என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறந்து கிடந்த தொழிலாளி"

    • லோகநாதன் எல்லக்கடையில் உள்ள கீழ்பவானி கிளை வாய்க்காலில் பிணமாக கிடந்தார்.
    • இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் அவலூர் காலனியை சேர்ந்தவர் லோ கநாதன் (45). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக தனது மனைவி பழனியம்மாளிடம் (36) கூறி விட்டு சென்றார்.

    ஆனால் அவர் மீண்டும் வீட்டுக்கு வர வில்லை. இந்த நிலையில் லோகநாதன் எல்லக்கடையில் உள்ள கீழ்பவானி கிளை வாய்க்காலில் பிணமாக கிடந்தார். இது குறித்து அவரது உறவினர் பழனியம்மாளுக்கு போனில் தகவல் கொடுத்தார்.

    இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பழனியம்மாள் கீழ்பவா னிகிளை வாய்க்காலில் இறந்து கிடப்பது தனது கணவர் லோகநாதன் தான் என்பதை உறுதி செய்தார்.

    இது குறித்து சிவகிரி போலீசுக்கு தகவல் கொடு த்தனர். இதையடுத்து போலீ சார் சம்பவ இடத்துக்கு வந்து லோகநாதனின் உடலை மீட்டு பெருந்துறை மருத்துவகல்லூரி மருத்துவ மனைக்கு பிரேதபரி சோத னைக்காக அனுப்பி வைத்த னர்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×