இருதரப்பினரிடையே மோதலில் 5 பேர் படுகாயம்- 4 பேர் கைது

பூபாலன் தன்னுடைய நண்பர்கள் 20 பேருடன் இருசக்கர வாகனத்தில் எஸ்.தாதம்பட்டி கிராமத்திற்கு சென்று அங்கிருந்த பொதுமக்களை சராமாரியாக தாக்கியுள்ளனர்.போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இருதரப்பினரிடையே மோதலில் 5 பேர் படுகாயம்- 4 பேர் கைது
Published on

அரூர்:

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள எஸ்.தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அச்சுதன் (வயது26). இவர் தனியார் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு பாலகோட்டை எனும் கிராமத்தின் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு நாய்க்குத்தி கிராமத்தைச் சேர்ந்த தீர்த்தகிரி மகன் பூபாலன் (34) மற்றும் அவரது நண்பர்கள் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர்

அவர்கள் அச்சுதனை பார்த்து எதற்காக வேகமாக செல்கிறாய் என திட்டியதாகவும் அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் நாய்க்குத்தி கிராமத்தை சேர்ந்த பூபாலன் தன்னுடைய நண்பர்கள் 20 பேருடன் இருசக்கர வாகனத்தில் ஆயுதங்களுடன் எஸ்.தாதம்பட்டி கிராமத்திற்கு சென்று அங்கிருந்த பொதுமக்களை சராமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அச்சுதன் (26), தினேஷ் (25), வினோத் (27), ராகவன் (23) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்த கிராமத்தினர் திருப்பி தாக்க முற்பட்டபோது வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நாய்குத்தி கிராமத்தை சேர்ந்த பூபாலன், ரமேஷ் (24), ராஜ் குமார் (39), குமார் (41) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஏ.டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன், டி.எஸ்.பி. கரிகால்பாரிசங்கர் ஆகியோர் அங்கு விரைந்து நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மீண்டும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com