என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • தமிழ்நாடு தனித்தன்மையான மாநிலம்.
    • தமிழன் என்று கூறுவதற்கு தாய்மொழி தமிழ் உள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பள்ளி, கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆர்.டி.இ. நிதி அதிக பங்கீடு மாநில அரசுதான் கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். 60:40 என்ற விகிதாசாரம் இருக்கும்போது மாநில அரசு எப்படி முழுமையாக நிதி கொடுக்க முடியும்?

    அவர் சொல்வது அரைகுறையாக கொடுத்து நிறுத்துங்கள் என்பது போல உள்ளது. ஆர்.டி.இ. ஆக்ட் என்பது உச்சநீதிமன்றத்தால் கொண்டு வரப்பட்டு மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏழை மாணவர்களும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் படிக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது. இதில் யாரும் தலையிட முடியாது. ஒரு அரசாங்கம் வருடம் தோறும் அதற்கான நிதியை மட்டுமே வெளியிட வேண்டும். ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்றம் சொல்வதையே கேட்காமல் உள்ளது. மாணவர்களின் நலன் கருதி உடனடியாக அந்த பணத்தை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். ஒரு வருடத்தில் 1 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் கல்வி பயின்று வருகின்றனர். மத்திய அரசின் செயல்பாடுகளால் அந்த இணையதளத்தையே திறக்க முடியாத நிலை உள்ளது.

    இந்தியாவில் எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்டதை தமிழகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவிக்கிறார். தமிழ்நாடு தனித்தன்மையான மாநிலம். இங்கு இரு மொழிக் கொள்கை போதுமானது. அண்ணா அந்த காலத்தில் இருந்தே கூறி வருகிறார். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை வைத்து நம் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். மத்திய அரசு சொல்வதைப் போல 3 மொழிகள் மட்டுமின்றி 22 ெமாழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என நாங்களும் கூறுகிறோம். ஆனால் அதில் கட்டாயம் இருக்கக்கூடாது. விருப்பத்தின் அடிப்படையில் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று விட்டு 3-வது மொழியில் தேர்ச்சி பெறவில்லை என்றால் மீண்டும் அதே வகுப்பில் படிக்க கூறுவது எந்தவிதத்தில் நியாயம்.

    2 இட்லி போதும் என்கிறோம். ஆனால் 3வது இட்லியை வாயில் திணித்தால் குழந்தைகள் வாந்திதான் எடுப்பார்கள். எங்களுக்கு தேவையென்றால் நாங்கள் படிக்கிறோம். எங்களுக்கு அறிவுதான் முக்கியம். உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் ஒரு செல்போன் போதுமானது. எந்த மொழியில் கேள்வி கேட்க வேண்டும் என்றாலும் கூகுள் மூலம் மொழி பெயர்ப்பு செய்து பூர்த்தி செய்து கொள்ளலாம். தமிழ் என்பது அடையாளம். ஆங்கிலம் என்பது வாய்ப்புகள். தமிழன் என்று கூறுவதற்கு தாய்மொழி தமிழ் உள்ளது.

    உலகம் முழுவதும் எனது கருத்தை கொண்டு செல்வதற்கு ஆங்கிலம் போதுமானதாக உள்ளது என நாங்கள் கூறுகிறோம். ஆனால் மத்திய அரசு 3-வது மொழி என கூறி ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க பார்க்கின்றனர். சமஸ்கிருதம் வந்தால் பிற்போக்கு சிந்தனைகள் வந்து விடும். புராண கதைகளை எடுத்து கூறி மாணவர்களை அறிவியல் சார்ந்து சிந்திக்க விடாமல் மழுங்கடிக்கும் பணிகளை அவர்கள் செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை விநாயகர் பூஜை நடைபெற்றது.
    • காலசந்தி பூஜை செய்யப்பட்டு காப்புக்கட்டு நிகழ்ச்சி நடந்தது.

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் இன்று தொடங்கியது. முன்னதாக கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டன.

    பின்னர் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் விநாயகர் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலசந்தி பூஜை செய்யப்பட்டு காப்புக்கட்டு நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது சிவன், நடராஜர், சிவகாமி அம்மன், சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை, வாகனங்கள் மற்றும்கோவில் யானை கஸ்தூரிக்கு காப்புக்கட்டு நடைபெற்றது.

    இதேபோல் பழனி மலைக் கோவிலில் உச்சிக்கால பூஜையில் விநாயகர், மூலவர், சின்னக்குமாரர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், நவவீரர்கள் ஆகிய தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது.

    முன்னதாக சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பூஜை முறைகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணி மற்றும் குருக்கள்கள் செய்தனர்.

    விழாவின் 10-நாளான 1-ம் தேதி பழனி முருகன் கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.

    பின்னர் மாலை 3 மணிக்கு பராசக்திவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அங்கிருந்து முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் சென்று, வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வருதல், அர்த்தஜாம பூஜை நடைபெறுகிறது.

    தொடர்ந்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.
    • காமராஜர் நீர்த்தேக்கம், எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல்,

    திண்டுக்கல்:

    செம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 22-ம் தேதி நடைபெற உள்ளது.

