search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennimalai hill temple"

    • சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்ப வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
    • பாலசுந்தரம் இது குறித்து சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

    சென்னிமலை:

    சேலம் மாவட்டம் காவேரிப்பட்டி கிராமம், செட்டிப்பட்டியை சேர்ந்தவர் பால சுந்தரம் (27). இவர் சென்னி மலை அருகே ஈங்கூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக வேலை பார்த்து வருகிறார்.

    பாலசுந்தரம் கடந்த 12-ந் தேதி மாலை நண்பர் ஒருவ ருடன் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மலை மேல் உள்ள முருகன் கோவி லுக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

    அங்கு வாகனங்கள் நிறு த்தும் இடத்தில் தனது மோட்டார் சைக்கிளை சைடு லாக் செய்து நிறுத்தி விட்டு கோவிலுக்குள் சாமி கும்பிட சென்றுள்ளார்.

    பின்னர் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்ப வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் பாலசுந்தரம் இது குறித்து சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ×