என் மலர்
தர்மபுரி
- கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1000 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தது.
- தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
ஒகேனக்கல்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
கர்நாடக மாநிலத்திலும், காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளிலும் கோடைமழை பெய்ததால் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லிலும் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1000 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை அளவு குறைந்ததால் இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் நீர்வரத்து சற்று சரிந்து வினாடிக்கு 500 கனஅடியாக குறைந்து வந்தது. நீர்வரத்து குறைவாக இருப்பினும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.
தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் பரிசல் நிலையத்தில் இருந்து ஊட்டமலை, ஐந்தருவி, அத்திமரத்துகடுவு ஆகிய பகுதி வரை பரிசலில் சென்று மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முதலைப் பண்ணை, தொங்கும் பாலம் ஆகிய பகுதிகளுக்கு சுற்றி பார்த்தனர். பின்னர் அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்தபோதிலும் பிலிகுண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
- கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது.
- போலீசார் டெம்போவில் இருந்த 760 கிலோ எடையுள்ள 68 மூட்டையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி பகுதியில் காரிமங்கலம் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வேகமாக சென்ற டெம்போவை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது அதிலிருந்து டிரைவர் உட்பட இரண்டு பேர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். போலீசார் துரத்திச் சென்று ஒருவரை பிடித்து விசாரித்ததில் கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கேத்மாரனஅள்ளி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 33) என தெரிய வந்தது.
மேலும் கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் டெம்போவில் இருந்த 760 கிலோ எடையுள்ள 68 மூட்டையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.
இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து டெம்போ மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து தப்பி ஓடிய கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கே என் புரா பகுதியைச் சேர்ந்த சஷாங் என்பவரை தேடி வருகின்றனர்.
- நீர்வரத்து குறைந்த போதிலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், பஸ் நிலையம், கடைவீதிகள், ஓட்டல்கள் கூட்டம் அலை மோதியது.
ஒகேனக்கல்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கன மழை காரணமாக ஒகே னக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
கர்நாடக மாநிலத்திலும், காவிரி கரையோர நீர் பிடி ப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் தமிழக-கர்நாடகா எல்லை பகுதி யான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இந்த நீர்வரத்தால் தரு மபுரி மாவட்டம் ஒகேனக் கல்லில் நீர்வரத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 3000 கனஅடியாக வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிபடியாக சரிந்து இன்று காலை நிலவரப்படி வினா டிக்கு 1500 கனஅடியாக குறைந்து வந்து கொண்டி ருக்கிறது.
நீர்வரத்து குறைந்த போதிலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து கொட்டியது.
நாளை முதல் பள்ளிகள் திறப்பாலும், கோடைவிடு முறை முடிவதாலும் ஒகேனக்கல்லில் இன்று அதிக ளவில் தங்களது குழந்தை களுடன் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் பரிசல் நிலை யத்தில் இருந்து ஊட்டமலை, ஐந்தருவி, அத்திமரத்துகடுவு ஆகிய பகுதி வரை பரிசலில் சென்று மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், பஸ் நிலையம், கடைவீதிகள், ஓட்டல்கள் கூட்டம் அலை மோதியது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக இருப்பதால் பிலிகுண் டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
- நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.
- கோடைவிடுமுறை நாளையுடன் முடிய இருப்பதாலும் ஒகேனக்கல்லில் இன்று அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஒகேனக்கல்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
கர்நாடக மாநிலத்திலும், காவிரி கரையோர நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இந்த நீர்வரத்தால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1000 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக நேற்று ஒகேனக்கல்லில் நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 2000 கனஅடியாக வந்தது. இந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி மேலும் அதிகரித்து 3000 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.
வருகிற 10-ந்தேதி பள்ளி திறப்பாலும், கோடைவிடுமுறை நாளையுடன் முடிய இருப்பதாலும் ஒகேனக்கல்லில் இன்று அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் பரிசல் நிலையத்தில் இருந்து ஊட்டமலை, ஐந்தருவி, அத்திமரத்துகடுவு ஆகிய பகுதி வரை பரிசலில் சென்று மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், பஸ் நிலையம், கடைவீதிகள், ஓட்டல்கள் கூட்டம் அலைமோதியது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் பிலிக்குண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
- நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.
- கோடைவிடுமுறை முடிய இன்னும் 2 நாட்கள் இருப்பதாலும் ஒகேனக்கல்லில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஒகேனக்கல்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
கர்நாடக மாநிலத்திலும், காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளிலும் கோடைடமழை பெய்து வருவதால் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இந்த நீர்வரத்தால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1000 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 2000 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.
வருகிற 10-ந்தேதி பள்ளி திறப்பாலும், கோடைவிடுமுறை முடிய இன்னும் 2 நாட்கள் இருப்பதாலும் ஒகேனக்கல்லில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் பரிசல் நிலையத்தில் இருந்து ஊட்டமலை, ஐந்தருவி, அத்திமரத்துகடுவு ஆகிய பகுதி வரை பரிசலில் சென்று மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முதலைப்பண்ணை, தொங்கும் பாலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்தனர். பின்னர் அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் பிலிக்குண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
- ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
- நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
கர்நாடக மாநிலத்திலும், காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளிலும் கோைடமழை பெய்து வருவதால் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
இந்த நீர்வரத்தால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் கடந்த 31-ந் தேதி நீர்வரத்து சற்று சரிந்து ஆயிரம் கனஅடியாக வந்தது. இந்த நீர்வரத்து இன்று 3-வது நாளாக தொடர்ந்து அதே அளவில் நீடித்து வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து குறைந்த போதிலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.

