பெரு ந்துறை-3, கொடுமுடி-2.40.

    ×