குட்டையில் விழுந்து இறந்த 3 வயது பெண் குழந்தை உடலை போலீசாருக்கு தெரியாமல் புதைப்பு

கிராம நிர்வாக அலுவலர் தினகரன் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சாமுவேலை தேடி வருகின்றனர்.
குட்டையில் விழுந்து இறந்த 3 வயது பெண் குழந்தை உடலை போலீசாருக்கு தெரியாமல் புதைப்பு
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி அடுத்த மண்ணூர் கிராமத்தைச் சார்ந்தவர் சாமுவேல்.

இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு ஆராதனா (வயது 3) என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆராதனா விவசாய நிலத்தில் வெட்டப்பட்டுள்ள சிறிய குட்டையில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனை கண்ட பெற்றோர்கள் குழந்தையின் சடலத்தை மீட்டு போலீசாருக்கு தெரியாமல் மாலை 6 மணிக்கு மேல் அடக்கம் செய்து விட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து சித்தேரி கிராம நிர்வாக அலுவலர் தினகரன் என்பவருக்கு கிடைத்த தகவலை அடுத்து கிராம நிர்வாக 1அலுவலர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று விசாரித்ததில் உண்மை என தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் தினகரன் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சாமுவேலை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com