    எனவே செம்பட்டி, கோடாங்கிபட்டி, மொட்டம்பட்டி, காமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரபான்பட்டி, சேடப்பட்டி, ஆத்தூர், சித்தையன்கோட்டை, காமராஜர் நீர்த்தேக்கம், எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல்,

    கசவனம்பட்டி, அஞ்சுகம் காலனி, பாப்பனம்பட்டி, சமத்துவபுரம், பச்சமலையான்கோட்டை, நடுப்பட்டி, உத்தையகவுண்டன்பட்டி, அம்பாத்துரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என செம்பட்டி துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் லதா அறிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
    • அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, காப்பிளியப்பட்டி, நாகல்புதூர், பாரதிபுரம்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் புறநகர் பகுதியான பொன்னகரம் துணைமின்நிலையத்தில் நாளை (17-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழைக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, காப்பிளியப்பட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில் நிலைய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செற்பொறியாளர் பிரதீஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

    • பா.ஜ.க.வின் 2-வது பூத் கமிட்டி மாநாடு வருகிற 21-ந்தேதி திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.
    • இந்த கூட்டத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் தலைமை வகிக்கிறார்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. பிரதான ஆளும் கட்சியான தி.மு.க. கடந்த ஓராண்டுக்கு முன்பே தேர்தலுக்காக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை தொடங்கி இதில் பங்கேற்கும் கட்சியினர் ஆற்றவேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தது.

    அதேபோல் அ.தி.மு.க.வும் பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டை நடத்தி முடித்தது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதான கட்சியான பா.ஜ.க. சார்பிலும் முதலாவது பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு நெல்லையில் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த கூட்டத்தில் பங்கேற்று நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் 2-வது பூத் கமிட்டி மாநாடு வருகிற 21-ந்தேதி திண்டுக்கல்லில் நடைபெறுகிறது. திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாட்டை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் பணி தொடங்கி மாநாட்டு மேடை அமைக்கும் விறுவிறுப்பாக பணி நடைபெற்று வருகிறது.

    3 பாராளுமன்ற தொகுதிகள், 21 சட்டமன்ற தொகுதிகள், கட்சி ரீதியாக 6 மாவட்டங்களை உள்ளடக்கிய திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பூத்கமிட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வருகிற 21ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் தலைமை வகிக்கிறார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் வரவேற்புரையாற்றுகிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பொறுப்பாளர் சுதர்சனரெட்டி, தமிழக தேர்தல் பார்வையாளர் அரவிந்த்மேனன் ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் தேசிய, மாநில நிர்வாகிகள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விலகி விட்டனர். அவர்களை மீண்டும் கூட்டணியில் இணைக்க பா.ஜ.க. மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனிடையே அ.தி.மு.க.வில் இருந்து விலக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை ஏற்படுத்தினால்தான் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும் என தெரிவித்து வருகிறார். இதுபோன்ற சூழலில் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றவர்களையும் ஒன்றிணைந்த அ.தி.மு.க.வையும் ஏற்படுத்த தேசிய நிர்வாகிகளிடம் பா.ஜ.க. நிர்வாகிகள் சார்பில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏராளமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
    • நிலத்தில் இருந்த புதர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகன் பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தமிழகத்தில் அதிக அளவு பக்தர்கள் வரும் கோவில்களில் முதன்மையானதாக உள்ளது. மேலும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை பக்தர்களால் தானமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆன்மிக பெரியவர்கள் பலரும் பழனி கோவிலுக்கு பல்வேறு சொத்துக்களை தானமாக வழங்கி உள்ளனர்.

    இவற்றில் ஏராளமான விவசாய நிலங்கள் மற்றும் இடங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்தன. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 4 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏராளமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் பழனி பூங்கா ரோடு பகுதியில் கோவிலுடன் இணைந்த தண்டபாணி சுவாமி மடத்திற்கு பாத்தியப்பட்ட சுமார் 1.40 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. தற்போது அந்த நிலத்திற்கு பழனி கோவில் ஆணையரை தக்காராக நியமனம்செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் தண்டபாணி மடத்தின் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மடத்தை மீட்டனர்.

    தொடர்ந்து நிலத்தில் இருந்த புதர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது. இந்த இடத்தில் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்த ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோவில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டது பக்கதர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.
    • வன்னியர் சங்க அலுவலகத்துக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டு போட்டனர்.

    திண்டிவனத்தில் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. பா.ம.க. செயல் தலைவர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் டாக்டர் அன்புமணியை நீக்கி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார்.

    ஆனால், அன்புமணியை நீக்க ராமதாசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என அன்புமணி தரப்பை சேர்ந்த வக்கீல் பாலு கூறியுள்ளார். இதனால் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.

    விழுப்புரம்- திண்டிவனம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வன்னியர் சங்க அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வருகிற 17-ந் தேதி வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் டாக்டர் அன்புமணி கலந்து கொள்வதாகவும் இருந்தது.

    இதைத்தொடர்ந்து வன்னியர் சங்க அலுவலகத்துக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டு போட்டனர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் அன்புமணி ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். அவர்கள், வன்னியர் சங்க அலுவலகத்தை திறக்க கூறினர்.

    இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் திண்டிவனம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருதரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அங்கு மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க வன்னியர் சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 5 வரை மின் தடை செய்யப்படும்.
    • தாதன்கோட்டை, அழகர்நாயக்கன்பட்டி ஆகிய ஊர்களுக்கும் அதனைச் சார்ந்த தொழிற்சாலைகளும் மின் வினியோகம் இருக்காது

    தாடிக்கொம்பு:

    தாடிக்கொம்பு துணை மின்நிலையத்தில் நாளை (12-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிறகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளியப்பட்டி புதூர், முனியபிள்ளைப்பட்டி, கள்ளிப்பட்டி, அகரம், சுக்காம்பட்டி, சென்னம்பட்டி, உலகம்பட்டி, கொண்டசமுத்திரம்பட்டி, சில்வார்பட்டி, கன்னிமானூத்து, கோட்டூர்ஆவாரம்பட்டி, அழகுபட்டி, தெப்பக்குளத்துப்பட்டி, விட்டல்நாயக்கன்பட்டி, தாதன்கோட்டை, அழகர்நாயக்கன்பட்டி ஆகிய ஊர்களுக்கும் அதனைச் சார்ந்த தொழிற்சாலைகளும் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
    • 11, 12 ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெறும் நிலையில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு நடைபெறும் பள்ளுகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் முடிவெடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    11, 12 ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கிரகணம் நேரம் முடியும் வரை உலக்கை செங்குத்தாக நின்றது.
    • இன்று காலையில் நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்த பின் வழிபாடு நடத்தப்பட்டன.

    திண்டுக்கல்:

    இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் நேற்று இரவு தென்பட்டது. பூமி, சந்திரன், சூரியன் ஆகிய 3 கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் இந்த நிகழ்வு நேற்று இரவு 9.57 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை தென்பட்டது. பல்வேறு இடங்களில் இதனை தொலைநோக்கிகள் மூலம் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் மையத்தில் சந்திரகிரகணத்தை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் கடும் பனிமூட்டம் காரணமாக தென்படவில்லை. இதனால் அங்கு திரண்டிருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    திண்டுக்கல் மற்றும் வடமதுரை, அய்யலூர், எரியோடு உள்ளிட்ட பகுதிகளில் கிரகணத்தை முன்னிட்டு அரிய நிகழ்வை காண பொதுமக்கள் திரண்டனர். ஆனால் லேசான சாரல் மழை பெய்ததால் கிரகணம் தென்படவில்லை.

    பொதுவாக கிரகணம் ஏற்படும் சமயங்களில் உலக்கையை எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிறுத்தி சோதனை செய்வது வாடிக்கை. இதேபோல் திண்டுக்கல் நாகல்புதூர் 3-வது தெருவில் நாகரத்தினம் (73) என்ற மூதாட்டி கடந்த பல ஆண்டுகளாகவே இதனை பொதுமக்களிடம் செய்து காட்டி வருகிறார். அதேபோல் நேற்று இரவும் கிரகண நேரத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை வரவழைத்து உலக்கையை நிறுத்தி செய்து காட்டினார். கிரகணம் நேரம் முடியும் வரை அந்த உலக்கை செங்குத்தாக நின்றது.

    இதேபோல் எரியோடு அருகே உள்ள ஒரு விவசாயி தனது வீட்டில் உலக்கையை செங்குத்தாக நிறுத்தி வைத்து அப்பகுதி மக்களிடம் கிரகணத்தை உறுதி செய்தார். கிரகணத்தை வானில் பார்க்க முடியவில்லை என்றாலும் அதனை இவ்வாறாக உணர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வியப்படைந்தனர்.

    கிரகணத்தை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி, திண்டுக்கல் அபிராமி அம்மன், சவுந்தரராஜபெருமாள், நத்தம் மாரியம்மன் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் அனைத்தும் நேற்று மாலை மூடப்பட்டன. இன்று காலையில் நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்த பின் வழிபாடு நடத்தப்பட்டன.

    • மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
    • தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்து காட்டியவர் தேவர் பெருமகனார்.

    பசும்பொன் முத்துராமலிக்க தேவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

    மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசமி திண்டுக்கல்லில் உள்ள சின்னாளப்பட்டியில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்," மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிக்க தேவரின் பெயரை வைக்கவும் இபிஎஸ் வலியுறுத்துவோம்.

    தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்து காட்டியவர் தேவர் பெருமகனார்" என்றார்.

    • எடப்பாடி பழனிசமி திண்டுக்கல்லில் உள்ள சின்னாளப்பட்டியில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    திமுக அரசு ஏதாவது ஒரு நல்ல திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்திருக்கிறதா ? என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசமி திண்டுக்கல்லில் உள்ள சின்னாளப்பட்டியில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அப்போது பேசிய அவர், " ஆத்தூர் தொகுதிக்கு ஏதாவது ஒரு நலத்திட்டத்தை அமைச்சர் செய்திருக்கிறாரா?" என்றார்.

    ×