என் மலர்
தர்மபுரி
- பொங்கல் விடுமுறையையொட்டி பூமாண்ட அள்ளி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்திருந்த சிறுமிக்கு இந்த சோகம் நேர்ந்துள்ளது.
- பக்கத்து வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, அங்கிருந்த நாட்டு வெடியை தெரியாமல் மிதித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே நாட்டு வெடி வெடித்து 6 வயது சிறுமி கவிநிலா உயிரிழந்துள்ளார்.
பொங்கல் விடுமுறையையொட்டி பூமாண்ட அள்ளி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்திருந்த சிறுமிக்கு இந்த சோகம் நேர்ந்துள்ளது.
பக்கத்து வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, அங்கிருந்த நாட்டு வெடியை தெரியாமல் மிதித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு வாங்கி மீதம் இருந்து நாட்டு வெடியை மாடியின் மீது வைத்திருந்த நிலையில் விபரீதம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 1500 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
- எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
ஒகேனக்கல்:
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வர்.
இதனிடையே தமிழக - கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 1500 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
பின்னர் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர். இளைஞர்கள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து மீன் குழம்புடன் உணவு உண்டு மகிழ்ந்தனர். சாலையோரம் இருந்த கடைகளில் பொறித்து வைத்த மீன்களையும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர்.
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
இதனால் மசாஜ் தொழிலாளர்கள், மீன் சமையலா்கள், பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
- பூபாலன் தன்னுடைய நண்பர்கள் 20 பேருடன் இருசக்கர வாகனத்தில் எஸ்.தாதம்பட்டி கிராமத்திற்கு சென்று அங்கிருந்த பொதுமக்களை சராமாரியாக தாக்கியுள்ளனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அரூர்:
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள எஸ்.தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அச்சுதன் (வயது26). இவர் தனியார் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு பாலகோட்டை எனும் கிராமத்தின் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு நாய்க்குத்தி கிராமத்தைச் சேர்ந்த தீர்த்தகிரி மகன் பூபாலன் (34) மற்றும் அவரது நண்பர்கள் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர்
அவர்கள் அச்சுதனை பார்த்து எதற்காக வேகமாக செல்கிறாய் என திட்டியதாகவும் அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் நாய்க்குத்தி கிராமத்தை சேர்ந்த பூபாலன் தன்னுடைய நண்பர்கள் 20 பேருடன் இருசக்கர வாகனத்தில் ஆயுதங்களுடன் எஸ்.தாதம்பட்டி கிராமத்திற்கு சென்று அங்கிருந்த பொதுமக்களை சராமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அச்சுதன் (26), தினேஷ் (25), வினோத் (27), ராகவன் (23) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அந்த கிராமத்தினர் திருப்பி தாக்க முற்பட்டபோது வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நாய்குத்தி கிராமத்தை சேர்ந்த பூபாலன், ரமேஷ் (24), ராஜ் குமார் (39), குமார் (41) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஏ.டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன், டி.எஸ்.பி. கரிகால்பாரிசங்கர் ஆகியோர் அங்கு விரைந்து நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மீண்டும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 15 வருடங்களாக சாலை வசதி இன்றி கிராம மக்கள் தவித்து வந்துள்ளனர்.
- 300-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒகேனக்கல்:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஈச்சம்பள்ளம், புதுப்பட்டி, எட்டிக்குழி, நெற்குந்தி, கருப்பயனூர், ஜீவா நகர் ஆகிய கிராமங்களில் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமங்களில் சுமார் 15 வருடங்களாக சாலை வசதி இன்றி கிராம மக்கள் தவித்து வந்துள்ளனர். மேலும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும் சாலை சரியில்லாததால் பிரசவ காலங்களில் மற்றும் உடல்நிலை சரியில்லாத நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் அழைத்தால் சாலை சரியில்லை என்றுகூறி இந்த வழித்தடத்தில் ஆம்புலன்ஸ் வருவதில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் பஸ்களும் சாலை சரியில்லாததால் போதிய பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொழுது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
எனவே சாலையை சீரமைத்து தர வேண்டி பலமுறை அரசு அதிகாரிக ளிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியும், கடந்த 15 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று ஈச்சம்பள்ளம் கிராம மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்படாத கிராம மக்கள் பின்பு பென்னாகரம் டி.எஸ்.பி. மகாலட்சுமி மற்றும் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவ லர், தாசில்தார் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி பிரதம மந்திரி சாலை திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததின் பெயரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
4 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
- விழாவின் முக்கிய நிகழ்வாக எருது விடும் விழா பல்வேறு கிராமங்களில் நடந்தது.
