search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "to run 45 Primary Health Centers in"

    • ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 6 கட்டிடங்கள் முடியும் நிலையில் உள்ளன.
    • 39 கட்டிடத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்கு கின்றன. சில மற்றும் வாடகை கட்டத்தில் இயங்குகின்றன. சில கட்டிடங்கள் கட்டி பல ஆண்டுகள் ஆவதால் பழுதாகி உள்ளன.

    ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, 6 கட்டிடங்கள் முடியும் நிலையில் உள்ளன.

    39 கட்டிடத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும். இவை 15-ம் நிதி கமிஷன் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படுகின்றன. கடம்பூரில் 2 குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்க உள்ளது. ஓசூரில் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

    மலைப்பகுதியில் சேசன் நகர், தாளவாடியில் துணை சுகாதார நிலையம் குடியிருப்புடன் அமைய உள்ளது.

    இப்பணிகள் நிறை வடையும்போது மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப துணை சுகாதார நிலையங்களும் சொந்த கட்டிடத்தில் செயல்படும் என ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். 

    ×