குடியரசு தின விழா: தருமபுரி ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை

பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசின் உளவுத்துறை அறிவுறுத்தல்.போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குடியரசு தின விழா: தருமபுரி ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை
Published on

தருமபுரி:

நாடு முழுவதும் வருகிற 26ந் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசின் உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி தருமபுரி நகரம் மற்றும் புறநநகர் பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதையொட்டி தருமபுரி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று காலை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பேசஞ்சர் உள்ளிட்ட ரெயில்களில் சோதனை நடத்தினர்.

அப்போது ரெயில்நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகள் ரெயில் நிலைய நுழைவு வாயில், பார்சல் அலுவலகம், நடைமேடைகள் வாகனம் நிறுத்தும் இடங்கள் சோதனை செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com