என் மலர்
நீங்கள் தேடியது "country explosion"
- பின்பக்க தகரம் பிரிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் திண்டிவனம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே கார் ஓர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல கடையை நேற்று இரவு மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றார். அவசர பணிக்காக இரவு 11 மணிக்கு ஓர்க்ஷாப்பை மீண்டும் திறந்தார். உள்ளே சென்ற பார்த்தபோது பின்பக்க தகரம் பிரிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், கல்லாவில் வைத்திருந்த ரூ.ஒரு லட்சத்து 75 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கபட்டிருந்தது. இது குறித்து திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
கொள்ளையர்கள் ஓர்க்ஷாப்பில் இருந்த காருக்கு அடியில் 2 மர்ம பொருளை வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனை கைப்பற்றிய போலீசார் அது நாட்டு வெடிகுண்டா அல்லது வேறு ஏதேனும் மர்ம பொருளா என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை யர்கள் ஆட்டோவில் வந்து கொள்ளையடித்து சென்றது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்க ப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- கோவிந்தன் மாடுகளை வயல்வெளிக்கு ஓட்டிச் சென்று மேய்த்து விட்டு மாலை வீட்டிற்கு மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தார்
- வெடி மருந்தினை பசுமாடு கடித்த உடன் வெடித்து வாய் சிதறி ரத்தம் கொட்டியது.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் கோவிந்தன்(55) இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் தனது மாடுகளை வயல்வெளிக்கு ஓட்டிச் சென்று மேய்த்து விட்டு மாலை வீட்டிற்கு மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தார். வரும் வழியில் ஒரு கரும்பு தோட்டத்தில் கரும்புகளை நாசம் செய்யும் காட்டு பன்றிகளை ஒழிப்பதற்காக வைத்திருந்த நாட்டு வெடி மருந்தினை பசுமாடு கடித்தது கடித்த உடன் வெடித்து வாய் சிதறி ரத்தம் கொட்டியது. பன்றிகளை கொல்ல வைத்த வெடியை மாடு கடித்த போது மாட்டின் வாய் சிதறி ரத்தம் கொட்டிய சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- குடிசை வீட்டில் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் தயாரிப்பது தெரியவந்தது.
- திரிநூல், நூல்கண்டு, 40 கிலோ அட்டை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் போலீசாருக்கு வந்தது. இதன் அடிப்படையில் சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமெக் தலைமையில், சீர்காழி மண்டல துணை வட்டாட்சியர் பாபு, சீர்காழி தீயணைப்பு அலுவலர் அலுவலர் ஜோதி, கொள்ளிடம் போலீஸார் ஆச்சாள்புரம் வள்ளுவர் தெருவிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் குடிசை வீட்டில் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் தயாரிப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிவகுமார் வீட்டில் நடத்திய சோதனையின் போது அங்கு சிவகுமாரின் மனைவி கலா (வயது 26) பழனிச்சாமி மனைவி இந்திரா(56), மச்சராஜ் மனைவி தனுஷ்(50) ஆகிய மூவரும் நாட்டு வெடிகளை தயாரித்து தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கொள்ளிடம் காவல்நி லையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொ ண்டனர்.
விசாரணையில் சிவகுமார் பணியாற்றும் பட்டாசு குடோனில் இருந்து வெடி மருந்தை எடுத்து வந்து கொடுத்து இவர்கள் மூவரும் சேர்ந்து பட்டாசு தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சிவகுமார் வீட்டில் இருந்த 4 கிலோ எடையுள்ள சல்பர், பொட்டு உப்பு, அலுமினிய பவுடர், வெடி மருந்து மற்றும் மைதா மாவு, மிக்ஸிங் கரித்துள், திரிநூல், நூல்கண்டு, 40 கிலோ அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சிவகுமாரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த வெடி மருந்தை தீயணைப்பு படை வீரர்கள் கைப்பற்றி கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் பாதுகாப்பாக செயல் இழக்க வைத்தனர். மேலும் இது தொடர்பாக வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்ழுகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அறையில் இருந்த வெடிகள் திடீரென வெடித்து சிதறின.
- அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு வெடிகள் தயாரித்துள்ளனர்.
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம், ஆட்டுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அபி (வயது28). இவருடைய மனைவி நாகவேணி (25). இவர்களுக்கு கவிநிலா (6) என்ற மகள் இருந்தாள். கணவன்-மனைவி இருவரும் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தனர்.
காரிமங்கலம் அருகே உள்ள பூமாண்டஅள்ளி கிராமத்தில் வசிக்கும் வள்ளி என்ற பெண்ணும், நாகவேணியுடன் பெங்களூருவில் வேலைபார்த்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் தோழிகளாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட வள்ளி தனது சொந்த கிராமமான பூமாண்டஅள்ளிக்கு சிறுமி கவிநிலாவை மட்டும் அவரது பெற்றோர் அனுமதியுடன் அழைத்து வந்துள்ளார். வள்ளியின் பக்கத்து வீட்டில் தர்மன் என்பவர் வசித்து வருகிறார்.
நேற்று மதியம் சிறுமி கவிநிலா வள்ளியிடம் கூறிவிட்டு தர்மன் வீட்டின் மொட்டை மாடிக்கு விளையாட சென்றாள். அந்த மொட்டை மாடியில் சிறிய அறை ஒன்று உள்ளது.
அந்த அறையில் நாட்டு வெடிகள் (கயிற்றால் சுற்றப்பட்ட குண்டு வெடிகள்) அங்கு வைத்திருந்தனர். இதனிடையே அந்த அறையில் இருந்த வெடிகள் திடீரென வெடித்து சிதறின. இதில் எதிர்பாராத விதமாக அந்த அறையின் ஒரு பக்க சுவர் கீழே இடிந்து விழுந்துள்ளது. மேலும் அந்த அறையும் இடிந்து சேதம் அடைந்தது.
அதே நேரத்தில் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமி கவிநிலாவும் தூக்கி வீசப்பட்டு உடல் துண்டு, துண்டாகி கருகிய நிலையில் பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மேலும் விபத்துக்கான காரணத்தை கண்டறிய தடயங்களையும் சேகரித்தனர். பின்னர் அவர்கள் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி உயிரிழந்த செய்தி பெங்களூருவில் வசித்து வரும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனே விரைந்து வந்து தனது மகள் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியதில் பன்றிகளை வேட்டையாட வெடி மருந்துகளை வாங்கிக் கொண்டு தர்மன், அவரது மருமகன் கிருஷ்ணன் ஆகிய 2 பேர் அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு வெடிகள் தயாரித்துள்ளனர்.
இதனால் தயாரித்த வெடிகளை காய வைத்து மொட்டை மாடியில் அறை யில் வைத்துள்ள போது எதிர்பாராதவிதமாக வெடி த்ததில் சிறுமி பலியாகி யுள்ளது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீ சார் வழக்குபதிவு செய்து வீட்டின் உரிமையாளர் தர்மன், அவரது மருமகன் கிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் வெடிக்காத நாட்டு வெடிகளை பறிமுதல் செய்தனர்.