இன்று விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அவர்கள் பரிசல் நிலை யத்தில் இருந்து ஊட்டமலை, ஐந்தருவி, அத்திமரத்துகடுவு ஆகிய பகுதி வரை பரிசலில் சென்று மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முதலைப் பண்ணை, தொங்கும் பாலம் ஆகிய பகுதிகளுக்கு சுற்றி பார்த்தனர். பின்னர் அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிக ளில் குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால், ஓட்டல்கள், கடைவீதி, மீன்விற்பனை கடைகள் ஆகிய கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரண மாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறை வதும் இருப்பதால், பிலிக் குண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
- பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்டைகனை வாங்கவருகின்றனர்.
- ஆடுகள் விலை ரூ. 5 ஆயிரத்து 200 முதல் ரூ.9 ஆயிரத்து 500 வரையும், விற்பனையானது.
அரூர்:
அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை கால்நடைகள் சந்தை நடைபெற்று வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சிக்கு மாடு, நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்டைகனை வாங்கவருகின்றனர்
நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடுகள் ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 47 ஆயிரத்து 500 வரையும். ஆடுகள் விலை ரூ. 5 ஆயிரத்து 200 முதல் ரூ.9 ஆயிரத்து 500 வரையும், விற்பனையானது.
நேற்றைய சந்தையில் ரூ.40 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நேற்று நீர்வரத்து சற்று அதிகரித்து 3 ஆயிரம் கனஅடியாக வந்தது.
- ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் இருப்பதால், பிலிகுண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
கர்நாடக மாநிலத்திலும், காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளிலும் கோடைமழை பெய்து வருவதால் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இந்த நீர்வரத்தால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நேற்று நீர்வரத்து சற்று அதிகரித்து 3 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லில் நீர்வரத்து இன்றும் 3 ஆயிரம் கனஅடி அளவில் நீடித்து வந்து கொண்டிருக்கிறது. இதன்காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் இருப்பதால், பிலிகுண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
- சிறுவர்கள் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒகேனக்கல்:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன்-சவுந்தர்யா தம்பதியினர். இவருடைய மகன்கள் பவின் (வயது 10), சுதீப் (8) இவர்கள் 2 பேரும் ஊட்டமலை முனியப்பன் கோவில் அருகே உள்ள தடுப்பணை ஓடையில் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்ப்பட்டது. இதனால் அந்த பகுதியில் இருந்த பெரியபாறை விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுவர்கள் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே பவின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் சுஜித் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த சில நாட்களாக தமிழக, கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
- தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், நீர்வரத்து அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
ஒகேனக்கல்:
காவிரி ஆற்றில் கடந்த 6 மாத காலமாக கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து கடுமையாக சரிந்து வினாடிக்கு 200 கன அடியாக இருந்தது. மேலும் கடுமையான வெப்பம் வீசி வந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்றி வெறும் பாறைகளாக காட்சியளித்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை மழை பெய்ய தொடங்கியது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4 மாதங்களுக்கு பிறகு வினாடிக்கு 200 கன அடியில் இருந்து, வினாடிக்கு 3000 கன அடி வரை உயர்ந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக, கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தற்பொழுது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் வெறும் பாறைகளாக வறண்டு கிடந்த இடங்களில் தற்பொழுது தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், நீர்வரத்து அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதுடன், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. அதே போல் சுற்றுலா பயணிகளை நம்பி உள்ள தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தது.
- நாட்றம்பாளையம், ஊட்டமலை ஆகிய பகுதிகளில் சில தினங்களுக்குமுன்பு கோடைமழை வெளுத்து வாங்கியது.
ஒகேனக்கல்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தமிழக எல்லை பகுதியான பிழிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், நாட்றம்பாளையம், ஊட்டமலை ஆகிய பகுதிகளில் சில தினங்களுக்குமுன்பு கோடைமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சற்று சரிந்து வினாடிக்கு 1500 கனஅடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.
குறைந்த அளவில் நீர்வரத்து இருந்தபோதிலும், ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் இருப்பதால், பிலிக்குண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
- அகோர வீரபத்திரர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
- பூசாரி பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்தார்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மந்திகுளம்பட்டி கிராமத்தில் அகோர வீரபத்திரர் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து கோவில் முன்பு திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் அகோர வீரபத்திரர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. குரும்பர் இன மக்கள் சார்பில் நடந்த இந்த விழாவில் கோவில் முன்பு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்த ஏதுவாக வரிசையாக அமர வைக்கப்பட்டனர்.
பின்னர் பூசாரி பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்தார். பின்னர் பேய் பிசாசு உள்ளிட்ட கெட்ட ஆவிகள் அண்டியிருக்கும் நபர்களை கோவில் முன்பு நிறுத்தி கோவில் பூசாரி அவர்களை சாட்டையில் அடித்து கெட்ட ஆவிகளை விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தலையில் தேங்காய் உடைக்கும்போதும், சாட்டையடி வாங்கும்போதும் ஒரு பக்தருக்கு கூட ரத்தம் வந்தது கிடையாது என்றும், பக்தர்கள் தெரிவித்தனர்.