- மாடுகளை இழுத்து வந்தோர் மற்றும் வேடிக்கை பார்த்தோர் என 5 பேர் காயமடைந்தனர்.
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வாக எருது விடும் விழா பல்வேறு கிராமங்களில் நடந்தது.
இதில் காரிமங்கலம் அடுத்த ராமாபுரம் மண்டு பகுதியில் மாலை 3 மணி அளவில் எருது விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட எருதுகளை பொதுமக்கள் இளைஞர்கள் அலங்கரித்து இழுத்துச் சென்றனர்.
இதில் மாடுகள் அங்குமிங்குமாக இழுத்துச் சென்றபோது மாடு ஆக்ரோசமாக ஓடியதில் கெரகோடஅள்ளியை சேர்ந்த சுதர்சன் (வயது25), ராமாபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (30) ஆகியோர் மாடு முட்டியதில் வயிற்றில் பலத்த காயமடைந்து மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேபோல் மாடுகளை இழுத்து வந்தோர் மற்றும் வேடிக்கை பார்த்தோர் என 5 பேர் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து மாடு முட்டி காயமடைந்த சுதர்சன் மற்றும் சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக காரிமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சுதர்சனின் உடல் நிலை மோசமானதால், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதர்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்போது அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கும்பார அள்ளி ஊராட்சியில் நடந்த எருது விடும் நிகழ்ச்சியில் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்தது. ஊர் பெரியவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்த நிலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு எருது விடும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
காரிமங்கலம் ராமசாமி கோவிலில் இன்று மாலை எருது விடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- பரிசல் சவாரி செய்து காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர்.
- தீயணைப்பு துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஒகேனக்கல்:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 13-ந்தேதி போகி பண்டிகையுடன் தொடங்கியது. 14-ந்தேதி வாசல் பொங்கலும், 15-ந்தேதி மாட்டுப் பொங்கலும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான நேற்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் காணும் பொங்கல் விழாவையொட்டி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் இன்று சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
அவர்கள் முதலைப் பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து உணவு சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். தொங்கு பாலம், நடைபாதை ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பரிசல் சவாரி ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. உணவகங்கள், மீன் வறுவல் கடைகள், மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கிடையே பரிசல் சவாரி செய்து காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர்.
மேலும் சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலில் குவிந்ததால் பஸ் நிலையம் அஞ்செட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் மணல் தீட்டு ஆலம்பாடி மெயின் அருவி நடைபாதை மசாஜ் செய்யும் இடம் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தீயணைப்பு துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.
ஒகேனக்கல்:
தமிழக கர்நாடக மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு முற்றிலுமாக குறைந்ததன் காரணமாக தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வரை தொடர்ந்து வினாடிக்கு 1200 கன அடியாக நீர்வரத்து நீடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 1000 கன அடியாக சரிந்து வந்தது. இன்று காலை அதே அளவில் நீடித்து வருகிறது.
நீர்வரத்து குறைந்த போதிலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி சினி பால்ஸ், மெயின் அருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.
- குல வழக்கப்படி கோ பூஜை செய்து புனித நீர் காளைகளின் மேல் தெளித்த உடன் ஊர் கவுண்டர் காளை அவிழ்த்து விடப்பட்டது.
- சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்க ஏராளமான இளைஞர் போட்டி போட்டு காளையை விரட்டி சென்றனர்.
மாரண்டஅள்ளி:
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பெலமாரனஅள்ளி கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
முன்னதாக கிராம மக்கள் மேளதாளங்களுடன் குல வழக்கப்படி கோ பூஜை செய்து புனித நீர் காளைகளின் மேல் தெளித்த உடன் ஊர் கவுண்டர் காளை அவிழ்த்து விடப்பட்டது.
இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக திறந்து விடப்பட்டன.
சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்க ஏராளமான இளைஞர் போட்டி போட்டு காளையை விரட்டி சென்றனர்.
இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து கண்டு களித்தனர். விழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான மாரண்ட அள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து நேற்று 1500 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1,200 கனஅடியாக குறைந்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளி த்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் இந்த சந்தையில் குவிந்தனர்.
- ஆடுகள் எடைக்கேற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது.
மிகவும் பிரசித்தி பெற்ற இந்த வாரச்சந்தைக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மேட்டூர் மேச்சேரி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்கவும், விற்கவும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.
