search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erudhu Vidum Vizhaa"

    • அனைத்து காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்பு அனுமதிக்கப்பட்டது.
    • பல்வேறு காளைகள் பந்தய இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்தது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம். வேலம்பட்டியில் எருது விடும் விழா நடைப்பெற்றது.

    திருப்பத்தூர், வாணியம்பாடி, கந்திலி, பர்கூர், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் 350-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

    பார்வையாளர்களின் பாதுகாப்புக்காக இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்பு அனுமதிக்கப்பட்டது. விழா தொடங்கியதும், காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக விடப்பட்டது.

    இதில் வீரர்கள் காளைகளை விரட்டி பிடிக்க முயறன்றனர். நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை கடந்த காளைக்கு பரிசு வழங்கப்பட்டன. பல்வேறு காளைகள் பந்தய இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்தது. விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எருதாட்ட விழாவை காண குவிந்தனர்.

    விழாவிற்கு நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தலைமையில் ஊர் கவுண்டர்கள் முன்னிலையில் வெற்றி பெற்ற காளையின் சொந்த காரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மாவட்ட நிர்வாக அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தக்கூடாது என கிராம நிர்வாக அலுவலர் கூறினார்.
    • அதிகாரி வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே உள்ளது அம்மனேரி. இங்கு மண்டு மாரியம்மன் கோவில் அருகில் அனுமதியின்றி எருது விடும் விழா நடைபெறுவதாக தகவல் அறிந்து கூலியம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் அங்கு சென்றார். அவர் மாவட்ட நிர்வாக அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தக்கூடாது என கூறினார்.

    அந்த நேரம் அங்கிருந்தவர்கள் எருது விடும் விழாவை நிறுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரி வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அதே ஊரை சேர்ந்த முனிராஜ் (39), உள்பட மொத்தம் 11 பேர் மீது வழக்குப்பபிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×