செவ்வாய்கிழமைகளில் நடக்கும் சந்தையில் அதிகாலை நேரத்தில் ஆடுகள் விற்பனை தொடங்கி காலை நேரத்திலேயே அனைத்து ஆடுகளும் விற்பனை ஆகிவிடும். இந்தநிலையில் பொங்கல் பண்டிகை இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் ஆடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இன்று அதிகாலை நல்லம்பள்ளியில் ஆட்டு சந்தை தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் இந்த சந்தையில் குவிந்தனர். இதேபோல் ஆடுகளை வாங்கவும் ஏராளமான வியாபாரிகள் சந்தையில் திரண்டனர். வியாபாரிகள் மற்றும் வீடுகளில் ஆடுகளை வளர்த்தவர்கள் என அனைவரும் விற்பனைக்காக ஆடுகளை அதிக அளவில் கொண்டு வந்திருந்தனர்.
ஆடுகள் எடைக்கேற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. சுமார் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றது. பண்டிகைக்கு ஆடுகள் விற்பனை சந்தையில் களை கட்டியது. அதிகாலையில் கடும் பனிப்பொழிவிலும் விறுவிறுப்பான விற்பனை நடைபெற்றது.
- நுரையீரலை பாதிக்கும் புது வகையான வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
- ஓசூரில், எந்த பாதிப்பும் கண்டறியப்பட வில்லை.
ஓசூர்:
சீனாவில் கண்டறியப்பட்டுள்ள எச்.எம்.பி.வி. என்ற நுரையீரலை பாதிக்கும் புது வகையான வைரஸ் தொற்று, கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த, 8 மாதம், 3 மாத குழந்தை என இருவருக்கு இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது.
அந்த குழந்தைகளுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எச்.எம்.பி.வி., வைரஸ் தொற்று, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு மிக அருகாமையிலுள்ள, தமிழக எல்லையான ஓசூரை சேர்ந்த மக்கள் பல ஆயிரம் பேர், பல்வேறு தேவைகளுக்காக தினமும் பெங்களூரு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூருவில் எச்.எம்.பி.வி., வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால், தமிழக எல்லையை உஷார்படுத்தி, ஓசூர் மாநகராட்சி நிர்வாகம், நோய் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, ஓசூர், மாநகர நல அலுவலர் அஜிதா கூறுகையில், ஓசூரில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் காய்ச்சலுக்கு வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்வோர் குறித்த விபரங்கள் பெறப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை ஓசூரில், எந்த பாதிப்பும் கண்டறியப்பட வில்லை என்றார்.
- தலைமை ஆசிரியை கலைச்செல்வி மீது புகார் எழுந்துள்ளது.
- அதியமான் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேலு வத்தல்மலை அரசு மேல் நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
தருமபுரி:
தருமபுரி நகரில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி நகரில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் தெரேசால், பணி ஓய்வு பெற்றதை அடுத்து கடந்த ஓராண்டுக்கு முன்பு கலைச்செல்வி, என்பவர் பாலக்கோடு மகளிர் அரசு பள்ளியில் இருந்து அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று கொண்டார்.
இந்த நிலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த இப்பள்ளி தகைச்சாள் பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு தற்காலிகமாக ஆசிரியர்களை நியமித்ததில் முறைகேடு நடந்ததாக தலைமை ஆசிரியை கலைச்செல்வி மீது புகார் எழுந்துள்ளது.
மேலும் அவர் மீது 50-க்கும் மேற்பட்ட பல்வேறு முறைகேடு புகார்களை தருமபுரிக்கு வந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் பெற்றோர்கள் புகார் மனு அளித்தனர். இதை அடுத்து கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர் மீது கூறப்பட்ட புகார் உண்மைதானா என விசாரணை நடத்தினர். இதில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.
இதை அடுத்து நேற்று முன்தினம் தலைமை ஆசிரியை கலைச்செல்வி காமலாபுரம் அரசு மேல்நிலை பள்ளிக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். அங்கிருந்த தலைமை ஆசிரியர் சுதா, அவ்வையார் அரசு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று முன்தினம் பொறுபேற்றார்.
இதே போல் தருமபுரி நகர் அதியமான் ஆண்கள் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டாக தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தங்கவேலு. இவர் பொறுப்பேற்ற பின்னர் பொதுத் தேர்வில் தேர்ச்சி குறைவு, போட்டி தேர்வுகளில் மாணவர்கள் ஒருவர் கூட வெற்றி பெறாதது, உயர்கல்வி அதிகாரிகளுடன் இணக்கமாக செயல்படாதது என பல்வேறு குற்றச்சாட்டுகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரால் கூறப்பட்டது.
நேற்று முன்தினம் அதியமான் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேலு வத்தல்மலை அரசு மேல் நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். வத்தல்மலையில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் காமராஜ் தருமபுரி டவுன் அதியமான் அரசு மேல்நிலை பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார்.
ஒரே நாளில் இரு மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டது கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.






